Monday, November 21, 2011
திருக்குறளில் கொல்லாமை அறம்
திருக்குறளில் கொல்லாமை அறம்
தமிழ் இலக்கியத்தில் ஒப்பில்லா மணியாய் திகழ்வது, திருக்குறளாம்.
“Books are the reflection of the society” என்பார்கள். நூல் ஆக்குவோர்
தாங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ தாங்கள் வாழ்ந்த காலத்தின் சமூக அமைப்புகளையும், சமூக பண்பாட்டுக் கூறுகளையும் தங்கள் எழுத்தில்
படம் பிடித்துக் காட்டுவார்கள். அங்ஙனமே, திருக்குறளாசிரியரும் அற்றை
நாளில் உள்ள சமூக அமைப்புகளையும், சமூக பழக்க வழக்கங்களையும்
நமக்கு தன் குறள் பாக்களில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
கொல்லாமை அறம்
அகிம்சை அல்லது கொல்லாமை என்ற அறம் திருக்குறளின் அடிநாதம்
எனலாம். கொல்லாமை என்பது கொல்வதின் எதிர்ப் பதம் என்ற கருத்தில்
அமைந்ததன்று. கொல்லாமை என்பது அறங்களின் தொகுப்பு. உடலாலும்,
மனத்தாலும், மொழியாலும் பிறருக்கு (பிற உயிர்களுக்கு) யாதொன்றும்
கெடுதலில்லாது அமைவது அகிம்சை எனப்படும்.
அகிம்சையின் சாரமாக எழுதப்பட்ட அதிகாரங்களாவன,
1. அருளுடைமை
2. புலால் மறுத்தல்
3. தவம்
4. வாய்மை
5. இன்னா செய்யாமை
6. கொல்லாமை
ஆகிய அதிகாரங்களில் அடிநாதமாக திகழ்வது அகிம்சை என்னும் கொல்லாமை
அறமே.
சிலர், இவ்வதிகாரங்கள் துறவறத்தார்க்குச் சொல்லப்பட்டது என்பார்கள்.
துறவற இயலில் கூறப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். இதனால்,
அவ்வதிகாரங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் இல்லறத்தாருக்கு இல்லையென்று
கூறிவிட முடியுமா? இதில், தவம் என்ற அதிகாரம் தவிர்த்து, மற்ற
அதிகாரங்கள் அருளுடைமை, வாய்மை, இன்னா செய்யாமை, புலால்
மறுத்தல் ஆகியவை இல்லறத்தார்க்கும் பொதுவே. பொதுவாக, அதிகாரங்கள் உரையாசிரியர்களால் தொகுக்கப்பட்டது என்பது அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. குறளுக்கு ”தருமர்” உரைதான் முதல் உரை.
இவர் சமணராகவோ அல்லது பெளத்தராகவோ இருக்கலாம். தருமர்
என்ற பெயர் இருசாராருக்கும் உரித்து. எனினும், சமணர் என்று
பெரும்பாலான அறிஞர்கள் கூறுப.
மணக்குடவர்
தற்போது கிடைத்துள்ள உரைகளில் முதல் உரை மணக்குடவர் உரை.
இவர் சமணர் என்பது வெள்ளிடை மலை. ஆயினும், இவர் உரை முழுதும்
கிடைத்தில. முதன் முதல் திரு.வ.உ.சிதம்பரனார் என்பார் உரை கிடைக்காத
உரைகளுக்கு (பரிமேலழகர் உரையைச் சார்ந்து) தன் உரையை எழுதிப்
போந்தார். இதனால் எது, எது மணக்குடவரின் உண்மையான உரை என்பது
இலைமறை காய்மறைதான். (இவற்றை பற்றி வேறொரு கட்டுரையில்
பார்க்கலாம்)
வாய் உபதேசம்
அற்றை நாளில், சமண தரிசனம், பெளத்த தரிசனம், வேத தரிசனம்1 மற்றும்
ஆசிவக தரிசனங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றையும் குறள் பதிவு
செய்திருக்கிறது. பெளத்தம், சமணம் ஒத்த மூலம் கொண்டிருந்தாலும்,
அவற்றுள் வேறுபாடுகள் தெற்றென விளங்கும். அதுபோல, கொல்லாமை
அறம் பெளத்தத்திற்கும், சமணத்திற்கும் பொதுவான அறம் என்றாலும்,
கொல்லாமையால் விளங்கும் புலால் மறுத்தலில் பெளத்தம், சமணத்திலிருந்து வேறுபடுகிறது. எங்ஙனமெனில், பெளத்தர்கள் தங்கள் கைகளில் ஓர்
உயிரையும் கொன்று, அதில் கிடைக்கும் ஊன் உணவினை உண்ண
மாட்டார்கள். ஆனால், பிறர் யாராவது ஓர் உயிரைக் கொன்று ஊன்
உணவினைக் கொடுத்தால் அவற்றை புசிப்பார்கள். அதனால் கொல்லாமை
அறம் என்பது அவர்களுக்கு வெறும் வாய்மொழி உபதேசம் மட்டுமே.
இவற்றையும் குறள் கண்டித்திருக்கிறது.
விலைப்பொருட்டால் வரும் ஊன்
புலால் மறுத்தல் அதிகாரத்தில் வரும் குறள்,
“தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்” – குறள் – 256
மணக்குடவர் உரை:
தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார்
யாரும் இல்லை.
இது கொன்று தின்னாது விலைக்குக் கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை
யென்றார்க்கு, அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.
என்று கூறுவதால், குறளாசிரியர் பெளத்த தரிசனத்தை கடிந்தார் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி.
கொன்றாகும் ஆக்கங் கடை
அவ்வாறே, கொல்லாமை என்னும் அதிகாரத்தில்,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை” – திருக்குறள் – 328
மணக்குடவர் உரை:
நன்மையாகும் ஆக்கம் பெரிதேயாயினும், ஓருயிரைக் கொன்று ஆகின்ற
ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால்,
வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.
என்று வேள்வியின் பொருட்டு இன்னுயிர்களை கொல்வதையும் கூடாது
என்று எடுத்துக் கூறி, குறளாசிரியர் வேத தரிசனத்தையும் கடிந்திருக்கிறார்
என்பது நிதர்சனம்.
முயற்றின்மை இன்மைப் புகுத்தி விடும்
ஆசிவகத் தரிசனத்தை கண்டித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலாக,
ஊழ்க் கொள்கையை நியதிக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் ஆசிவக
தரிசனத்தையும்,
“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்” – குறள் – 620
என்ற 620 ஆவது குறளிலும்,
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்”
என்ற 616 ஆவது குறளிலும் ஆசிவகத் தரிசனத்தைக் கண்டிக்கிறார் நம்
தேவர் பெருமான் (குறளாசிரியர்).
(என்ன முயற்சி செய்தாலும் ஊழிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பதுதான்
ஆசிவக தரிசனத்தில் கூறப்படும் முக்கியக் கோட்பாடு)
ஒன்றாக நல்லது கொல்லாமை
சமணத்தின் முதல் அறம் கொல்லாமை. இரண்டாவதாக சொல்லபடுவது
பொய்யாமை2 என்ற அறம். இதனை குறளாசிரியர்,
“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று”
என்ற 323 ஆவது குறளிலும்,
”தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை”
என்ற 327 ஆவது குறளில் கூறுவதாலும், சமண தரிசனமே
கொல்லாமை அறத்தை3 தங்கள் வேதமாகக் கொண்டிலங்குவதாலும்,
குறளாசிரியர் சமணத் தரிசன கோட்பாடுகளை, எல்லா தரப்பு மக்களும்
உய்யவேண்டி அக்கோட்பாடுகளுக்கு அழகான அணிக்களன்கள் பூட்டி,
நம் அனைவருக்கும் தந்தருளியிருக்கிறார். அவற்றை அணிந்து, ஆன்மப்
பயன் பெறுவோம்!
வாழ்க திருவறம்! வளர்க குறளறம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
=========================================================
குறிப்புகள்:
1. திரிகடுகப் பாடல்: http://banukumar_r.blogspot.com/2011/11/1.html
2. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
கரையால் உணர்வினை அழியார்; அழிதசை
துவ்வார்; விடமென வெவ்வாறும்
புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
புகழார்; குரவரை இகழாரே” – திருக்கலம்பகம்
3. ”நசைகொல்லார் நச்சியார்க்கு என்றும் இளைஞர்
மிசை கொல்லார் வேளாண்மை கொல்லார் – மிசைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார்
என் பெறினும் கொல்லார் இயைந்து – சிறுபஞ்சமூலம் – 48
Thursday, November 17, 2011
சமண வழிபாடு – விளக்கம்
சமண வழிபாடு – விளக்கம்
சமணம் நாத்திகச் சமயம்! சமணர்களுக்கு இறை வழிபாடு இல்லை!
என்பன போன்றக் கருத்துக்கள் சமணத்தின் மீது தொன்றுத் தொட்டு கூறப்பட்டு
வரும் பழிப்புரைகள். அவ்வகையான பழிப்புரைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதா?
அல்லது சமணம் பற்றி அறியாமல் கூறப்பட்டதா என்ற வாதத்திற்குள்
போகாமல் நாம் மேலே செல்வோம். பண்டைத் தமிழகத்தில் கோலோச்சிய
இச்சமயம் இன்று மிக அருகிவிட்டது. தற்போதைய கணக்கின்படி சுமார்
ஒரு இலட்சம் தமிழ்ச் சமணர்களே வாழ்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றும் அவ்வகையான பழிப்புரைகளை
நம்புவதோடு மட்டுமல்லாமல், அவற்றை தங்கள் கருத்திற்கும் ஆதாரமாகவும் கூறிக்கொள்கிறார்கள். சிலர், இவ்வகையான பழிப்புரைகளை கூறுகிறோமே
அவற்றுக்கு ஆதாரம் ஏதேனுமுண்டா என்று ஆராய்ந்துப் பார்ப்பதில்லை.
இன்னும் சிலர், அவ்வகையான பழிப்புரைகளை, சந்தர்ப்பம் கிடைக்கும்
இடங்களில் எல்லாம் வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள்.
இவ்வகையான பழிப்புரைகளை ஒரே வாக்கியத்தின் மூலம் புறம்
தள்ளிவிடலாம். இந்திய வரலாற்றின் ஆவணப்படி (மொஹிஞ்சதாரோ –
ஹரப்பா தவிர்த்து) சமண சிலைகள் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் காணக்கிடைக்கின்றன. சிலைகள் என்றால் வழிபாடு இருந்திருக்கும் என்று சொல்லவேண்டுவதில்லை. :-)(ஆதாரம்: மதுரா அகழ்வாராய்ச்சி1)
தமிழகத்தைப் பொருத்தவரை, இலக்கியங்களில் குறிப்பாக மதுரைக்
காஞ்சி2 என்ற நூலிலும் சமணர்கள் இறைவழிபாடு செய்ததாகக் குறிப்புகள்
இருக்கின்றன.
வழிபாடு
வழி + படு என்பது வழிபாடு ஆகிற்று. வழிபடுதல் என்றால் நாம்
தொழத்தக்கவர்கள் யாரோ, அவர்களை வழிபடுவது. அவர்கள் சென்ற
வழியே அல்லது காட்டிய வழியை நாம் பயனிப்பது என்பது அதன்
நுண்ணியக் கருத்து. சமண வழிபாட்டின் நோக்கமும் அதுவே.
பாத வழிபாடு
பாத வழிபாட்டிலிருந்தே உருவ வழிபாடு தோன்றியது. இந்திய வரலாறு
நமக்குக் காட்டுவதும் அதுவே! சமணம் முழுமுதற் இறைவன் ஒருவனால் படைக்கப்பட்டதல்ல. சமணமும், பெளத்தமும், மனிதனால் உருவாக்கப்பட்ட
சமயங்கள். சமணம் போற்றும் தீர்த்தங்கரர்கள், நம்மை போன்று தாயின்
வயிற்றில் பிறந்து, பின் ஆன்மீயப் பயனத்தில், படி படியாக தங்கள் ஆள்வினை முயற்சிகளினால் இறைநிலை அடைந்தவர்கள். அவர்கள் தேசந்தோறும் திரிந்து
மக்களுக்கு அறிவுரைப் பகர்ந்து, தாங்கள் சென்ற மார்க்கத்தை/வழியை
மற்றவர்களும் உபதேசித்து அருளினார்கள். இதனால் இறைவன் என்ற பதம்
அல்லது சொல் தலைவன் என்றும் முனிவன்3 என்றும் சமணத்தில்
கொள்ளப்படுகிறது. அவர்களின் நினைவாக, மனிதர்களால் செய்து
வழிபட்டதுதான் பாதுகைச்/பாதச் சிற்பங்கள். இவ்வகையான பாத சிற்பங்கள்
இந்திய நாட்டின் முழுமையும் காணலாம்.
வழிபாட்டின் நோக்கமே, பெரியவர்கள்/தலைவர்கள்/சான்றோர்கள் சென்ற பாதையை/வழியை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதே! அஃதாவது,
அவர்கள் வழங்கிய/அருளிய அறக்கோட்பாடுகளை நாமும் பின்பற்ற வேண்டும்
என்பதின் குறியீடே இவ்வழிபாடு.
சாமாயிகம்4 அல்லது அறசிந்தனை
சமண இல்லறத்தார்கள் நாள்தோறும் குறைந்தது ஒரு வேளையாவது
அருக வழிபாடு செய்யவேண்டும். அருகரின் உருவ சிலையை மனதில்
நிறுத்தி, அவர் உபதேசித்தருளிய அறகோட்பாடுகளை நினைத்து அற வழிப்படல்
வேண்டும் என்பதுதான் சமணர்கள் கூறும் இறைவழிபாட்டின் நோக்கம்.
கதை கேளு
(எம் பெரியவர் திருவாளர்.வி.சி.ஸ்ரீபால் அவர்களின் கதையை இங்கு
எடுத்துக்காட்டி இருக்கிறேன். அன்னாருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்)
சமண இறைவழிபாட்டிற்கும், மற்ற சமயங்களின் இறைவழிப்பாட்டிற்கு
நுண்ணிய வேறுபாடுண்டு. அவற்றையும் ஈண்டு ஒரு கதையின் மூலம்
பார்ப்போம்.
ஒர் ஊரில், ஒரு பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்
உண்மையின் உறைவிடம்; நேர்மையின் அடையாளம்; தமிழ்ப் பண்டிதர்;
புலமையில் பேரறிஞர். அப்பள்ளியில், மாணவர்களால் மிக விரும்பப்படுபவரும்
அவரே. மாணவர்கள் அவரின் வகுப்பில் மிக ஈடுபாட்டுடனும், மிக ஆர்வமுடனும்
பாடம் கேட்பார்கள். ஆனால், பரிட்சையில் அவ்வாசிரியரின் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை! ஏன்?
அதே ஊரில் உள்ள வேறொரு பள்ளியில் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார்.
அவரும் முன்னர் சொன்ன ஆசிரியர் போல் அனைத்து குணங்களும் நிரம்ப
பெற்றவர். அவரும் மாணவர்களால் விரும்பப்படுபவர். மாணவர்கள், இவரின்
வகுப்பு எப்போது வரும் என்று ஆர்வமாகக் காத்திருப்பார்கள். ஆனால்,
இவ்வாசிரியரின் மாணவர்கள் அனைவரும் பரிட்சையில் தேர்ச்சியடைந்தார்கள்!
எப்படி?!!
முதலில் சொன்ன மாணவர்கள் பரிட்சையில் ஆசிரியரின் குணங்களையும்,
அவரின் ஆற்றல்களை போற்றி, புகழ்ந்து எழுதினார்கள். ;-)
ஆனால், பின் சொன்ன மாணவர்களோ, பரிட்சையில் தங்கள் ஆசிரியர் கற்றுக்
கொடுத்த பாடங்களைக் கொண்டு பதில் எழுதினார்கள்!! தேர்ச்சியும் பெற்றார்கள்.
முன்னது மற்ற சமயங்களின் வழிபாடு!
பின்னது சமண சமயம் போதிக்கும் வழிபாடு!
நுண்ணியதாக இருந்தாலும், அவைக் காட்டும் கோட்பாட்டில் எத்தனை
வித்தியாசங்கள்!!
சமணம், வழிபாட்டில் வியாபாரம் நோக்கம் இருக்கக் கூடாது என்று சொல்கிறது. அஃதாவது, தனக்கு ஒன்று வேண்டும் என்று இறைவனிடம் முறையிடுவதை அது
அற வியாபாரம் என்று சொல்கிறது. ”இத்தை” வியாபாரம் என்று சொல்லாமல்
வேறென்ன வென்று அழைப்பது? சிந்தியுங்கள்!
குறளாசிரியரான தேவர் பெருமான் இறைத் தன்மைகளில் ஒன்றாக
“வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற குணத்தைக் குறித்திருக்கிறார்.
வேண்டுதல் வேண்டாமை இலான் என்றால் “விருப்பு – வெறுப்பு” என்ற
பேதம் அற்றவர் என்றுப் பொருள். அவரை வணங்கினால் நமக்கு
நன்மைகளையும், நம்முடையத் துன்பங்களையும் போக்குவார் என்று
நினைத்து வணங்குவதும், அவரைத் தூற்றினால் நமக்கு கெடுதல்
செய்வார் என்று நினைப்பதும் “தேவ மூடமாம்5”.
வேண்டுதல் வேண்டாமை இலான்
இங்கு அன்பர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்? எழவேண்டுமே!! ;-)
குறளாசிரியர் குறள்,
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல” – குறள் – 4
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனான இறைவனை வணங்கினால் எந்த
துன்பமும் வராது என்று சொல்கிறாரே என்று கேட்டீர்களானால், பதில் அதிலேயேயிருக்கிறது.
வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கொண்டவன் இறைவன் என்று
கூறும் குறளாசிரியர், அவரை வணங்கினால் நம்முடையத் துன்பங்களை
இல்லாமல் செய்துவிடுவார் என்று முரணாக எழுதுவாரா? சிந்தனை செய்
மனமே!
அக்குறளுக்கு அவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது!
அக்குறளுக்கு பொருள்தான் என்ன?
வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன் காட்டிய மார்க்கத்தில் அல்லது
அறவழியில் நடந்தால் நாமும் அவர் சென்றடைந்துக் காட்டிய வீடுபேற்றை
அடையலாம் என்பதுதான் அக்குறளின் உட்பொருள்.
குறளின் விசேஷமே அதுதான். குறளறம் எல்லா தரப்பு மக்களுக்கும்
கூறப்பட்டது. மக்கள் எல்லா நிலைகளிலும் இருப்பர். அவரவர் நிலைகளில்
(ஆன்மிகப் பயணத்தில்) புரியும் வண்ணம் குறளறம் கூறப்பட்டிருக்கிறது.
விளிம்பு நிலை மாந்தர்களுக்கும் குறளறம் பயன்படவேண்டுமல்லவா!
இன்னும் சந்தேகம் தெளியாதவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மேலும் ஒரு
காட்டுக் கொடுத்தமைவோம்.
நிலமிசை நீடுவாழ்வர்
திருக்குறளின் 3ஆவது பாட்டு,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
மலர்மேல் நடந்தவனது அடிகளை சேர்ந்தவர்கள் நிலத்தின்/பூமியின் கண் நீடு
வாழ்வார்கள் என்று பொருள் எடுத்துக் கொண்டால்; பிறந்தவர்கள் இறப்பது
நிச்சயம் தானே. அது தானே உலக நடப்பு. அப்படியிருக்குபோது குறளாசிரியர்
நிலத்தின் கண் நீடு வாழலாம் என்கிறாரே. அவருக்கு உலக நடப்பு தெரியாமல் எழுதிவிட்டாரா? அவ்வாறுக் கூறுதல் கூடாது.
விளிம்பு நிலை மாந்தர்கள் அவ்வாறு பொருள் கொள்ளலாம். ஆனால்,
விளிம்பு நிலையிலிருந்து உயர்ந்தவர்கள் அவ்வாறு பொருள் கொள்ள
மாட்டார்கள்.
பிறந்தவர்கள் இறந்தே ஆகவேண்டும் என்ற வகையில் பார்த்தால், இங்கே
நிலமிசை நீடுவாழ்வார் என்பது மலர்மேல் நடந்தவனை வழிபட்டால் அல்லது
அவர் அருளிய அறவழிபடி நடந்தால், சம்சார சுழற்சியில் இருந்து விடுபட்டு,
நிலம்-பூமியின் உச்சியில் (வீடுபேறடைந்த உயிர்கள் தங்கும் இடம்) நீடு
வாழலாம் என்பதுதான் அக்குறளின் நுண்ணியப் பொருள்! என்னை?
இரா.பானுகுமார்,
சென்னை
==============================================
குறிப்புகள்:
1. "Historian and renowned archaeologist Fuhrer narrates the antiquity of Jainism at Mathura like this: "This stupa is so ancient that till writing of the inscription the original description of the stupa has gone out of local populace's memory." Innumerable Jain sculptures discovered from several sites at Mathura prove beyond doubt that Jainism remained prevalent in this region for many centuries and also got patronage of many of the contemporary successive rulers of this part of the world."
( http://en.brajdiscovery.org/index.php?title=Mathura )
( http://www.cs.colostate.edu/~malaiya/mathura.jpg )
2. மதுரை காஞ்சி:
வண்டுபடப் பழகிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலனுள் தாமுழுதுணரும்
சான்ற கொள்கைச் சாயா வாழ்க்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
(அடிகள் : 475-482)
........................... .................
.................... வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
(அடிகள் : 484-488)
( http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713112.htm )
3. மயிலையாரின் "ஆய்வுக் கட்டுரைகள்" - மூன்றாம் தொகுதி - மக்கள்
வெளியீடு
( http://www.treasurehouseofagathiyar.net/29800/29834.htm )
4. http://www.treasurehouseofagathiyar.net/37700/37787.htm
5. வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு - அருங்கலச் செப்பு - பாடல் - 31
சமணம் நாத்திகச் சமயம்! சமணர்களுக்கு இறை வழிபாடு இல்லை!
என்பன போன்றக் கருத்துக்கள் சமணத்தின் மீது தொன்றுத் தொட்டு கூறப்பட்டு
வரும் பழிப்புரைகள். அவ்வகையான பழிப்புரைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதா?
அல்லது சமணம் பற்றி அறியாமல் கூறப்பட்டதா என்ற வாதத்திற்குள்
போகாமல் நாம் மேலே செல்வோம். பண்டைத் தமிழகத்தில் கோலோச்சிய
இச்சமயம் இன்று மிக அருகிவிட்டது. தற்போதைய கணக்கின்படி சுமார்
ஒரு இலட்சம் தமிழ்ச் சமணர்களே வாழ்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றும் அவ்வகையான பழிப்புரைகளை
நம்புவதோடு மட்டுமல்லாமல், அவற்றை தங்கள் கருத்திற்கும் ஆதாரமாகவும் கூறிக்கொள்கிறார்கள். சிலர், இவ்வகையான பழிப்புரைகளை கூறுகிறோமே
அவற்றுக்கு ஆதாரம் ஏதேனுமுண்டா என்று ஆராய்ந்துப் பார்ப்பதில்லை.
இன்னும் சிலர், அவ்வகையான பழிப்புரைகளை, சந்தர்ப்பம் கிடைக்கும்
இடங்களில் எல்லாம் வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள்.
இவ்வகையான பழிப்புரைகளை ஒரே வாக்கியத்தின் மூலம் புறம்
தள்ளிவிடலாம். இந்திய வரலாற்றின் ஆவணப்படி (மொஹிஞ்சதாரோ –
ஹரப்பா தவிர்த்து) சமண சிலைகள் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் காணக்கிடைக்கின்றன. சிலைகள் என்றால் வழிபாடு இருந்திருக்கும் என்று சொல்லவேண்டுவதில்லை. :-)(ஆதாரம்: மதுரா அகழ்வாராய்ச்சி1)
தமிழகத்தைப் பொருத்தவரை, இலக்கியங்களில் குறிப்பாக மதுரைக்
காஞ்சி2 என்ற நூலிலும் சமணர்கள் இறைவழிபாடு செய்ததாகக் குறிப்புகள்
இருக்கின்றன.
வழிபாடு
வழி + படு என்பது வழிபாடு ஆகிற்று. வழிபடுதல் என்றால் நாம்
தொழத்தக்கவர்கள் யாரோ, அவர்களை வழிபடுவது. அவர்கள் சென்ற
வழியே அல்லது காட்டிய வழியை நாம் பயனிப்பது என்பது அதன்
நுண்ணியக் கருத்து. சமண வழிபாட்டின் நோக்கமும் அதுவே.
பாத வழிபாடு
பாத வழிபாட்டிலிருந்தே உருவ வழிபாடு தோன்றியது. இந்திய வரலாறு
நமக்குக் காட்டுவதும் அதுவே! சமணம் முழுமுதற் இறைவன் ஒருவனால் படைக்கப்பட்டதல்ல. சமணமும், பெளத்தமும், மனிதனால் உருவாக்கப்பட்ட
சமயங்கள். சமணம் போற்றும் தீர்த்தங்கரர்கள், நம்மை போன்று தாயின்
வயிற்றில் பிறந்து, பின் ஆன்மீயப் பயனத்தில், படி படியாக தங்கள் ஆள்வினை முயற்சிகளினால் இறைநிலை அடைந்தவர்கள். அவர்கள் தேசந்தோறும் திரிந்து
மக்களுக்கு அறிவுரைப் பகர்ந்து, தாங்கள் சென்ற மார்க்கத்தை/வழியை
மற்றவர்களும் உபதேசித்து அருளினார்கள். இதனால் இறைவன் என்ற பதம்
அல்லது சொல் தலைவன் என்றும் முனிவன்3 என்றும் சமணத்தில்
கொள்ளப்படுகிறது. அவர்களின் நினைவாக, மனிதர்களால் செய்து
வழிபட்டதுதான் பாதுகைச்/பாதச் சிற்பங்கள். இவ்வகையான பாத சிற்பங்கள்
இந்திய நாட்டின் முழுமையும் காணலாம்.
வழிபாட்டின் நோக்கமே, பெரியவர்கள்/தலைவர்கள்/சான்றோர்கள் சென்ற பாதையை/வழியை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதே! அஃதாவது,
அவர்கள் வழங்கிய/அருளிய அறக்கோட்பாடுகளை நாமும் பின்பற்ற வேண்டும்
என்பதின் குறியீடே இவ்வழிபாடு.
சாமாயிகம்4 அல்லது அறசிந்தனை
சமண இல்லறத்தார்கள் நாள்தோறும் குறைந்தது ஒரு வேளையாவது
அருக வழிபாடு செய்யவேண்டும். அருகரின் உருவ சிலையை மனதில்
நிறுத்தி, அவர் உபதேசித்தருளிய அறகோட்பாடுகளை நினைத்து அற வழிப்படல்
வேண்டும் என்பதுதான் சமணர்கள் கூறும் இறைவழிபாட்டின் நோக்கம்.
கதை கேளு
(எம் பெரியவர் திருவாளர்.வி.சி.ஸ்ரீபால் அவர்களின் கதையை இங்கு
எடுத்துக்காட்டி இருக்கிறேன். அன்னாருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்)
சமண இறைவழிபாட்டிற்கும், மற்ற சமயங்களின் இறைவழிப்பாட்டிற்கு
நுண்ணிய வேறுபாடுண்டு. அவற்றையும் ஈண்டு ஒரு கதையின் மூலம்
பார்ப்போம்.
ஒர் ஊரில், ஒரு பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்
உண்மையின் உறைவிடம்; நேர்மையின் அடையாளம்; தமிழ்ப் பண்டிதர்;
புலமையில் பேரறிஞர். அப்பள்ளியில், மாணவர்களால் மிக விரும்பப்படுபவரும்
அவரே. மாணவர்கள் அவரின் வகுப்பில் மிக ஈடுபாட்டுடனும், மிக ஆர்வமுடனும்
பாடம் கேட்பார்கள். ஆனால், பரிட்சையில் அவ்வாசிரியரின் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை! ஏன்?
அதே ஊரில் உள்ள வேறொரு பள்ளியில் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார்.
அவரும் முன்னர் சொன்ன ஆசிரியர் போல் அனைத்து குணங்களும் நிரம்ப
பெற்றவர். அவரும் மாணவர்களால் விரும்பப்படுபவர். மாணவர்கள், இவரின்
வகுப்பு எப்போது வரும் என்று ஆர்வமாகக் காத்திருப்பார்கள். ஆனால்,
இவ்வாசிரியரின் மாணவர்கள் அனைவரும் பரிட்சையில் தேர்ச்சியடைந்தார்கள்!
எப்படி?!!
முதலில் சொன்ன மாணவர்கள் பரிட்சையில் ஆசிரியரின் குணங்களையும்,
அவரின் ஆற்றல்களை போற்றி, புகழ்ந்து எழுதினார்கள். ;-)
ஆனால், பின் சொன்ன மாணவர்களோ, பரிட்சையில் தங்கள் ஆசிரியர் கற்றுக்
கொடுத்த பாடங்களைக் கொண்டு பதில் எழுதினார்கள்!! தேர்ச்சியும் பெற்றார்கள்.
முன்னது மற்ற சமயங்களின் வழிபாடு!
பின்னது சமண சமயம் போதிக்கும் வழிபாடு!
நுண்ணியதாக இருந்தாலும், அவைக் காட்டும் கோட்பாட்டில் எத்தனை
வித்தியாசங்கள்!!
சமணம், வழிபாட்டில் வியாபாரம் நோக்கம் இருக்கக் கூடாது என்று சொல்கிறது. அஃதாவது, தனக்கு ஒன்று வேண்டும் என்று இறைவனிடம் முறையிடுவதை அது
அற வியாபாரம் என்று சொல்கிறது. ”இத்தை” வியாபாரம் என்று சொல்லாமல்
வேறென்ன வென்று அழைப்பது? சிந்தியுங்கள்!
குறளாசிரியரான தேவர் பெருமான் இறைத் தன்மைகளில் ஒன்றாக
“வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற குணத்தைக் குறித்திருக்கிறார்.
வேண்டுதல் வேண்டாமை இலான் என்றால் “விருப்பு – வெறுப்பு” என்ற
பேதம் அற்றவர் என்றுப் பொருள். அவரை வணங்கினால் நமக்கு
நன்மைகளையும், நம்முடையத் துன்பங்களையும் போக்குவார் என்று
நினைத்து வணங்குவதும், அவரைத் தூற்றினால் நமக்கு கெடுதல்
செய்வார் என்று நினைப்பதும் “தேவ மூடமாம்5”.
வேண்டுதல் வேண்டாமை இலான்
இங்கு அன்பர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்? எழவேண்டுமே!! ;-)
குறளாசிரியர் குறள்,
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல” – குறள் – 4
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனான இறைவனை வணங்கினால் எந்த
துன்பமும் வராது என்று சொல்கிறாரே என்று கேட்டீர்களானால், பதில் அதிலேயேயிருக்கிறது.
வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கொண்டவன் இறைவன் என்று
கூறும் குறளாசிரியர், அவரை வணங்கினால் நம்முடையத் துன்பங்களை
இல்லாமல் செய்துவிடுவார் என்று முரணாக எழுதுவாரா? சிந்தனை செய்
மனமே!
அக்குறளுக்கு அவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது!
அக்குறளுக்கு பொருள்தான் என்ன?
வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன் காட்டிய மார்க்கத்தில் அல்லது
அறவழியில் நடந்தால் நாமும் அவர் சென்றடைந்துக் காட்டிய வீடுபேற்றை
அடையலாம் என்பதுதான் அக்குறளின் உட்பொருள்.
குறளின் விசேஷமே அதுதான். குறளறம் எல்லா தரப்பு மக்களுக்கும்
கூறப்பட்டது. மக்கள் எல்லா நிலைகளிலும் இருப்பர். அவரவர் நிலைகளில்
(ஆன்மிகப் பயணத்தில்) புரியும் வண்ணம் குறளறம் கூறப்பட்டிருக்கிறது.
விளிம்பு நிலை மாந்தர்களுக்கும் குறளறம் பயன்படவேண்டுமல்லவா!
இன்னும் சந்தேகம் தெளியாதவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மேலும் ஒரு
காட்டுக் கொடுத்தமைவோம்.
நிலமிசை நீடுவாழ்வர்
திருக்குறளின் 3ஆவது பாட்டு,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
மலர்மேல் நடந்தவனது அடிகளை சேர்ந்தவர்கள் நிலத்தின்/பூமியின் கண் நீடு
வாழ்வார்கள் என்று பொருள் எடுத்துக் கொண்டால்; பிறந்தவர்கள் இறப்பது
நிச்சயம் தானே. அது தானே உலக நடப்பு. அப்படியிருக்குபோது குறளாசிரியர்
நிலத்தின் கண் நீடு வாழலாம் என்கிறாரே. அவருக்கு உலக நடப்பு தெரியாமல் எழுதிவிட்டாரா? அவ்வாறுக் கூறுதல் கூடாது.
விளிம்பு நிலை மாந்தர்கள் அவ்வாறு பொருள் கொள்ளலாம். ஆனால்,
விளிம்பு நிலையிலிருந்து உயர்ந்தவர்கள் அவ்வாறு பொருள் கொள்ள
மாட்டார்கள்.
பிறந்தவர்கள் இறந்தே ஆகவேண்டும் என்ற வகையில் பார்த்தால், இங்கே
நிலமிசை நீடுவாழ்வார் என்பது மலர்மேல் நடந்தவனை வழிபட்டால் அல்லது
அவர் அருளிய அறவழிபடி நடந்தால், சம்சார சுழற்சியில் இருந்து விடுபட்டு,
நிலம்-பூமியின் உச்சியில் (வீடுபேறடைந்த உயிர்கள் தங்கும் இடம்) நீடு
வாழலாம் என்பதுதான் அக்குறளின் நுண்ணியப் பொருள்! என்னை?
இரா.பானுகுமார்,
சென்னை
==============================================
குறிப்புகள்:
1. "Historian and renowned archaeologist Fuhrer narrates the antiquity of Jainism at Mathura like this: "This stupa is so ancient that till writing of the inscription the original description of the stupa has gone out of local populace's memory." Innumerable Jain sculptures discovered from several sites at Mathura prove beyond doubt that Jainism remained prevalent in this region for many centuries and also got patronage of many of the contemporary successive rulers of this part of the world."
( http://en.brajdiscovery.org/index.php?title=Mathura )
( http://www.cs.colostate.edu/~malaiya/mathura.jpg )
2. மதுரை காஞ்சி:
வண்டுபடப் பழகிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலனுள் தாமுழுதுணரும்
சான்ற கொள்கைச் சாயா வாழ்க்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
(அடிகள் : 475-482)
........................... .................
.................... வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
(அடிகள் : 484-488)
( http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713112.htm )
3. மயிலையாரின் "ஆய்வுக் கட்டுரைகள்" - மூன்றாம் தொகுதி - மக்கள்
வெளியீடு
( http://www.treasurehouseofagathiyar.net/29800/29834.htm )
4. http://www.treasurehouseofagathiyar.net/37700/37787.htm
5. வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு - அருங்கலச் செப்பு - பாடல் - 31
Sunday, November 06, 2011
பகவன்
பகவன்
- காஞ்சிபுரம். தி. அனந்தநாத நயினார்
பக என்பதற்கு ‘ஞானம்’ என்பது பொருளாம். அதனடியாக உண்டான ‘பகவன்’
என்பதற்கு ‘ஞானமுள்ளவன்’ என்று அர்த்தமாகிறது. எனினும் சாமானியமாக
ஒருவனுக்கு ஞானமிருப்பதினாலேயே அவனைப் ‘பகவன்’ என்று சொல்லிவிட
முடியாது. அப்படிச் சொல்லப் புகுந்தால் ஞானமுள்ள எல்லா ஜீவன்களையுமே
‘பகவன்’ என்று சொல்ல வேண்டும், அவ்வாறு கொள்ளுதல் கூடாது.
ஆதலின், ‘பகவன்’ என்ற நாமதேயத்தை, இதர ஜீவன்களைக் காட்டிலும்
விசேஷ ஞானமுள்ள சர்வக்ஞ பரமாத்மனுக்குப் பெரியோர்கள்
உபயோகித்திருக்கிறார்கள். ஸ்ரீ ஆதீஸ்வரஸ்வாமி சர்வக்ஞனாக இருப்பதால்,
‘பகவன்’ என்ற பெயர் அந்த ஸ்வாமிக்குப் பொருத்தமானதாக இருக்கிறது.
பக்ஷபாதமில்லாமல் நாம் உண்மையை விளக்கும் உயர்ந்த பல
சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்ப்போமானால், ராக, த்வேஷ, மோக
காமம், வெகுளி, மயக்கம்) ஜன்ம, மரண முதலான தோஷங்களுக்கு
ஆதீனனாகிய ஜீவன் ஒருபோதும் சர்வக்ஞனாக இருக்க முடியாதென்பது
நமக்கு விளக்கமாகத் தெரியவரும். அங்ங்னமிருக்க மயக்க சாஸ்திரங்கள்
மேற்சொன்ன ராக த்வேஷ மோக முதலான விகாரங்களுக்குள்ள
ஜீவன்களைக் கூட சர்வக்ஞனென்று சொல்லுகின்றன; ஆனால், தத்துவ
போதமுள்ள ஞானிகள் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆகையால்
ராக த்வேஷ மோக முதலான விகாரங்களின்று சம்பூர்ணமாக நீங்கியிருக்கிற
பரமாத்மனே சர்வக்ஞனாவன். அதாவது ‘பகவன்’ என்ற
திருநாமத்திற்குரியவனாவன்.
ஸ்ரீ ஆதி தீர்த்தங்கரஸ்வாமி மேற்சொன்ன சகல விகாரங்களினின்றும்
நீங்கியிருப்பவன் என்பதும், அதனால் சர்வக்ஞனென்பதும் ஜைந சமய
சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்தால் நன்கு விளங்கும். இந்த நியாயம்
பற்றி ஆதிநாத ஸ்வாமியையே ‘பகவன்’ என்று திருக்குறள் ஆசிரியர்
கூறியிருக்கின்றார்.
இனி, ‘பக’ சப்தத்திற்கு ‘யஸஸ்’ என்ற மற்றொரு அர்த்தம் இருப்பதால்;
இதன்படி , பக்வன் என்பதற்கு, யஸஸ்ஸுடையவன் என்று அர்த்தமாகும்;
ஆதலின், இப்பெயர் மூன்று லோகங்களிலேயும் வியாபித்திருக்கும் ‘யஸஸ்’
ஸை அடைந்தவராகிய ஸ்ரீ ஆதீஸ்வரஸ்வாமிக்கே தகும்.
ஸ்ரீ ஆதிபகவான், லோகோத்தாரணத்துக்காகச் சமவசரண விராஜமானராக
விருந்தபோது, மூவுலகங்களிலுமுள்ள பவ்விய பிராணிகள் அந்தச்
சமவசரணத்துக்கு வந்து, பூர்ண சந்திர மண்டலத்தைத் தாராகணங்கள்
சுற்றியிருப்பதைப் பொள் சுவாமியைச் சுற்றிலும் பக்தி வணக்கத்தோடு
சூழ்ந்து அவரது தர்மோபதேசமென்னும் அமிர்தபானத்தைச் செய்து
அஜராமரத்வத்தை (மூப்பு, சாக்காடு) அகற்றக் கூடிய ஒழுக்கத்தை
சம்பாதித்துத் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிப் போய்
ஆங்காங்குப் பகவந்தனது ‘யஸஸ்ஸை’க் கொண்டாடினார்கள்.
ஆகையால் ஆதி பகவனது திவ்ய ‘யஸஸ்’ மூவுலகங்களிலும்
வியாபித்தது. இப்படி லோகோத்தர ‘யஸஸ்ஸை’ அடைந்த
ஆதீஸ்வர ஸ்வாமியானவர் ‘பகவன்’ என்று மஹரிஷிகளால்
ஸ்துதிக்கப் பட்டிருக்கிறார்.
மேற் கூறியபடி பலரும் பகவானைச் சூழ்ந்து கொண்டாடினார்கள் என்பதை, ”ஆதீஸ்வரஸ்வாமியின் சமவசரணத்தில் பன்னிரெண்டு விதமான கணங்கள்
திவ்யோப தேசத்தைக் கேட்கக் கூடினார்கள்” என்று மகாபுராண சுலோகம்
விளக்கும்.
பன்னிரெண்டு வித கூட்டங்களாகக் கூடியிருந்த மூன்று லோகங்களிலுமுள்ள
பவ்விய பிராணிகள் இந்த மூன்று லோகங்களிலும் சுவாமியின் லோகாதி
சாயியான யஸஸ்ஸைக் கொண்டாடினதினாலும், அந்த யஸஸ்ஸே, ‘பக’
என்று சொல்லப்படுவதாலும் அந்த யஸஸ்ஸக்குப் பாத்திரராகிய ஸ்ரீ ஆதி
தீர்த்தங்கரரே ‘பகவன்’ என்று சொல்லப் படுகிறார்.
இனி, ‘பக’ என்பதற்கு ‘மாஹாத்மயம்’ என்ற அர்த்தமும் இருப்பதால் ஸ்ரீ
ஆதி தீர்த்தங்கரர் என்னும் ஆதிபகவன் ஸ்வபாவாதிசயம் பத்து,
கர்மக்ஷயாதிசயம் பத்து, தெய்வீகாதிசயம் பதினான்கு ஆகிய இந்த
முப்பத்திநான்கு அதிசயங்கள் தாமே தோன்றிய மாஹாத்மய
முடையவராதலால் அந்த வகையிலும், ‘பகவன்’ என்ற நாமம்
அவர்க்கே தகும்.
இன்னும், ‘பக’ என்பதற்கு ‘முத்தி’ என்ற அர்த்தமுமிருப்பதால், ‘பகவன்’
என்பதற்கு ‘முக்திக்குரியவன்’ என்று பொருளாம். ஸ்ரீ ஆதிநாதபகவான்
‘முத்தி’யை அடைந்திருகின்றார்; பிறருக்கும் மோக்ஷ ஸ்வரூபத்தை உபதேசித்திருக்கின்றார்; இவர் அடைந்ததும், பிறருக்குபதேசிக்கப்பட்டதுமான
முத்தியே சரியானது. இதனை “நூற்றுக்கணக்கான கல்பங்கள் கழிந்து
போனாலும் மூவுலகத்தையும் பிரமிக்கச் செய்யும் உத்பாதங்கள்
உண்டானாலும் மூத்த ஜீவன்களிடத்தில் எவ்விதமான விகாரமும்
உண்டாவதில்லை” என்று மகாபுராணச் சுலோகம் விளக்கும்.
அநேக இதர மதக் கிரந்தங்களில் முத்தியடைந்தவர்கள் ஒரு காலத்தில்
மறுபடியும் சம்ஸாராவஸ்த்தைக்கு வருவார்களென்பது சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ஆதிநாத பகவந்தன் அடைந்ததும், பிறருக்குபதேசித்ததுமான ‘முத்தி’
யானது, பிறவிக் கிடமில்லாததாயும் சர்வோத் கிருஷ்டமானதாயுமிருக்கின்றது. இப்பேர்ப்பட்ட முத்தியை அவர் அடைந்திருப்பதால் ‘பகவன்’ என்ற
பவித்ர நாமத்திற்கு யோக்கியமானவர் அவரேயாவர்.
பின்னும், ‘பக’ என்ற பதத்திற்கு “ஐஸ்வரிய’ மென்ற அர்த்தமுமிருப்பதால்,
‘பகவன்’ என்பதற்கு “ஐஸ்வரியமுள்ளவன்’ என்றும் பொருளாம். ஆதிநாத
சுவாமியின் அவதார முதல் கைவல்ய பரியந்தம் இவ்வுலகின் சகல
ஐஸ்வரியங்களும் மேல்படி ஸ்வாமியின் சரணாரவிந்தங்களில் இருப்பனவாகத் தெரிகின்றன. ஆத்ம சம்பத்தும் மேற்சொன்ன விஷயங்களினாலும்
இப்புத்தகத்தில் விளக்கிய இதர விஷயங்களாலும் அவரிடத்தில்
அமைந்திருக்கின்றது என்பது விளங்கும். இப்படி அசாதரணமாகிய
ஐஹிக பாரமார்த்திக (இகபரலோக) சம்பத்துக்களுக்கு ஸ்வாமி
உடையவராதலால், ‘பகவன்’ என்ற பெயர் அவர்க்கே தகும்.
மேலும், ‘பக’ என்பதற்கு ‘வீரிய’மென்ற அர்த்தமிருப்பதால், ‘பகவன்’
என்பதற்கு, “வீரியமுள்ளவன்” என்றும் பொருளாம். ஆத்ம பலமே
வீரியமென்று சொல்லப்படும். சம்ஸாரத்தில் சகல பிராணிகளுக்கும்
ஜன்ம மரண துக்கங்களுக்குக் காரணமாயிருக்கின்ற கர்மம்க்களைச்
சம்பூர்ணமாகச் சமஹரித்துத் கைவல்யத்தை அடைந்ததான ஆத்ம
பலத்தை சுவாமி அடைந்திருப்பதாலும் மூவுலகங்களிலும் இதரர்களுக்கு
அலப்பியமான (கிடைக்கத்தகாதது) சகல சம்பத்துக்களும் இந்த ஆதி
தீர்த்தங்கரருக்கிருந்தும் இவர் அவைகளைச் சம்பூர்ணமாகத் தியாகம்
செய்து பரம வைராக்கியத்தை அடைந்ததினாலும், ‘பகவன்’ என்ற
பெயருக்கிவரே உரியவராவர்.
இன்னும் ‘பக’ என்பதற்கு தர்மம் என்ற அர்த்தமிருப்பதால் ‘பகவன்’
என்பதற்கு “தர்மத்திற்குரியவன்” என்றும் பொருளாம். ஆதிநாத சுவாமி
தாமே தர்ம மூர்த்தியாக இருந்து உலகத்திற்கு அஹிம்ஸை முதலான
அநேக தர்மத்தைப் போதித்திருக்கின்றார். ஆதலின் இந்த வகையிலும்
‘பகவன்’ என்ற பெயர் அவருக்கே உரியதாகும்.
இவற்றை எல்லாம் நன்கு ஆராய்வோர்ம் திருக்குறளாசிரியர் (ஆதி)
பகவன் என்ற சொல்லால் அருகக் கடவுளையே குறிப்பிட்டு வணங்கி
இருக்கிறார் என்பதை ஐயமற உணர்ந்துக் கொள்ளலாம்.
சுபம்!
Friday, November 04, 2011
திரிகடுகக் குறிப்பு - 1
திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திரிகடுகம். அந்நூலின் 36ஆவது பாட்டு,
ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு – திரிகடுகம் – 36
http://www.tamilvu.org/slet/l2200/l2200uri.jsp?song_no=36&book_id=43&head_id=43&sub_id=1054
(இ-ள்.) ஊன் உண்டு - ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு - உயிர்களிடத்தில், அருள் உடையேம் - தயவுடையோம், என்பானும் - என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி - தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் - ஊழ் (எல்லாம்) செய்யும், என்பானும் - என்கிறவனும்; காமுறு - (ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய) விரும்புகின்ற, வேள்வியில் - யாகத்தில், கொல்வானும் - (ஓருயிரைக்) கொலை செய்வானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், தாம் கண்ட ஆறு - தாங்கள் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாங்கள் அறிந்தவராவர்; (எ-று.)
(க-ரை.) தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று
தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம்
விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப்
பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின்
உண்மை யுணராதவர் செய்கைகளாம்.
உயிர்கட்கு : உருபு மயக்கம். உடன்பாடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
வினை - ஊழ்; முன்வினைப்பயன் ஒருவன் தனக்குள் தானொன்றைக்
கருதும்போது தன்னைத் தன்மைப்பன்மையாக வைத்துக் கூறுதல்
மரபாதலால் உடையேம் என்பது வழாநிலை. காமுறு வேள்வியாவது
- தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம்.
அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை
உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது.
ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது.
=====================================
என் குறிப்பு:
1.”தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு
உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வது” – பெளத்த தர்சனம்
2.”எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி
இருப்பதும்” – ஆசிவக தர்சனம்
3.”இம்மைப் பயன் கருதி வேள்விகளில் சில சடங்கு செய்து உயிரைக்
கொல்வதும்” – வேத தர்சனம்
மேலே கூறிய மூன்று தரிசனங்களை மேற்கொண்டவர்கள், நூலின்
உண்மையை உணராதவர்கள் என்பது பாடம்.
இரா.பானுகுமார்,
சென்னை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திரிகடுகம். அந்நூலின் 36ஆவது பாட்டு,
ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு – திரிகடுகம் – 36
http://www.tamilvu.org/slet/l2200/l2200uri.jsp?song_no=36&book_id=43&head_id=43&sub_id=1054
(இ-ள்.) ஊன் உண்டு - ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு - உயிர்களிடத்தில், அருள் உடையேம் - தயவுடையோம், என்பானும் - என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி - தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் - ஊழ் (எல்லாம்) செய்யும், என்பானும் - என்கிறவனும்; காமுறு - (ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய) விரும்புகின்ற, வேள்வியில் - யாகத்தில், கொல்வானும் - (ஓருயிரைக்) கொலை செய்வானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், தாம் கண்ட ஆறு - தாங்கள் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாங்கள் அறிந்தவராவர்; (எ-று.)
(க-ரை.) தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று
தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம்
விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப்
பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின்
உண்மை யுணராதவர் செய்கைகளாம்.
உயிர்கட்கு : உருபு மயக்கம். உடன்பாடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
வினை - ஊழ்; முன்வினைப்பயன் ஒருவன் தனக்குள் தானொன்றைக்
கருதும்போது தன்னைத் தன்மைப்பன்மையாக வைத்துக் கூறுதல்
மரபாதலால் உடையேம் என்பது வழாநிலை. காமுறு வேள்வியாவது
- தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம்.
அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை
உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது.
ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது.
=====================================
என் குறிப்பு:
1.”தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு
உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வது” – பெளத்த தர்சனம்
2.”எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி
இருப்பதும்” – ஆசிவக தர்சனம்
3.”இம்மைப் பயன் கருதி வேள்விகளில் சில சடங்கு செய்து உயிரைக்
கொல்வதும்” – வேத தர்சனம்
மேலே கூறிய மூன்று தரிசனங்களை மேற்கொண்டவர்கள், நூலின்
உண்மையை உணராதவர்கள் என்பது பாடம்.
இரா.பானுகுமார்,
சென்னை
Saturday, October 29, 2011
இயல்புடைய மூவர்
இயல்புடைய மூவர்
மின் தமிழ்க் குழுமத்தின் மூலம் கிடைத்த நண்பர்களுள் திருவாளர். தேவ் என்ற தேவராசனும் ஒருவர். இவர் பன்மொழி அறிவாளர். இவரின் வடமொழி ஆற்றல் குறிப்பிடத்தக்கது. திருக்குறள் பற்றி அறியக் கருத்துக்களை அவ்வப்பொழுது எழுதுவார். இவர், என்னுடைய மற்றொரு நண்பரான Dr.நாக.கணேசன் (US, NASA)அவர்களிடம், திருக்குறள் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் வரும், கீழ்க் கண்ட குறளைக் குறிப்பிட்டு இதற்கு சமண சார்ந்த விளக்கம் கூறுமாறு கேட்டிருந்தார். அக்கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருந்தாலும், அக்கேள்விக்கான பதிலை யான் குறிப்பிடுவது சாலப் பொருந்தும் என்பதால், இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம்!
அக்குறள் இதுதான்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை – திருக்குறள் – 41
தேவ் ஐயா அவர்களுக்கு மட்டுமல்ல பரி உரையைப் படித்தவர்கள் யாருக்கும் கேட்கத் தோன்றும் கேள்விதான் அது. பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்த்துவிட்டு, பின் என் கருத்தை முன் வைக்கிறேன்.
பரிமேலழகர் உரை:
”இல்வாழ்வான் என்பான் – இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான், இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை – அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் சொல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலைபெற்ற துணை ஆம்.
‘இல்’ என்பது ஆகுபெயர். ‘என்பான்’ எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார்: ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங் காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிப்படத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ் ஒழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச் செலவிற்குப் பசி, நோய், குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந் நெறிகளின் வழுவாமல் செலுத்தலான், ‘நல் ஆற்றின் நின்ற துணை’ என்றார்.”
நான்கு ஆசிரமங்கள்
வேத தர்மம் நான்கு ஆசிரமங்களை போற்றுகிறது.
1. பிரம்மசரியம் – கல்யாணம் செய்யாமலே வாழும் முறை
2. கிருஹஸ்தம் - இல்லறத்தார்
3. வானப்பிரஸ்தம் – காட்டில் வாழும் இல்லறத்தார்
4. சன்யாசம் – துறவறத்தார்
ஆனால், சமண தர்மம் இரண்டே இரண்டு ஆசிரமங்களைத் தான் போற்றுகிறது. ஒன்று இல்லறம் மற்றொன்று துறவறம். குறள், நாலடியார்ப் பகுப்பும் இதுவேயாம். இது நிற்க!!
இயல்புடைய மூவர் என்பதற்கு பரிமேலழகர் பிரம்மசரியம் மேற்கொண்டு ஒழுகுபவர், வானப்பிரஸ்தம் ஏற்றுக் காட்டில் வாழும் தம்பதியர் மற்றும் யாவற்றையும் துறந்தவர்களான துறவறத்தார் என்றுப் பொருள் கொள்கிறார். இவ்வாறுப் பொருள் கொள்வது பொருந்தாது! எவ்வாறெனின்?
பிரம்மசரியம் ஏற்றவர்கள், சன்யாசம் மேற்றவர்கள் இல்லறத்தார்களை அண்டி வாழவேண்டும். இது இயல்பு. ஆனால், தம்பதி சகிதமாக, நாட்டை விட்டு வெளியேறி, காட்டில் வாழும் வானப்பிரஸ்தார் (காட்டு இல்லறத்தார் என்றுச் சொல்லலாமா??), நாட்டில் வாழும் இல்லறத்தார்களை அண்டி பிழைக்கவேண்டிய அவசியமில்லை. ஏன்னென்றால், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானதை அவர்களே காட்டில் பெற்று வாழ்வார்கள். அவர்களை இல்லறத்தார் போற்றவேண்டிய அவசியமே இல்லை.
அவ்வாறு இருக்கும்போது, இயல்புடைய மூவரில் இருவரே (பிரம்மசரியம், சன்யாசம்) பொருத்தமாகயிருக்கிறது. பரி உரைக் கூறும் மூன்றாவது இயல்புடையவரான வானப்பிரஸ்த்தாருக்கு- காட்டு இல்லறத்தானுக்கு ‘இல்வாழ்வான் துணை’ எவ்வகையில் துணையாகயிருப்பான். சொல்லுங்கள்?
அப்படியென்றால், குறள் கூறும் அம்மூவர் யாவர் அவர்கள் எத்தகையவர்கள் என்றால்?
சமணம் வாழ்த்தும் ஐங்குரவர்கள்:
1. அரஹந்தர் (அருகர்)
2. சித்தர்
3. ஆச்சாரியார்
4. உபாத்தியாயர்
5. சாது அல்லது முனிவர்
அவர்களில், சித்தர், அருகர் பரிநிர்வாணம் (வீடுபேறு) அடைந்தவர்கள். மற்ற மூவர்களான ஆச்சாரியர்கள், உபாதியாயர்கள், சாதுக்கள் (முனிவர்கள்) தற்போதும் இல்லறத்தார்களிடையே வாழ்பவர்கள். இல்லறத்தார் ஆதரவின்றி அவர்கள் தத்தம் கடமைகளை ஆற்ற முடியாது. அவர்களின் உணவு போன்ற தேவைகளுக்கு இல்லறத்தார்களை அண்டியே வாழவேண்டியிருக்கிறது.
இதனை அறநெறிச்சாரம் என்ற தமிழ்ச் சமண நூல்,
“நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி – யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்து அறம்” – பாடல் – 15
என்று துறவறத்தாரை இல்லறத்தார் போற்றவேண்டும் என்றும், இல்லறத்தாருக்குத் துறவறத்தார் துணைப் புரியவேண்டும் என்று வலியுறுத்தி பேசுவதைக் காணலாம்.
இதனால், அக்குறளில் கூறப்பட்ட மூவர்களுக்கும் (ஆச்சாரியர், உபாத்தியர், முனிவர் – துறந்தவர்கள்). இல்லறத்தார் துணையாகயிருக்கவேண்டும் என்று அக்குறள் கூறுகிறது.
இல்லறத்தார் துறவறத்தாரைத் தான் போற்றவேண்டுமா? என்ற கேள்விக்கு, அடுத்தக் குறளிலேயே பதில் கொடுத்திருக்கிறார் தேவர் பெருமான்.
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை" – குறள் – 42
உரை: துறந்தவர்களுக்கும், வறுமைப்பட்டோர்களுக்கும், ஒருவரும் இன்றி அனாதைகளுக்கும் இல்வாழ்வான் துணை. (இங்கு இறந்தார் என்பது இரந்தார் என்றிருக்கவேண்டும். ஏட்டு பிழையால் மாறியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து)
இல்லறத்தார் – வனப்பிரஸ்தர்
வேதம் போற்றும் நான்கு ஆசிரமங்களைப் பார்த்தோம் இல்லையா. அவர்களில் வனப்பிரஸ்தர்ப் பற்றி சிறிதுத் தெரிந்துக் கொள்வோம். வனப்பிரஸ்தர் என்போர் காட்டில் வாழும் முனிவரும் அவருடைய பத்தினியுமாம். அஃதாவது, தம்பதி சகிதமாக காட்டில் வாழும் முனிவர்கள்.
நாட்டில் வாழும் இல்லறத்தாருக்கும் காட்டில் வாழும் இந்த வனப்பிரஸ்தார் பொருளளவில் வித்தியாசம் கிடையாது. உருவ அளவில் மட்டுமே வித்தியாசம் சொல்லாம்.
இவ்வகையான துறவைத் திருக்குறள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்ஙனமெனில்,
”தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்” – திருக்குறள் – பாடல் – 348
என்றும்,
உற்றாருக்கும் உடம்பும் மிகை (குறள் - 345) என்று சொல்லும் போது, இல்லாளைக் கூடவைத்துக் கொண்டு எங்ஙனம் துறவறம் மேற்கொள்வது? சிரிப்பாகயில்லை!!
இதனால் தீர துறக்காமல், தன் பத்தினியுடன் காட்டில் சமைத்து உண்டு வாழ்வோரை (வனப்பிரஸ்தர்) எப்படி துறவறத்தில் சேர்க்க முடியும். அவர்களும் இல்லறம் மேற்கோண்டோரே என்பதையும் நினைவில் நிறுத்தி,துணிக!!
இதனை அறநெறிச்சாரம் அழகாகக் காட்டும்.
“அட்டூண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டூண்ணா மாட்சி உடையவர் – அட்டூண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை" – பாடல் – 166
இதன் கருத்து:
சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு விருந்தினர் எக்காலத்திலும் சமைத்து உண்ணாத பெருமையுடைய துறவறத்தார்களே ஆவர் என்று கூறுவதைக் காண்க.
(அக்குறளைப் புரிந்துக் கொள்ள இப்பாட்டு பெரிதும் உதவும். இப்பாட்டை தனியாகப் பதிவிட்டு விரிவாக விளக்குவன்)
மேலும் குறளில் எங்கேயும் நான்கு ஆசிரமங்களைக் குறிக்கவில்லை, மாறாக சமணம் போற்றும் இரண்டு ஆசிரமங்களை வெளிப்படையாகப் போற்றுகிறது. இப்பகுப்பிற்கு நாலடியாரே மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
யான் திரும்ப, திரும்பச் சொல்வது யாது என்றால் குறள்ச் சமயம் காண இதுபோன்ற குறள்களை வைத்துத் தேடாதீர்கள். குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் ஒன்றே போதும், அவர்ச் சமயம் காண! என்னை?
பற்றுக பற்றற்றான்! யார் பற்றற்றவர் என்பதையும் உணர்க!!
இதனால், ”இயல்புடைய மூவர்”க் குறளுக்கு, பரிமேலழகர் உரை பொருத்தமாக இல்லை என்பது நன்கு விளங்கும்!!
இரா.பானுகுமார்,
சென்னை
மின் தமிழ்க் குழுமத்தின் மூலம் கிடைத்த நண்பர்களுள் திருவாளர். தேவ் என்ற தேவராசனும் ஒருவர். இவர் பன்மொழி அறிவாளர். இவரின் வடமொழி ஆற்றல் குறிப்பிடத்தக்கது. திருக்குறள் பற்றி அறியக் கருத்துக்களை அவ்வப்பொழுது எழுதுவார். இவர், என்னுடைய மற்றொரு நண்பரான Dr.நாக.கணேசன் (US, NASA)அவர்களிடம், திருக்குறள் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் வரும், கீழ்க் கண்ட குறளைக் குறிப்பிட்டு இதற்கு சமண சார்ந்த விளக்கம் கூறுமாறு கேட்டிருந்தார். அக்கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருந்தாலும், அக்கேள்விக்கான பதிலை யான் குறிப்பிடுவது சாலப் பொருந்தும் என்பதால், இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம்!
அக்குறள் இதுதான்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை – திருக்குறள் – 41
தேவ் ஐயா அவர்களுக்கு மட்டுமல்ல பரி உரையைப் படித்தவர்கள் யாருக்கும் கேட்கத் தோன்றும் கேள்விதான் அது. பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்த்துவிட்டு, பின் என் கருத்தை முன் வைக்கிறேன்.
பரிமேலழகர் உரை:
”இல்வாழ்வான் என்பான் – இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான், இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை – அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் சொல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலைபெற்ற துணை ஆம்.
‘இல்’ என்பது ஆகுபெயர். ‘என்பான்’ எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார்: ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங் காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிப்படத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ் ஒழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச் செலவிற்குப் பசி, நோய், குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந் நெறிகளின் வழுவாமல் செலுத்தலான், ‘நல் ஆற்றின் நின்ற துணை’ என்றார்.”
நான்கு ஆசிரமங்கள்
வேத தர்மம் நான்கு ஆசிரமங்களை போற்றுகிறது.
1. பிரம்மசரியம் – கல்யாணம் செய்யாமலே வாழும் முறை
2. கிருஹஸ்தம் - இல்லறத்தார்
3. வானப்பிரஸ்தம் – காட்டில் வாழும் இல்லறத்தார்
4. சன்யாசம் – துறவறத்தார்
ஆனால், சமண தர்மம் இரண்டே இரண்டு ஆசிரமங்களைத் தான் போற்றுகிறது. ஒன்று இல்லறம் மற்றொன்று துறவறம். குறள், நாலடியார்ப் பகுப்பும் இதுவேயாம். இது நிற்க!!
இயல்புடைய மூவர் என்பதற்கு பரிமேலழகர் பிரம்மசரியம் மேற்கொண்டு ஒழுகுபவர், வானப்பிரஸ்தம் ஏற்றுக் காட்டில் வாழும் தம்பதியர் மற்றும் யாவற்றையும் துறந்தவர்களான துறவறத்தார் என்றுப் பொருள் கொள்கிறார். இவ்வாறுப் பொருள் கொள்வது பொருந்தாது! எவ்வாறெனின்?
பிரம்மசரியம் ஏற்றவர்கள், சன்யாசம் மேற்றவர்கள் இல்லறத்தார்களை அண்டி வாழவேண்டும். இது இயல்பு. ஆனால், தம்பதி சகிதமாக, நாட்டை விட்டு வெளியேறி, காட்டில் வாழும் வானப்பிரஸ்தார் (காட்டு இல்லறத்தார் என்றுச் சொல்லலாமா??), நாட்டில் வாழும் இல்லறத்தார்களை அண்டி பிழைக்கவேண்டிய அவசியமில்லை. ஏன்னென்றால், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானதை அவர்களே காட்டில் பெற்று வாழ்வார்கள். அவர்களை இல்லறத்தார் போற்றவேண்டிய அவசியமே இல்லை.
அவ்வாறு இருக்கும்போது, இயல்புடைய மூவரில் இருவரே (பிரம்மசரியம், சன்யாசம்) பொருத்தமாகயிருக்கிறது. பரி உரைக் கூறும் மூன்றாவது இயல்புடையவரான வானப்பிரஸ்த்தாருக்கு- காட்டு இல்லறத்தானுக்கு ‘இல்வாழ்வான் துணை’ எவ்வகையில் துணையாகயிருப்பான். சொல்லுங்கள்?
அப்படியென்றால், குறள் கூறும் அம்மூவர் யாவர் அவர்கள் எத்தகையவர்கள் என்றால்?
சமணம் வாழ்த்தும் ஐங்குரவர்கள்:
1. அரஹந்தர் (அருகர்)
2. சித்தர்
3. ஆச்சாரியார்
4. உபாத்தியாயர்
5. சாது அல்லது முனிவர்
அவர்களில், சித்தர், அருகர் பரிநிர்வாணம் (வீடுபேறு) அடைந்தவர்கள். மற்ற மூவர்களான ஆச்சாரியர்கள், உபாதியாயர்கள், சாதுக்கள் (முனிவர்கள்) தற்போதும் இல்லறத்தார்களிடையே வாழ்பவர்கள். இல்லறத்தார் ஆதரவின்றி அவர்கள் தத்தம் கடமைகளை ஆற்ற முடியாது. அவர்களின் உணவு போன்ற தேவைகளுக்கு இல்லறத்தார்களை அண்டியே வாழவேண்டியிருக்கிறது.
இதனை அறநெறிச்சாரம் என்ற தமிழ்ச் சமண நூல்,
“நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி – யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்து அறம்” – பாடல் – 15
என்று துறவறத்தாரை இல்லறத்தார் போற்றவேண்டும் என்றும், இல்லறத்தாருக்குத் துறவறத்தார் துணைப் புரியவேண்டும் என்று வலியுறுத்தி பேசுவதைக் காணலாம்.
இதனால், அக்குறளில் கூறப்பட்ட மூவர்களுக்கும் (ஆச்சாரியர், உபாத்தியர், முனிவர் – துறந்தவர்கள்). இல்லறத்தார் துணையாகயிருக்கவேண்டும் என்று அக்குறள் கூறுகிறது.
இல்லறத்தார் துறவறத்தாரைத் தான் போற்றவேண்டுமா? என்ற கேள்விக்கு, அடுத்தக் குறளிலேயே பதில் கொடுத்திருக்கிறார் தேவர் பெருமான்.
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை" – குறள் – 42
உரை: துறந்தவர்களுக்கும், வறுமைப்பட்டோர்களுக்கும், ஒருவரும் இன்றி அனாதைகளுக்கும் இல்வாழ்வான் துணை. (இங்கு இறந்தார் என்பது இரந்தார் என்றிருக்கவேண்டும். ஏட்டு பிழையால் மாறியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து)
இல்லறத்தார் – வனப்பிரஸ்தர்
வேதம் போற்றும் நான்கு ஆசிரமங்களைப் பார்த்தோம் இல்லையா. அவர்களில் வனப்பிரஸ்தர்ப் பற்றி சிறிதுத் தெரிந்துக் கொள்வோம். வனப்பிரஸ்தர் என்போர் காட்டில் வாழும் முனிவரும் அவருடைய பத்தினியுமாம். அஃதாவது, தம்பதி சகிதமாக காட்டில் வாழும் முனிவர்கள்.
நாட்டில் வாழும் இல்லறத்தாருக்கும் காட்டில் வாழும் இந்த வனப்பிரஸ்தார் பொருளளவில் வித்தியாசம் கிடையாது. உருவ அளவில் மட்டுமே வித்தியாசம் சொல்லாம்.
இவ்வகையான துறவைத் திருக்குறள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்ஙனமெனில்,
”தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்” – திருக்குறள் – பாடல் – 348
என்றும்,
உற்றாருக்கும் உடம்பும் மிகை (குறள் - 345) என்று சொல்லும் போது, இல்லாளைக் கூடவைத்துக் கொண்டு எங்ஙனம் துறவறம் மேற்கொள்வது? சிரிப்பாகயில்லை!!
இதனால் தீர துறக்காமல், தன் பத்தினியுடன் காட்டில் சமைத்து உண்டு வாழ்வோரை (வனப்பிரஸ்தர்) எப்படி துறவறத்தில் சேர்க்க முடியும். அவர்களும் இல்லறம் மேற்கோண்டோரே என்பதையும் நினைவில் நிறுத்தி,துணிக!!
இதனை அறநெறிச்சாரம் அழகாகக் காட்டும்.
“அட்டூண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டூண்ணா மாட்சி உடையவர் – அட்டூண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை" – பாடல் – 166
இதன் கருத்து:
சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு விருந்தினர் எக்காலத்திலும் சமைத்து உண்ணாத பெருமையுடைய துறவறத்தார்களே ஆவர் என்று கூறுவதைக் காண்க.
(அக்குறளைப் புரிந்துக் கொள்ள இப்பாட்டு பெரிதும் உதவும். இப்பாட்டை தனியாகப் பதிவிட்டு விரிவாக விளக்குவன்)
மேலும் குறளில் எங்கேயும் நான்கு ஆசிரமங்களைக் குறிக்கவில்லை, மாறாக சமணம் போற்றும் இரண்டு ஆசிரமங்களை வெளிப்படையாகப் போற்றுகிறது. இப்பகுப்பிற்கு நாலடியாரே மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
யான் திரும்ப, திரும்பச் சொல்வது யாது என்றால் குறள்ச் சமயம் காண இதுபோன்ற குறள்களை வைத்துத் தேடாதீர்கள். குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் ஒன்றே போதும், அவர்ச் சமயம் காண! என்னை?
பற்றுக பற்றற்றான்! யார் பற்றற்றவர் என்பதையும் உணர்க!!
இதனால், ”இயல்புடைய மூவர்”க் குறளுக்கு, பரிமேலழகர் உரை பொருத்தமாக இல்லை என்பது நன்கு விளங்கும்!!
இரா.பானுகுமார்,
சென்னை
Labels:
இயல்புடைய மூவர்,
சமணம்,
தமிழ்ச்சமணம்,
திருக்குறள்,
ஜைனம்
Monday, October 24, 2011
திருக்குறளும் மனுதர்மமும்
குறளும் மனுவும்
இந்த வருடம், என் பிறந்தப் பரிசாக நண்பர் ஒருவர் கொடுத்த நூல் திரு.திருலோக
சீதாராம் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். திருலோக சீதாராம் மிக மென்மையாக தன் மொழிப் பெயர்ப்பை செய்திருக்கிறார் என்பது வலையுலகில் காணப்படும் மூலத்தைப்1 படிப்பவர்களுக்குப் புரியும். தற்போது தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வோர் தூக்கிப் பிடிக்கும், இந்து தர்மம் சாற்றும் நூல் இதுதான். மனுதர்மத்தைப் பின்பற்றி தான் திருக்குறள் எழுந்தது என்று கூறுவோரும் இருக்கிறார்கள்2.
திருக்குறளில் கூறப்படும் சில கருத்துக்கள் மனுதர்மத்தில் கூறப்பட்டாலும், அவைகள்
பொதுவான கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, குறள் மனுதர்மத்தின்
தழுவல் என்று கூறமுடியாது. அப்படி கூறவேண்டுவதற்கு அடிப்படைக் கருத்துக்களில்
அவைகள் ஒன்றுப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்க்க வேண்டும். அகிம்சையே
(கொல்லாமை நெறி) குறளின் அடிநாதம். கொல்லாமையைத் தலையாய அறமாக குறள் போற்றுகிறது. மேலும், கொல்லாமையின் இயல்பான தன்மை புலால் மறுத்தல்.
அவற்றையும் குறள் ஏற்றிக் கூறுகிறது. அவற்றை மனுதர்மம் போற்றுகிறதா? என்றும் ஆராயவேண்டும். அப்படி பார்த்தோமானால், குறள் கூறும் அறமும், மனுதர்மம் கூறும்
அறமும் வேறு வேறாகயிருப்பதை யாரும் எளிதில் உள்ளலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குப் பார்ப்போம்!
”வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன. உலக நன்மையை முன்னிட்டே நடைபெறுவனவான வேள்விகள் செய்யப்படும்போது அது பசுவதையாகாது3.”
ஆனால் குறளோ,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை4
என்றும்,
‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று4”
என்று அழுத்தம் திருத்தமாகச் சாற்றுகிறது!!
இப்படி நிறைய முரண்பாடுகள் இருநூல்களுக்குள்ளும் விரவிக்கிடக்கின்றன. அவற்றை
எடுத்துக் காட்டின் ஒரு நூல் அளவு விரியும் என்பதால் இன்னுமொரு அடிப்படை
முரண்ப்பாட்டை மட்டும் பார்ப்போம்!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
மனுதர்மத்தில்5,
”மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால்
வருணத்தையும் வேதஞானம், புவிரத்தல், செல்வ மீட்டல், ஏவல் புரிதல் என்ற
கட்டுப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம்,
தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர்.” என்று
கூறப்படுகிறது.
அஃதாவது,
பிரம்ம ஸ்வரூபியாக நின்றவரான பரம்பொருள், தலையில் இருந்து பிரம்மர்களும்
(பிராமணர்கள்), தோளில் இருந்து க்ஷத்ரியர்களும், தொடையில் இருந்து
வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்றும்,
அவர்களுடைய தொழில்கள் முறையே, வேதம் ஓதுதல், குதிரை முதற்கொண்டு
அரசாட்சி முறைமை செய்தல், வாணிபம் செய்து பொருள் ஈட்டல், மற்ற
வர்ணத்தினோருக்கு ஏவல் புரிதல் ஆகிய தொழிகளை செய்யவேண்டும் என்று
மனுதர்மம் ஆணையிடுகிறது.
மேலும், பிறப்பால் எல்லா வருணத்தினோரும் ஒரே தன்மையினரல்லர் என்பது
விளக்கமாகும்.
ஆனால் சிரமண மதத்தின் வேதமாகக்6 கருதப்படும் திருக்குறளோ,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்7
உரை - மணக்குடவர்,
”எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய்
தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது
பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும்
கூறிற்று”.
அஃதாவது,
பிறப்பினால் எல்லோரும் சமம். அவரவர்கள் செய்யும் தொழிற்திறமையால்
தான் அவர்களுக்குள் வேற்றுமைக் காணப்படும், என்று குறள் அழுத்தம்
திருத்தமாக பகற்கிறது! இதனால் மனுதர்மம் சாற்றும் தர்மம் வேறு, திருக்குறள்
காட்டும் தர்மகோட்பாடுகள் வேறு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல்
விளங்கும். என்னை?
சமண இலக்கியங்களில் இருந்து அக்குறளுக்கு சான்றுகள் காட்டுவோம்.
“அன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிகனீயே
யென்றிரண்டில்லை கண்டாயிது நினதில்லமென்றான்8”
இதன் கருத்து,
”அன்றியும் அறமும் ஒன்றே அதனால் நான் அரசன், நீ வணிகன் என்று இரண்டு
பேதமில்லை. இது உனது இல்லம் என்பதாம். இதனால் சத்திரியன், வைசியன்
என்கிற ஜாதிபேதம் பிறப்பாலில்லை என்று திருத்தக்கத்தேவர் கூறுவதைக் காண்க”
மேலும்,
மேலே சொன்ன குறளை ஒற்றி எடுத்ததுபோல மகாபுராணம்9,
“மனுஷ்யஜாதி நாமகர்மத்தினுடைய உதயத்தினால் உண்டாகிய மனிதரெல்லோரும்
ஒரேவிதமாக விருந்தபோதிலும் ஒவ்வொருவரும் தம் தம் கைக்கொண்டு
அனுஷ்டித்து வந்த தொழில்களின் பேதத்தினால் பிரம்ம, க்ஷத்திரிய, வைஸ்ய,
சூத்திரரென்று நான்குவர்ணாஸ்ரமங்களாகப் பிரிந்தார்கள்”
என்றும்,
நல்ல குலமென்றுந் தீயகுலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லைத் – தொல்சிறப்பி
னாண்பொரு ளொன்றோ தவங்கல்வியாள்வினை
யென்றிவற்றா னாருங் குலம் 10
இதன் பொருள் – நல்ல குலம் மென்றும் தீய குலம் மென்றும் என்று கூறுவதெல்லாம்
வெறும் சொல் அளவேயாகும். அப்படி கூறுவதில் ஒரு பொருளும் இல்லை.
அவரவர் தவத்தினாலும், கற்ற கல்வியாலும், ஆள்வினை (முயற்சி செய்யும்
தொழில்களைக் குறிக்கும்) உடைமையாலும்தான் ஒருவருக்கும் ஆகும் குலம்.
இதனையே குறள் மேலும் விரித்து,
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்11
இதன் கருத்து, ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடையக்
கருமமே (செயல், தொழில்) காரணம்.
என்றும் கூறுவதைக் காணலாம்.
இதனால், குறள் காட்டும் தர்மமும், சமுதாயமும், மனுதர்மம் காட்டும் தர்மமும்,
சமுதாயமும் வேறு வேறாம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
----------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:
1. http://www.vedarahasya.net/manu0.htm
2. http://www.tamilpaper.net/?p=877
3. மனுதர்மம் – 5 ஆவது அத்தியாயம், புலால் உண்ண அனுமதி அதிகாரம் – பாடல் - 39
4. திருக்குறள் – 328, 259
5. மனுதர்மம் - உயிர்களின் தோற்ற அதிகாரம் – பாடல் – 31
6. “எம் ஒத்து” – நீலகேசி உரையில் வாமனாசாரியார்
7. திருக்குறள் – 972
8. சீவக சிந்தாமணி – 544
9. மகாபுராணம் – 48ஆவது பர்வம் – பாடல் – 45
10. நாலடியார் – பாடல் – 195
11. திருக்குறள் - 505
இந்த வருடம், என் பிறந்தப் பரிசாக நண்பர் ஒருவர் கொடுத்த நூல் திரு.திருலோக
சீதாராம் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். திருலோக சீதாராம் மிக மென்மையாக தன் மொழிப் பெயர்ப்பை செய்திருக்கிறார் என்பது வலையுலகில் காணப்படும் மூலத்தைப்1 படிப்பவர்களுக்குப் புரியும். தற்போது தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வோர் தூக்கிப் பிடிக்கும், இந்து தர்மம் சாற்றும் நூல் இதுதான். மனுதர்மத்தைப் பின்பற்றி தான் திருக்குறள் எழுந்தது என்று கூறுவோரும் இருக்கிறார்கள்2.
திருக்குறளில் கூறப்படும் சில கருத்துக்கள் மனுதர்மத்தில் கூறப்பட்டாலும், அவைகள்
பொதுவான கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, குறள் மனுதர்மத்தின்
தழுவல் என்று கூறமுடியாது. அப்படி கூறவேண்டுவதற்கு அடிப்படைக் கருத்துக்களில்
அவைகள் ஒன்றுப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்க்க வேண்டும். அகிம்சையே
(கொல்லாமை நெறி) குறளின் அடிநாதம். கொல்லாமையைத் தலையாய அறமாக குறள் போற்றுகிறது. மேலும், கொல்லாமையின் இயல்பான தன்மை புலால் மறுத்தல்.
அவற்றையும் குறள் ஏற்றிக் கூறுகிறது. அவற்றை மனுதர்மம் போற்றுகிறதா? என்றும் ஆராயவேண்டும். அப்படி பார்த்தோமானால், குறள் கூறும் அறமும், மனுதர்மம் கூறும்
அறமும் வேறு வேறாகயிருப்பதை யாரும் எளிதில் உள்ளலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குப் பார்ப்போம்!
”வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன. உலக நன்மையை முன்னிட்டே நடைபெறுவனவான வேள்விகள் செய்யப்படும்போது அது பசுவதையாகாது3.”
ஆனால் குறளோ,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை4
என்றும்,
‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று4”
என்று அழுத்தம் திருத்தமாகச் சாற்றுகிறது!!
இப்படி நிறைய முரண்பாடுகள் இருநூல்களுக்குள்ளும் விரவிக்கிடக்கின்றன. அவற்றை
எடுத்துக் காட்டின் ஒரு நூல் அளவு விரியும் என்பதால் இன்னுமொரு அடிப்படை
முரண்ப்பாட்டை மட்டும் பார்ப்போம்!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
மனுதர்மத்தில்5,
”மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால்
வருணத்தையும் வேதஞானம், புவிரத்தல், செல்வ மீட்டல், ஏவல் புரிதல் என்ற
கட்டுப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம்,
தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர்.” என்று
கூறப்படுகிறது.
அஃதாவது,
பிரம்ம ஸ்வரூபியாக நின்றவரான பரம்பொருள், தலையில் இருந்து பிரம்மர்களும்
(பிராமணர்கள்), தோளில் இருந்து க்ஷத்ரியர்களும், தொடையில் இருந்து
வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்றும்,
அவர்களுடைய தொழில்கள் முறையே, வேதம் ஓதுதல், குதிரை முதற்கொண்டு
அரசாட்சி முறைமை செய்தல், வாணிபம் செய்து பொருள் ஈட்டல், மற்ற
வர்ணத்தினோருக்கு ஏவல் புரிதல் ஆகிய தொழிகளை செய்யவேண்டும் என்று
மனுதர்மம் ஆணையிடுகிறது.
மேலும், பிறப்பால் எல்லா வருணத்தினோரும் ஒரே தன்மையினரல்லர் என்பது
விளக்கமாகும்.
ஆனால் சிரமண மதத்தின் வேதமாகக்6 கருதப்படும் திருக்குறளோ,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்7
உரை - மணக்குடவர்,
”எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய்
தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது
பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும்
கூறிற்று”.
அஃதாவது,
பிறப்பினால் எல்லோரும் சமம். அவரவர்கள் செய்யும் தொழிற்திறமையால்
தான் அவர்களுக்குள் வேற்றுமைக் காணப்படும், என்று குறள் அழுத்தம்
திருத்தமாக பகற்கிறது! இதனால் மனுதர்மம் சாற்றும் தர்மம் வேறு, திருக்குறள்
காட்டும் தர்மகோட்பாடுகள் வேறு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல்
விளங்கும். என்னை?
சமண இலக்கியங்களில் இருந்து அக்குறளுக்கு சான்றுகள் காட்டுவோம்.
“அன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிகனீயே
யென்றிரண்டில்லை கண்டாயிது நினதில்லமென்றான்8”
இதன் கருத்து,
”அன்றியும் அறமும் ஒன்றே அதனால் நான் அரசன், நீ வணிகன் என்று இரண்டு
பேதமில்லை. இது உனது இல்லம் என்பதாம். இதனால் சத்திரியன், வைசியன்
என்கிற ஜாதிபேதம் பிறப்பாலில்லை என்று திருத்தக்கத்தேவர் கூறுவதைக் காண்க”
மேலும்,
மேலே சொன்ன குறளை ஒற்றி எடுத்ததுபோல மகாபுராணம்9,
“மனுஷ்யஜாதி நாமகர்மத்தினுடைய உதயத்தினால் உண்டாகிய மனிதரெல்லோரும்
ஒரேவிதமாக விருந்தபோதிலும் ஒவ்வொருவரும் தம் தம் கைக்கொண்டு
அனுஷ்டித்து வந்த தொழில்களின் பேதத்தினால் பிரம்ம, க்ஷத்திரிய, வைஸ்ய,
சூத்திரரென்று நான்குவர்ணாஸ்ரமங்களாகப் பிரிந்தார்கள்”
என்றும்,
நல்ல குலமென்றுந் தீயகுலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லைத் – தொல்சிறப்பி
னாண்பொரு ளொன்றோ தவங்கல்வியாள்வினை
யென்றிவற்றா னாருங் குலம் 10
இதன் பொருள் – நல்ல குலம் மென்றும் தீய குலம் மென்றும் என்று கூறுவதெல்லாம்
வெறும் சொல் அளவேயாகும். அப்படி கூறுவதில் ஒரு பொருளும் இல்லை.
அவரவர் தவத்தினாலும், கற்ற கல்வியாலும், ஆள்வினை (முயற்சி செய்யும்
தொழில்களைக் குறிக்கும்) உடைமையாலும்தான் ஒருவருக்கும் ஆகும் குலம்.
இதனையே குறள் மேலும் விரித்து,
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்11
இதன் கருத்து, ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடையக்
கருமமே (செயல், தொழில்) காரணம்.
என்றும் கூறுவதைக் காணலாம்.
இதனால், குறள் காட்டும் தர்மமும், சமுதாயமும், மனுதர்மம் காட்டும் தர்மமும்,
சமுதாயமும் வேறு வேறாம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
----------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:
1. http://www.vedarahasya.net/manu0.htm
2. http://www.tamilpaper.net/?p=877
3. மனுதர்மம் – 5 ஆவது அத்தியாயம், புலால் உண்ண அனுமதி அதிகாரம் – பாடல் - 39
4. திருக்குறள் – 328, 259
5. மனுதர்மம் - உயிர்களின் தோற்ற அதிகாரம் – பாடல் – 31
6. “எம் ஒத்து” – நீலகேசி உரையில் வாமனாசாரியார்
7. திருக்குறள் – 972
8. சீவக சிந்தாமணி – 544
9. மகாபுராணம் – 48ஆவது பர்வம் – பாடல் – 45
10. நாலடியார் – பாடல் – 195
11. திருக்குறள் - 505
Labels:
சமணம்,
தமிழ்ச்சமணம்,
திருக்குறள்,
மனுதர்மம்,
ஜைனம்
Wednesday, October 19, 2011
நடுவின்றி நன்பொருள் வெஃகின்
நடுவின்றி நன்பொருள் வெஃகின்
சமண சமயத்திற்கு நல்லறம்1என்றே பெயர். நல்லறம் இரண்டு வகைப்படும்2.
அவை முறையே இல்லறம், துறவறம் எனப்படும். இல்லறம் வடமொழியில்
சிராவகம் என்றும் பாகதத்தில் சாவகம்3 என்றும் அழைக்கப்படுகிறது.இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை அணுவிரதம் என்றும் துறவறத்தார்
கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை மகாவிரதம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அணுவிரதங்கள்4 ஐந்து. அவைகள்,
அணுவிரதம்
1.அகிம்சை (கொல்லாமை)
2.சத்தியம் (பொய்யாமை)
3.அஸ்தேயம் (திருடாமை)
4.பிரம்மசர்யம் (பிறன்மனை நயவாமை)
5.பரிமித பரிக்கிரகம் (நன்பொருள் வெஃகாமை)
சமண இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஐந்து ஒழுக்கங்களின்
கடைசியாகக் கூறப்படுவதுதான் மிகுபொருள் விரும்பாமை5 என்னும்
விரதமாம். அவற்றை ஈண்டு பார்போம்.
மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தில் மிகுபொருள் விரும்பாமை என்னும் விரதத்தைப்
பற்பல சொற்களில் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். நன்பொருள் வெஃகாமை,
பொருள் வரைதல், மிகுபொருள் உவாவாமை போன்றவைகள் அவற்றுள் சில.
மிகுபொருள் விரும்பாமை ஓர் அறமாக, இல்லறத்தார் ஒழுக்கமாக வலியுறுத்தியச்
சமயம் சமணம் தான். சமூகத்தில் ஒருசாராரிடம் மட்டுமே பொருள் சேர்ந்தால்,
சமூகம் சீர்க்குலையும் என்பதனை என்றோ உணர்ந்து ஓர் அறமாக கொள்ளப்பட்டது
மிக சிறப்புடைத்தாம். மிகுதியான பொருள் உடையவர்கள் மற்றவர்களுக்கு
அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்த அறம்/ஒழுக்கம் கூறப்பட்டிருக்குமோ
என்று எண்ணத் தோன்றுகிறது6.
ஏனெனில், சமணம் இல்லறத்தாருக்கு நான்கு வகை தானங்களை கடைப்பிடிக்கச்
சொல்கிறது. அவை,
1. அன்னதானம்
2. அடைக்கல தானம்
3. மருத்துவ தானம்
4. கல்வி தானம்
என்பனவாம். இந்த தானங்கள்7, துறவறத்தாரின் தவத்திற்கு இணையாகவும்
சொல்லப்படுகிறது என்பது ஈங்குக் குறிப்பிடத்தக்கது. பெரும் பொருள் படைத்தவர்கள்,
இந்த தானங்களை கொண்டு ஏழைகளுக்கும், இரந்தார்களுக்கும், அனாதைகளுக்கும்
உதவவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
திருக்குறளில் மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தின் மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் இந்த
விரதம் (மிகுபொருள் விரும்பாமை) சொல்லப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்ப்போம்.
வெஃகாமை8 என்னும் அதிகாரத்தில் மிகுபொருள் விரும்பாமை குறிப்பிடப்பட்டிருக்கிறது!
அக்குறள்,
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் – திருக்குறள் (171)
இக்குறளுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுகிறார்,
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் – பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன்
அன்று ‘என்னும் நடுவுநிலைமை இன்றி அவர் நன்பொருளை’ ஒருவன்
வெஃகுமாயின்; குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் வெஃகுதல்
அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே
அவனுக்குக் கொடுக்கும்.
குடியை வளரச் செய்து பல நன்மையும் பயக்கும் இயல்பு பற்றி, வெஃகின்
என்பார், ‘நன்பொருள் வெஃகின்’ என்றார். பொன்ற என்பது ‘பொன்றி’
எனத் திரிந்து நின்றது. ‘செய்து’ என்பது சொல்லெச்சம்.
என்றும்,
மணக்குடவர் அதே குறளுக்கு,
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், அதனானே
குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம்
இது சந்தான நாச முண்டாமென்றது.
என்றும் பொருள் செய்திருக்கிறார்.
இங்கே “நன்பொருள்” என்பதுதான் அந்தக் குறளின் குறிச் சொற்றொடர்.
நன்பொருள் என்பதற்கு பெரிய/பெரும் பொருள் என்றும் பொருள்படும்.
எப்படியெனின், நன்றாக மழைப் பொழிந்தது என்றால் பலத்த/பெரும்
மழைப் பெய்தது என்று பொருள் கொள்கிறோம். இன்னுமொரு காட்டுப்
பார்ப்போம். அவன் நன்றாக அடித்துவிட்டான் என்றால் கடுமையாக/பெரிதாக
அடித்துவிட்டான் என்றுப் பொருள் படுவதுபோல், நன்பொருள் என்பதற்கு
மணக்குடவர் கூறுவதுபோல் ”மிக்க பொருள்” என்றுப் பொருள் கொண்டால்
அக்குறள் முழுமைப் பெறும். மேலும் தொல்காப்பியம் “நன்று பெரிதாகும்9”
என்று கூறுவதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்,
பரிமேலழகர் உரை இங்கு சிறப்பில்லை என்பது அங்கை நெல்லிக்கனி.
சமூகத்தில் ஒருசாரார் பேராசையால் பெரும் பணம் சேர்த்துக் கொண்டே போனால்,
நாட்டில் சமூக வாழ்வு நடுவு நிலைமையின்றிக் குன்றிப்போகும், திருட்டு
முதலான குற்றங்கள் பெருகும், ஏழை, எளியோர் இன்னல் கொள்வர்,
வறுமைத் தலைவிரித்தாடும் என்பதால், சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க
சமணம் இல்லறத்தாருக்கு “பொருள் வரைதல்10” என்ற விரதத்தை/ஒழுக்கத்தை
வலியுறுத்துகின்றது.
இரா.பானுகுமார்,
சென்னை
=====================================================
அடிக்குறிப்பு:
1. தொல்அறமே படையாய் உடை அச்சுத நாயகன்தன்
நல்லறம் மேவி இந்நாற்கதி நீக்கிலர் தீக்கதி சேர்ந்து
அல்அறம் மேவுவர் என்(று) அறைத்தாலும் அறிவிலிகள்
புல் அறம் மேவுவர் போகத்தின் மேலுள்ள மோகத்திலே – திருநூற்றந்தாதி (36)
2. இல்லறம் ஏனைத் துறவறம் என்றுஇவற்றைப்
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)
3. சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் – சிலப்பதிகாரம் – கொலைக்களக் காதை(20)
4. அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம் = அருங்கலச் செப்பு (65)
5. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார் பொய்
உரையார் களவினை ஒழுகார் பிறர்மனை
உவவார் மிகுபொருள் உவவார் வெம்
கரையால் உணர்வினை அழியார் அழிதசை
துவ்வார் விடமென வெவ்வாறும்
புரையார் நறவுனை நுகரார் இரவுணல்
புகழார் குரவரை இகழாரே – திருக்கலம்பகம் (67)
6. செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு – நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பதுஓர் வைப்பு – அறநெறிச்சாரம் (178)
7. “பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)
8. வெஃகாமை என்பதற்கு பரிமேலழகர் பிறர்க்குரிய பொருளை வெளவக் கருதாமை என்றும் மணக்குடவர் பிறர் பொருளை விரும்பாமை என்றும் பொருள் கொண்டிருக்கிறார்கள். இது பொருத்தமாகயில்லை. பிறர்ப் பொருள் விரும்பாமை என்பதைக் குறிக்க “கள்ளாமை” என்ற தனி அதிகாரம் சொல்லப்பட்டிருக்கும்போது வெஃகாமை என்பதற்கும் பிறர் பொருள் விரும்பாமை என்று பொருள் கொள்வது சிறந்ததாகப்படவில்லை. வெஃகாமை என்பதற்கு பொருள் வரைதல் அஃதாவது மிகுபொருள் வரைதல் என்ற கருத்தில் எடுத்தாண்டால் பொருள் சிறக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
9. "நன்று பெரிதாகும்" - தொல்காப்பியம் 2-8-46
10. பெரிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து – அருங்கலச் செப்பு (66)
சமண சமயத்திற்கு நல்லறம்1என்றே பெயர். நல்லறம் இரண்டு வகைப்படும்2.
அவை முறையே இல்லறம், துறவறம் எனப்படும். இல்லறம் வடமொழியில்
சிராவகம் என்றும் பாகதத்தில் சாவகம்3 என்றும் அழைக்கப்படுகிறது.இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை அணுவிரதம் என்றும் துறவறத்தார்
கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை மகாவிரதம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அணுவிரதங்கள்4 ஐந்து. அவைகள்,
அணுவிரதம்
1.அகிம்சை (கொல்லாமை)
2.சத்தியம் (பொய்யாமை)
3.அஸ்தேயம் (திருடாமை)
4.பிரம்மசர்யம் (பிறன்மனை நயவாமை)
5.பரிமித பரிக்கிரகம் (நன்பொருள் வெஃகாமை)
சமண இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஐந்து ஒழுக்கங்களின்
கடைசியாகக் கூறப்படுவதுதான் மிகுபொருள் விரும்பாமை5 என்னும்
விரதமாம். அவற்றை ஈண்டு பார்போம்.
மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தில் மிகுபொருள் விரும்பாமை என்னும் விரதத்தைப்
பற்பல சொற்களில் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். நன்பொருள் வெஃகாமை,
பொருள் வரைதல், மிகுபொருள் உவாவாமை போன்றவைகள் அவற்றுள் சில.
மிகுபொருள் விரும்பாமை ஓர் அறமாக, இல்லறத்தார் ஒழுக்கமாக வலியுறுத்தியச்
சமயம் சமணம் தான். சமூகத்தில் ஒருசாராரிடம் மட்டுமே பொருள் சேர்ந்தால்,
சமூகம் சீர்க்குலையும் என்பதனை என்றோ உணர்ந்து ஓர் அறமாக கொள்ளப்பட்டது
மிக சிறப்புடைத்தாம். மிகுதியான பொருள் உடையவர்கள் மற்றவர்களுக்கு
அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்த அறம்/ஒழுக்கம் கூறப்பட்டிருக்குமோ
என்று எண்ணத் தோன்றுகிறது6.
ஏனெனில், சமணம் இல்லறத்தாருக்கு நான்கு வகை தானங்களை கடைப்பிடிக்கச்
சொல்கிறது. அவை,
1. அன்னதானம்
2. அடைக்கல தானம்
3. மருத்துவ தானம்
4. கல்வி தானம்
என்பனவாம். இந்த தானங்கள்7, துறவறத்தாரின் தவத்திற்கு இணையாகவும்
சொல்லப்படுகிறது என்பது ஈங்குக் குறிப்பிடத்தக்கது. பெரும் பொருள் படைத்தவர்கள்,
இந்த தானங்களை கொண்டு ஏழைகளுக்கும், இரந்தார்களுக்கும், அனாதைகளுக்கும்
உதவவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
திருக்குறளில் மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தின் மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் இந்த
விரதம் (மிகுபொருள் விரும்பாமை) சொல்லப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்ப்போம்.
வெஃகாமை8 என்னும் அதிகாரத்தில் மிகுபொருள் விரும்பாமை குறிப்பிடப்பட்டிருக்கிறது!
அக்குறள்,
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் – திருக்குறள் (171)
இக்குறளுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுகிறார்,
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் – பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன்
அன்று ‘என்னும் நடுவுநிலைமை இன்றி அவர் நன்பொருளை’ ஒருவன்
வெஃகுமாயின்; குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் வெஃகுதல்
அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே
அவனுக்குக் கொடுக்கும்.
குடியை வளரச் செய்து பல நன்மையும் பயக்கும் இயல்பு பற்றி, வெஃகின்
என்பார், ‘நன்பொருள் வெஃகின்’ என்றார். பொன்ற என்பது ‘பொன்றி’
எனத் திரிந்து நின்றது. ‘செய்து’ என்பது சொல்லெச்சம்.
என்றும்,
மணக்குடவர் அதே குறளுக்கு,
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், அதனானே
குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம்
இது சந்தான நாச முண்டாமென்றது.
என்றும் பொருள் செய்திருக்கிறார்.
இங்கே “நன்பொருள்” என்பதுதான் அந்தக் குறளின் குறிச் சொற்றொடர்.
நன்பொருள் என்பதற்கு பெரிய/பெரும் பொருள் என்றும் பொருள்படும்.
எப்படியெனின், நன்றாக மழைப் பொழிந்தது என்றால் பலத்த/பெரும்
மழைப் பெய்தது என்று பொருள் கொள்கிறோம். இன்னுமொரு காட்டுப்
பார்ப்போம். அவன் நன்றாக அடித்துவிட்டான் என்றால் கடுமையாக/பெரிதாக
அடித்துவிட்டான் என்றுப் பொருள் படுவதுபோல், நன்பொருள் என்பதற்கு
மணக்குடவர் கூறுவதுபோல் ”மிக்க பொருள்” என்றுப் பொருள் கொண்டால்
அக்குறள் முழுமைப் பெறும். மேலும் தொல்காப்பியம் “நன்று பெரிதாகும்9”
என்று கூறுவதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்,
பரிமேலழகர் உரை இங்கு சிறப்பில்லை என்பது அங்கை நெல்லிக்கனி.
சமூகத்தில் ஒருசாரார் பேராசையால் பெரும் பணம் சேர்த்துக் கொண்டே போனால்,
நாட்டில் சமூக வாழ்வு நடுவு நிலைமையின்றிக் குன்றிப்போகும், திருட்டு
முதலான குற்றங்கள் பெருகும், ஏழை, எளியோர் இன்னல் கொள்வர்,
வறுமைத் தலைவிரித்தாடும் என்பதால், சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க
சமணம் இல்லறத்தாருக்கு “பொருள் வரைதல்10” என்ற விரதத்தை/ஒழுக்கத்தை
வலியுறுத்துகின்றது.
இரா.பானுகுமார்,
சென்னை
=====================================================
அடிக்குறிப்பு:
1. தொல்அறமே படையாய் உடை அச்சுத நாயகன்தன்
நல்லறம் மேவி இந்நாற்கதி நீக்கிலர் தீக்கதி சேர்ந்து
அல்அறம் மேவுவர் என்(று) அறைத்தாலும் அறிவிலிகள்
புல் அறம் மேவுவர் போகத்தின் மேலுள்ள மோகத்திலே – திருநூற்றந்தாதி (36)
2. இல்லறம் ஏனைத் துறவறம் என்றுஇவற்றைப்
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)
3. சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் – சிலப்பதிகாரம் – கொலைக்களக் காதை(20)
4. அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம் = அருங்கலச் செப்பு (65)
5. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார் பொய்
உரையார் களவினை ஒழுகார் பிறர்மனை
உவவார் மிகுபொருள் உவவார் வெம்
கரையால் உணர்வினை அழியார் அழிதசை
துவ்வார் விடமென வெவ்வாறும்
புரையார் நறவுனை நுகரார் இரவுணல்
புகழார் குரவரை இகழாரே – திருக்கலம்பகம் (67)
6. செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு – நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பதுஓர் வைப்பு – அறநெறிச்சாரம் (178)
7. “பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)
8. வெஃகாமை என்பதற்கு பரிமேலழகர் பிறர்க்குரிய பொருளை வெளவக் கருதாமை என்றும் மணக்குடவர் பிறர் பொருளை விரும்பாமை என்றும் பொருள் கொண்டிருக்கிறார்கள். இது பொருத்தமாகயில்லை. பிறர்ப் பொருள் விரும்பாமை என்பதைக் குறிக்க “கள்ளாமை” என்ற தனி அதிகாரம் சொல்லப்பட்டிருக்கும்போது வெஃகாமை என்பதற்கும் பிறர் பொருள் விரும்பாமை என்று பொருள் கொள்வது சிறந்ததாகப்படவில்லை. வெஃகாமை என்பதற்கு பொருள் வரைதல் அஃதாவது மிகுபொருள் வரைதல் என்ற கருத்தில் எடுத்தாண்டால் பொருள் சிறக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
9. "நன்று பெரிதாகும்" - தொல்காப்பியம் 2-8-46
10. பெரிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து – அருங்கலச் செப்பு (66)
Labels:
சமணம்,
திருக்குறள்,
வெஃகாமை,
ஜைனம்
Saturday, September 03, 2011
சமண சிற்ப விளக்கம்
சமண சிற்ப விளக்கம்
இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண
சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும்
சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே
ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவைகள் அகத்தே தங்களுக்குள் முரண்பட்டேயிருந்தன.
அவ்வாறே, ஜைனமும், பெளத்தமும் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும்,
அகத்தே இரண்டும் வேறுப்பட்டேயிருந்தன. தற்போதைய சூழ்நிலையுல் சமணம்,
பெளத்தம் இரண்டும் அருகிவிட்ட நிலையில் புறவயமான சிற்பங்களுக்குள்
வேறுபாடு தெரிந்துக் கொள்வது இன்றியமையாதது. தற்காலத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும் என்ற நோக்கிலும்
எழுதப்படுகிறது.
சமண சிற்ப அம்சங்கள்
பல சொற்கள் உணர்த்தாததை ஒரு படம் உணர்த்தும் என்பார்கள். சிற்பங்களும்
அவ்வாறே. சமயச் சிற்பங்களும், சித்திரங்களும் அந்தந்த சமயங்களின் பிரதிபலிப்பு
என்றால் அதுமிகையாகாது.
இந்திய சமய வரலாறும் உணர்த்துவதும் அதுவேயாம். இந்திய வரலாற்றை
ஆராயும்போது உருவ வழிபாடு என்பது சிரமண மதங்களிலிருந்தே தொடங்குகிறது.
தற்போதைய சிற்பங்களின் மூலம் பாத வழிபாடேயாகும். தீர்த்தங்கரர்கள்
ஆகட்டும் புத்தர்கள் ஆகட்டும், தங்கள் கொள்கைகளை பரப்ப இந்திய
நிலப்பரப்பு முழுதும் நடந்தே சென்றார்கள். அவற்றின் குறியீடே இந்த
பாத வழிபாடாகும். பின்னர் அவ்வழிபாடு, படிப்படியாக உருவ வழிபாடாக
மாறத் தொடங்கியது.
பார்க்க படம் - பத்ரபாகு முனிவரின் பாதம் - கி.பி.3ஆம் நூற்றாண்டு
அறப்புணைவோர் அல்லது தீர்த்தங்கரர்
சமணத்தில், முதன் முதல் பாத வழிபாடே நடைமுறையிருந்தது. பின்னர்
அறப்புணைவோர் என்று அழைக்கப்படும் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை
அமைக்கத் தொடங்கினர். தீர்த்தங்கரர் நம்மை போல் மனிதர்களாகப் பிறந்து,
தங்கள் விடாமுயற்சியின் மூலம் பற்றுக்கோடுகளை களைந்து சிவகதியடைந்து
இறைவர்களாக திகழ்ந்தவர்கள்.ஆதலால், சமண சிற்பங்களை அமைக்கும்போது
மனித மாதிரியாகவே அமைத்தார்கள். இந்த வகையில் மற்ற சமய இறைவர்
சிற்பங்களிலிருந்து சமண சிற்பங்கள் வேறுபடுவதைக் காணலாம். (சிவனார்,
விஷ்ணு ஆகியோருக்கு நான்கு கைகள் இருப்பதுபோல சிற்பங்களை
அமைப்பதை ஒப்புநோக்குக)
பின்னர், அறப்புணைவோரின் காவலர்களான யட்சன், யட்சி முதலியானோர்
சிற்பங்களையும் சிற்பங்களாக வடிக்கத் தொடங்கினர். அறப்புணைவோர்
சிற்பங்கள் இரண்டு விதமாக நிலைகளில் அமைப்பார்கள். ஒன்று நின்றக்
கோலத்திலும் (கயோத்சர்கம்), மற்றொன்று அமர்ந்தக் கோலத்திலும்
(பத்மாசனம்) இருக்கும்.
பார்க்க படம் - பார்ஸவநாதர் - பத்மாவதி
பத்மாசனமும் அர்த பத்மாசனமும்
தென்னாட்டில் அமைக்கப்படும் அறப்புணைவோர் சிற்பங்களில் பெரும்பாலும்
அர்த பத்மாசனத்தில் காட்டப்பட்டிருக்கும். அர்த பத்மாசனம் என்றால் பாதி
பத்மாசனம். வடநாட்டில் பெருவாரியான இடங்களில் பத்மாசன (யோகாசனம்)
நிலையில் காட்டப்பட்டிருக்கும். தென்னாட்டில் சமண சிற்பம் ஆடை ஏதும்
இல்லாமல் காட்டப்பட்டிருக்கும். (உற்றாற்கு உடம்பும் மிகை எனும்போது
ஆடை எதற்கு! அணியாத அழகன் இவனென்ப!!)
சமணங்கால் அல்லது சப்பளாங்கால்
சப்பளாங்கால் என்ற சொல்லை நாம் கேட்டிருப்போம். கிராமங்களில் இன்றும்
பயன்படுத்தும் சொல்வழக்கிது. தரையில் அமர்ந்திருக்கும் கோலத்திற்கு
சப்பளாங்கால் என்கிறோம். அது சமணங்கால் என்பதின் திரிபேயாகும்.
சமணர்கள் அமர்ந்து தியானம் செய்வதை பார்த்த மக்கள் அவ்வமர்ந்த
நிலைக்கு சமண+கால்=சமணங்கால் என்று அழைக்கலானார்கள். இந்த
சொல் பரவலாகத் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம்.
தமிழர்களிடம் சமணர் தாக்கத்தை இது காட்டுவனவாக திகழ்கிறது இச்சொல்.
சிற்ப குறியீடுகள்
அக்காலத்தில் மக்கள் தங்கள் தேவைகளுக்கு மன்னனை (தலைவன்) நோக்கி
இருந்ததுபோல, அரசர்களாகவும், சக்கரவர்த்திகளாக திகழ்ந்த அறப்புணைவோர்
சிற்பங்களை அமைக்கும்போது அரசனின் குறியீடுகளான, சாமரம், குடை,
சிம்மாசனம், சிம்மாசனத்தில் சாய்ந்துக் கொள்ள பயன்படும் திண்டு ஆகியவற்றை அமைத்திருக்கிறார்கள். அக்குறியீடுகள் அறப்புணைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிப்பலிப்பதாக கொள்ளலாம்.
எண்வகை சிறப்புகள்
அறப்புணைவோர் (தீர்த்தங்கரர்) வாழ்க்கையில் முக்கிய ஐந்து சம்பவங்களை ”பஞ்ச
கலியாணங்கள்” என்று பெயரிட்டு அழைப்பார்கள். அவை முறையே,
1.கர்ப்பாவதரண கல்யாணம்,
2.ஜன்மபிஷேக கல்யாணம்,
3.தீட்சாக் கல்யாணம்,
4.கேவலாற்பத்தி கல்யாணம்
5.பரிநிர்வாணக் கல்யாணம்
என்பன. இவற்றில் கேவலாற்பத்தி கலியாணம் என்பது அறப்புணைவோர்களுக்கு
கேவல ஞானம் (வாலறிவு – தூய அறிவு) ஏற்படும்போது கொண்டாடப்படுகிறது.
அவ்வமயம், அமரர் உலக அரசனான தேவேந்திரன் அறப்புணைவோர் அடிதாழ்ந்து
”சமவசரணம்” என்னும் கோயிலை(கோட்டம்/திருமணிக் கோயில்) அமைப்பான்.
பார்க்க படம் - சமவசரண படம்
(இச்சமவசரணத்தை நினைவிற் கொள்ளும் வகையில் மானிடர்கள் தீர்த்தங்கரர்களின்
கோயில்களை அமைத்து வழிபாடு செய்கிறார்கள்)
அறப்புணைவோர் அச்சமவசரணத்தில் எழுந்தருளும்போது பகவானிடத்து எண்வகைச்
சிறப்புகள் தோன்றும்.
அவைகள் பின்வருமாறு:
1. அசோக மரம் அல்லது பிண்டி மரம்
2. தேவர் மலர்ப் பொழிவு அல்லது புஷ்பவிருஷ்டி
3. திவ்யத்தொனி
4. சாமரம் வீசுவோர்
5. சிம்மாசனம் அல்லது அரியாசனம்
6. தேவ துந்துபி ஒலி
7. ஒளி மண்டலம்
8. முக்குடை
பார்க்க படம் - சமண சிற்ப விளக்கப் படம்
இந்த எண்வகைச் சிறப்பை கீழே வரும் பாடல் அழகாகக் கூறுகிறது.
“சுடர்மண் டலஞ்சுர துந்துபி தெய்வத் துவனிசிங்கப்
பிடர்மண் டலவணை பிண்டிவெண் சாமரை பெய்மலரி
னடர்மண் டலமழை யம்பொற் குடைமும்மை யாமடியோ
மிடர்மண் டலம்கெடுப் பார்க்கிமை யார்செயு மென்சிறப்பே”
(இதில் திவ்யதொனியும், தேவ துந்துபியின் ஒலி ஆகியவைச் சிற்பங்களில்
காட்டமுடியாது)
1.அசோக மரம் அல்லது பிண்டி மரம்
இதில் இரண்டு தீர்த்தங்கரர்கள் தவிர ஏனையோர் அசோக மரத்தின் கீழே ஞானம்
பெற்றதால் அதன் குறியீடாக அசோகமரம் சிற்பங்களில் காட்டப்படும்.
(மற்ற இருவருக்கு அரசமரம் காட்டப்படும். ஆனால் சிற்பங்களில் அவ்வித்தியாசம்
காட்டமுடியாது).
சிலப்பதிகாரத்தில், மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,
“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”
என்று இளங்கோவடிகள் வாழ்த்தில், முக்குடையும், பிண்டியும் குறித்திருப்பதைக்
காணலாம்.
2.தேவர் மலர்ப் பொழிவு
பகவான் வாலறிவு பெற்று, சமவசரணத்தில் எழுந்தருளும் போது தேவர்கள்
மலர்மாரிப் பொழிவார்கள். இதனை குறிக்க புஷபவிருஷ்டி என்னும் மலர்ப்
பொழிவுக் காட்டப்படுகிறது.
திருப்பாமாலை - பஞ்ச குருபக்தி – பாடல் எண்.1-10
“ஒருபெருங் கேவலத் துலகம் மூன்றும்
பொருவற உணர்ந்த புண்ணிய ராகிப்
பேரொளி மண்டிலம் பெரிதினிது விளங்க
அரிசுமந் தேத்திய அணி ஆசனத்துப்
பொங்கு சாமரை புடைநின் றிரட்ட
எங்குந் துந்துபி அந்தரத் தியம்ப
மருவிய பூமழை வானோர் சொரிதர
எரிதளிர்ப் பிண்டி யின்னிழன் மேவி
இலங்கொளி முக்குடை இயல்பெற நிழற்றக்
கலங்கிய இருவினைக் கடிபடை உடையப்”
3.திவ்யதொனி
தேவேந்திரன் அமைக்கும் சமவசரணத்தில் மன்னுயிர்கள் (மானிடர்கள்,
மிருகங்கள்,பறவைகள்) மட்டுமல்ல வானுலகத்திலுள்ள நான்கு வகைத்
தேவர்களும் பகவான் அறம் கேட்க வருவார்கள். பகவான் திருவாய்
மலர்ந்தருளுவார். (அவருடைய வாய் அசையாது, ஆனால் அவர் திருவாய்
பொழியானது அனைத்து மிருக, பறவை உயரிகளுக்கும் தத்தம் மொழிகளிலும்,
மானிடர்களுக்கு அவரவர் மொழிகளில் (18 மொழிகள்) கேட்கும். இவற்றை
திவ்யதொனி என்பார்கள். தமிழில் “திருவாய் மொழி” என்றும் ”திருமொழி”
என்றும் அழைக்கப்படும்.
திருநூற்றந்தாதி – பாடல்:52
கதமொழி தீர்முன் கறுவுக டேய்மின் கருணைநெஞ்சோ
டிதமொழி கூறுமி னின்னுயி ரோம்புமி னெப்போழுதுஞ்
சுதமொழி கேண்மின் சுகமிக வேண்டிற் றுறவர்சொன்ன
வதமொழி யேன்மி னிவைசிந னார்திரு வாய்மொழியே”
4.சாமரம்
அரசருக்கு இரண்டு பக்கமும் சாமரம் வீசுவோர் இருப்பது போன்றே அரச வம்சமான தீர்த்தங்கரர்களுக்கும் தேவர் சாமரம் வீசுவதாக குறியீடு அமைத்திருப்பர்.
5.சிம்மாசனம் அல்லது அரியாசனம்
அரசர்கள் சிம்மாசனத்தில் அமருவதுபோல தீர்த்தங்கர சிற்பங்களிலும் சிம்மாசனம்
குறியீடாகக் காட்டப்பட்டிருக்கும். தீர்த்தங்கரர் சிலைகளில் கீழ் காட்டப்படும் சிங்க
முகங்களை வைத்து அது வர்த்தமான மகாவீரர் இலாஞ்சனம் (சின்னம்) என்றும்
அந்தச் சிற்பம் அவரின் சிற்பவடிவம் என்று கருதுகிறார்கள். இது தவறு. எல்லா
தீர்த்தங்கரர் சிலைகளிலும் சிங்க முகங்கொண்ட ஆசனங்கள் (சிம்மாசனம்)
அமைக்கப்பட்டிருக்கும்.
இங்கு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், தீர்த்தங்கர பகவான் அமர்ந்த
கோலத்தில் சிலை அமைக்கும்போது அரியாசனத்திலும், நின்ற கோலத்தில்
தாமரை மலரில் நிற்பது போலவும் காட்டப்படும்)
6.தேவ துந்தூபி ஒலி
சமவசரணத்தில் பகவான் எழுந்தருளும்போது தேவர்கள் துந்துபி என்ற
வாத்தியத்தை முழங்கும்போது ஏற்படும் ஒலி. இவற்றை சிற்பங்களில்
காட்டமுடியாது.
7.ஒளி மண்டலம்
இஃது எல்லா சமய சிற்பங்களிலும் காட்டப்படுவதுதான். தென்னக சமண
சிற்பங்களில் இப்பிரபாவளி நீள்வட்டத்தில் காட்டப்பட்டிருக்கும். வடநாட்டு
சமண சிற்பங்களில் அவை முழுவட்டவடிவில் காட்டப்பட்டிருக்கும்.
8.முக்குடை
அரசர்கள் அமரும் அரியாசனத்தின் மேல் ஒரு குடையிருக்கும். எல்லா
தேசங்களையும் அரசர்கள் வெற்றிக் கொண்டாலும் மற்ற உலகங்களை
வெற்றிக் கொள்ள முடியாது என்பதால் ஒரு குடை மட்டும் இருக்கும்.
ஆனால், அறப்புணைவோர்கள் தங்கள் கேவல ஞானத்தால் மூன்று
உலகங்களையும் (மேல்,நடு மற்றும் கீழ்) வென்றவர்கள் என்பதால்
குறியீடாக மூன்று குடைகள் காட்டப்பட்டிருக்கும்.
(முக்குடை முறையே சந்திராதித்தம், நித்திய விநோதம், சகலபாசனம்
என்று அழைக்கப்படும்)
இரா.பானுகுமார்,
சென்னை
(இக்கட்டுரை த.ம.அ
விற்காக எழுதப்பட்டது)
Sunday, July 10, 2011
குறளும் நிகண்டுகளும்
குறளும் நிகண்டுகளும்
இன்றைய அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். நிகண்டு
வடமொழிச் சொல். இதன் தமிழ்ச் சொல் “உரிச்சொற்பனுவல்”
என்பது. சொற்பொருள் களஞ்சியங்களாகத் திகழும் நிகண்டுகள்
மொழி வளர்ச்சிக்கும், மொழி ஆர்வலர்க்கும் பெரும் துணையாகவிருப்பன.
பழமைக் கழிவதும், புதுமைப் புகுவதும் காலவியற்கை. ஒரு
சொல் கால வர்த்தமானங்களில் வெவ்வேறு பொருள்களை
கொண்டு வழங்குதல் கண்கூடு. ஆயின், நிகண்டுகள் அவற்றைத்
தொகுத்துவதுமல்லாமல் அவற்றை பின்னைத் தலைமுறையினருக்குப்
பதிவுச் செய்யும் காலக்கண்ணாடிகள் என்றால் மிகையாகாது.
தமிழ் நிகண்டுகள்
தமிழ் நிகண்டுகளின் தொடக்க காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு1
என்று அறிஞர்கள் கூறுவர். நிறைய தமிழ் நிகண்டுகள் இருந்தாலும்,
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி ஆகியவை மிக
முக்கியமானதாகக் கருதப் பட்டுவருகிறது. இவற்றில் திவாகரம்
காலத்தால் முந்தையது. இதனையொட்டியக் காலத்தில் எழுந்தது
பிங்கல நிகண்டு என்னும் பிங்கலாந்தை. சூடாமணி நிகண்டுக்
காலத்தால் மிக பிந்தையது. எனினும், மற்றைய எல்லா
நிகண்டுகளிலும் மிகப் பிரபலமானது இதுவேயாம். இதன்
காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு2 என்பர்.
திருக்குறள் கடவுள் வாழ்த்து
குறளாசிரியர் தேவர் பெருமான், கடவுள் வாழ்த்தில் தான்
வழிப்படும் இறைவனைப் போற்றி வணங்கியிருக்கிறார். அவர்
எந்த இறைவனை வணங்கியிருக்கிறார் என்பதை, இங்கு
நிகண்டுகள் மூலம் ஆராய்ந்து, ஒப்பு நோக்குவோம். பின்னர்,
அந்நிகண்டுகள் அவ்வாறு கூறுவதற்கு இலக்கியத் தரவுகள்
உள்ளனவா என்றும் பார்ப்போம்.
குறளாசிரியர், தான் வழிப்படும் இறைவனை கீழ் வரும்
சொற்களைக் கொண்டு குறித்திருக்கிறார். (மணக்குடவர் வரிசைப்படி)
1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. தனக்குவமை இல்லாதான்
5. அறவாழி அந்தணன்
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
7. இருவினையும் சேரா இறைவன்
8. பொறிவாயில் ஐந்தவித்தான்
9. இறைவன்
10. எண்குணத்தான்
கடவுள் வாழ்த்து - நிகண்டுகள் – ஒப்புநோக்கு
எல்லா நிகண்டுகளையும் ஒப்பு நோக்குவது இயலாதது. ஏனெனில்,
சில நிகண்டுகள் காலத்தால் மிக, மிக பிந்தியவை. மேலும்,
அந்நிகண்டுகளில் முக்கிய தெய்வங்களைக் குறிக்கவில்லை.
குறிப்பாக, நாமதீப நிகண்டில் அருகன் நாமங்கள் (பெயர்)
குறிக்கப்படவில்லை. இதனான், முக்கிய, சிறந்த நிகண்டுகளான
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி மற்றும் கயாதரம் முதலிய
நிகண்டுகளை மட்டும் இங்கு ஒப்பாய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேலே காட்டப்பட்ட அட்டவணையில் இருந்து, சில சொற்கள் சிவன்,
விஷ்ணு, அருகன், புத்தன் ஆகியோருக்கு பொதுவாக வழங்கப்பட்டிருப்பது
தெரியவரும். எனினும், பல குறள் சொற்றொடர்கள் அருகனுக்கு
மட்டும் சிறப்பாகக் குறிக்கப்பட்டிருப்பதும் காண்க.
எந்த ஒரு நூலாசிரியரும் தான் சார்ந்த சமயக் கடவுளர்களை
வணங்குவார்களேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும்,
மற்ற பாடல்களில் பிற சமயக் கடவுளர்களை வணங்குவதுத்
தொன்று மரபில்லை. இம்மரபின் அடிப்படையில் மேலேக்
காட்டப்பட்ட அட்டவணையை நோக்க, குறளாசிரியர் உள்ளத்தை
எளிதில் புரிந்துக் கொள்ளலாம். என்னை? :-)
இலக்கியச் சான்றுகள்
1.ஆதிபகவன்
“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே” – திருக்கலம்பகம்
“ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்” – திருப்பாமாலை
“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” – தோத்திரத் திரட்டு
2. வாலறிவன்
கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்
இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை
அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்
உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி
பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)
3. மலர்மிசை ஏகினான்
“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது”
– சிலப்பதிகாரம்-நாடுகாண் காதை -(200 - 205)
“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” – சூளாமணி - 187
“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 188
“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 189
“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” – அறநெறிச் சாரம் - 1
“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ!
நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” – திருப்பாமாலை - (1-5)
“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே” - திருக்கலம்பகம்
“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - திருக்கலம்பகம் - 74
“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - தோத்திரத் திரட்டு - 6
“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” – தோத்திரத் திரட்டு - 11
‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” – திருஇரட்டைமணி மாலை - 1
4. தனக்குவமை இல்லாதான்
(இச்சொற்றொடர் தமிழ்ச் சமண இலக்கியங்களில் குறித்திருக்கிறது. தற்போது என்
நினைவில் இல்லை. பின்னர் நூலறிந்து எழுதுகிறேன். வடமொழித் தரவுகளும்
கொடுக்க முடியும்.
5. அறவாழி அந்தணன்
“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே”
- திருநூற்றந்தாதி - 27
“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி - 1611
“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் - 25
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரனடி
பூண்டு கிடந்தால் புறத்திருந்த வெங்கூற்றம் போகும் போலும்
– திருக்கலம்பகம் – 58
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்பதிகாரம் (10:168-169)
பன்மாண் குணங்கட்கு இடனாய்ப்பகை நண்பொடு இல்லான்
தொன்மாண்பு அமைந்த புனைநல்லறம் துன்னி நின்ற
– சீவக சிந்தாமணி – 3
உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீயிலையேல்
– மேருமந்தரப் புராணம் – 128
7. இருவினையும் சேரா இறைவன்
“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”
– யசோதர காவியம் – 300
”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………” – ஜீவசம்போதனை – 27
8.பொறிவாயில் ஐந்தவித்தான்
பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே – ஜீவசம்போதனை – 1:29)
ஐவரை வென்றோன் அடியினை – சிலப்பதிகாரம் – 10:198)
பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வன் – சீவக சிந்தாமணி – 2563
பொறியிலா அறிவன் நீ – மேருமந்தர புராணம் – 1000
9. இறைவன்
கண்ணி னாலொன்றுங் காணாய் காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய் பிரிதலில் பேரின்ப முடையை
யுண்ணல் யாவது மிலையா யொளிதிக ழுருவமஃ துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா
– நீலகேசி - (159)
"கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்ப
மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்களின்மை
அடைவிலா ஆயுஇன்மை அந்தராயங்கள் இன்மை
உடையவன் யாவன் மற்று இவ்வுலகினுக்கு இறைவனாமே"
– சூடாமணி நிகண்டு (1)
குற்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம்
பற்ற வுரைத்தா னிறை – அருங்கலச் செப்பு (1)
நல்லான் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயரின்பமாக்கும்
செல்லான் தருமச் சுடரான் எனுந் தொன்மையினா
னெல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி – நீலகேசி – 1
10. எண்குணத்தான்
பண்ணவன் எண்குணன் – சிலப்பதிகாரம் – (10:188)
எண் குணனும் கோட்பட்டு – சீவக சிந்தாமணி – 1469
“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)
பூமாமகளும் கலைமாமகளும் புகழ்ந்த திரு
நாமம் ஆயிரத்து இருநான்மையும் பாடி நடிக்கும்படி
கோமான் திருமலைக் குணம் எண் இறைவன் வரதம்
தேமா மலரிற் மணித்தே வணங்குவன்
– சிகாமணிநாதர் அந்தாதி – 12
எட்டுவல் வினை வென்ற பின்னையோர்
எட்டுநற் குண வேவினை.. – நேமிநாதர் பதிகம் – 3
ஆரணி தாலுகா அருகேயிருக்கும் குன்றம் திருமலை. இதற்கு
பல்குன்றக் கோட்டம், வைகைமலை, வைகாவூர்த் திருமலை
போன்ற பெயர்களுள் எண்குண இறைவன் குன்றம் என்பதுவும்
நோக்கத்தக்கது.
கல்வெட்டுப் பாடல்:
“வஞ்சியர் குலபதி எழினி வகுத்த
வியக்க நியக்கியரோ
டெஞ்சிய வழிவ்ய் திருத்தி யிவ்வேண்குண
விறை திருமலை வைத்தான்
… தகடையர் காவலன்
விடுகாதழிய பெருமானோய்”
ஒவ்வொரு சொற்களுக்கும் குறைந்தது பத்து எடுத்துக்காட்டுகள்
கொடுக்க முடியும், விரிவஞ்சி கொடுக்கப்படவில்லை.
முடிபு:
இதுகாறும், பார்த்தத் தரவுகளின் மூலமும், நிகண்டுகளின்
தரவுகளின் அடிப்படையிலும் தேவர் பெருமான் உள்ளங்கவர்
இறைவன் அருகனேயாவார் என்பது அங்கை நெல்லிக்கனி!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
(குறிப்பு: * எண்குணன் – பிங்கல நிகண்டு சில ஏடுகளில் தான்
சிவனுக்கு எண்குணத்தான் என்று குறிக்கப்பட்டிருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு பாடல்களை திருத்தி பதிக்க
முயன்ற வரலாறும் இங்கு நினைக்கத்தக்கது.)
1. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.134)
2. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.15)
இன்றைய அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். நிகண்டு
வடமொழிச் சொல். இதன் தமிழ்ச் சொல் “உரிச்சொற்பனுவல்”
என்பது. சொற்பொருள் களஞ்சியங்களாகத் திகழும் நிகண்டுகள்
மொழி வளர்ச்சிக்கும், மொழி ஆர்வலர்க்கும் பெரும் துணையாகவிருப்பன.
பழமைக் கழிவதும், புதுமைப் புகுவதும் காலவியற்கை. ஒரு
சொல் கால வர்த்தமானங்களில் வெவ்வேறு பொருள்களை
கொண்டு வழங்குதல் கண்கூடு. ஆயின், நிகண்டுகள் அவற்றைத்
தொகுத்துவதுமல்லாமல் அவற்றை பின்னைத் தலைமுறையினருக்குப்
பதிவுச் செய்யும் காலக்கண்ணாடிகள் என்றால் மிகையாகாது.
தமிழ் நிகண்டுகள்
தமிழ் நிகண்டுகளின் தொடக்க காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு1
என்று அறிஞர்கள் கூறுவர். நிறைய தமிழ் நிகண்டுகள் இருந்தாலும்,
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி ஆகியவை மிக
முக்கியமானதாகக் கருதப் பட்டுவருகிறது. இவற்றில் திவாகரம்
காலத்தால் முந்தையது. இதனையொட்டியக் காலத்தில் எழுந்தது
பிங்கல நிகண்டு என்னும் பிங்கலாந்தை. சூடாமணி நிகண்டுக்
காலத்தால் மிக பிந்தையது. எனினும், மற்றைய எல்லா
நிகண்டுகளிலும் மிகப் பிரபலமானது இதுவேயாம். இதன்
காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு2 என்பர்.
திருக்குறள் கடவுள் வாழ்த்து
குறளாசிரியர் தேவர் பெருமான், கடவுள் வாழ்த்தில் தான்
வழிப்படும் இறைவனைப் போற்றி வணங்கியிருக்கிறார். அவர்
எந்த இறைவனை வணங்கியிருக்கிறார் என்பதை, இங்கு
நிகண்டுகள் மூலம் ஆராய்ந்து, ஒப்பு நோக்குவோம். பின்னர்,
அந்நிகண்டுகள் அவ்வாறு கூறுவதற்கு இலக்கியத் தரவுகள்
உள்ளனவா என்றும் பார்ப்போம்.
குறளாசிரியர், தான் வழிப்படும் இறைவனை கீழ் வரும்
சொற்களைக் கொண்டு குறித்திருக்கிறார். (மணக்குடவர் வரிசைப்படி)
1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. தனக்குவமை இல்லாதான்
5. அறவாழி அந்தணன்
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
7. இருவினையும் சேரா இறைவன்
8. பொறிவாயில் ஐந்தவித்தான்
9. இறைவன்
10. எண்குணத்தான்
கடவுள் வாழ்த்து - நிகண்டுகள் – ஒப்புநோக்கு
எல்லா நிகண்டுகளையும் ஒப்பு நோக்குவது இயலாதது. ஏனெனில்,
சில நிகண்டுகள் காலத்தால் மிக, மிக பிந்தியவை. மேலும்,
அந்நிகண்டுகளில் முக்கிய தெய்வங்களைக் குறிக்கவில்லை.
குறிப்பாக, நாமதீப நிகண்டில் அருகன் நாமங்கள் (பெயர்)
குறிக்கப்படவில்லை. இதனான், முக்கிய, சிறந்த நிகண்டுகளான
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி மற்றும் கயாதரம் முதலிய
நிகண்டுகளை மட்டும் இங்கு ஒப்பாய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேலே காட்டப்பட்ட அட்டவணையில் இருந்து, சில சொற்கள் சிவன்,
விஷ்ணு, அருகன், புத்தன் ஆகியோருக்கு பொதுவாக வழங்கப்பட்டிருப்பது
தெரியவரும். எனினும், பல குறள் சொற்றொடர்கள் அருகனுக்கு
மட்டும் சிறப்பாகக் குறிக்கப்பட்டிருப்பதும் காண்க.
எந்த ஒரு நூலாசிரியரும் தான் சார்ந்த சமயக் கடவுளர்களை
வணங்குவார்களேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும்,
மற்ற பாடல்களில் பிற சமயக் கடவுளர்களை வணங்குவதுத்
தொன்று மரபில்லை. இம்மரபின் அடிப்படையில் மேலேக்
காட்டப்பட்ட அட்டவணையை நோக்க, குறளாசிரியர் உள்ளத்தை
எளிதில் புரிந்துக் கொள்ளலாம். என்னை? :-)
இலக்கியச் சான்றுகள்
1.ஆதிபகவன்
“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே” – திருக்கலம்பகம்
“ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்” – திருப்பாமாலை
“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” – தோத்திரத் திரட்டு
2. வாலறிவன்
கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்
இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை
அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்
உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி
பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)
3. மலர்மிசை ஏகினான்
“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது”
– சிலப்பதிகாரம்-நாடுகாண் காதை -(200 - 205)
“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” – சூளாமணி - 187
“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 188
“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 189
“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” – அறநெறிச் சாரம் - 1
“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ!
நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” – திருப்பாமாலை - (1-5)
“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே” - திருக்கலம்பகம்
“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - திருக்கலம்பகம் - 74
“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - தோத்திரத் திரட்டு - 6
“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” – தோத்திரத் திரட்டு - 11
‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” – திருஇரட்டைமணி மாலை - 1
4. தனக்குவமை இல்லாதான்
(இச்சொற்றொடர் தமிழ்ச் சமண இலக்கியங்களில் குறித்திருக்கிறது. தற்போது என்
நினைவில் இல்லை. பின்னர் நூலறிந்து எழுதுகிறேன். வடமொழித் தரவுகளும்
கொடுக்க முடியும்.
5. அறவாழி அந்தணன்
“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே”
- திருநூற்றந்தாதி - 27
“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி - 1611
“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் - 25
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரனடி
பூண்டு கிடந்தால் புறத்திருந்த வெங்கூற்றம் போகும் போலும்
– திருக்கலம்பகம் – 58
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்பதிகாரம் (10:168-169)
பன்மாண் குணங்கட்கு இடனாய்ப்பகை நண்பொடு இல்லான்
தொன்மாண்பு அமைந்த புனைநல்லறம் துன்னி நின்ற
– சீவக சிந்தாமணி – 3
உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீயிலையேல்
– மேருமந்தரப் புராணம் – 128
7. இருவினையும் சேரா இறைவன்
“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”
– யசோதர காவியம் – 300
”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………” – ஜீவசம்போதனை – 27
8.பொறிவாயில் ஐந்தவித்தான்
பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே – ஜீவசம்போதனை – 1:29)
ஐவரை வென்றோன் அடியினை – சிலப்பதிகாரம் – 10:198)
பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வன் – சீவக சிந்தாமணி – 2563
பொறியிலா அறிவன் நீ – மேருமந்தர புராணம் – 1000
9. இறைவன்
கண்ணி னாலொன்றுங் காணாய் காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய் பிரிதலில் பேரின்ப முடையை
யுண்ணல் யாவது மிலையா யொளிதிக ழுருவமஃ துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா
– நீலகேசி - (159)
"கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்ப
மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்களின்மை
அடைவிலா ஆயுஇன்மை அந்தராயங்கள் இன்மை
உடையவன் யாவன் மற்று இவ்வுலகினுக்கு இறைவனாமே"
– சூடாமணி நிகண்டு (1)
குற்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம்
பற்ற வுரைத்தா னிறை – அருங்கலச் செப்பு (1)
நல்லான் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயரின்பமாக்கும்
செல்லான் தருமச் சுடரான் எனுந் தொன்மையினா
னெல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி – நீலகேசி – 1
10. எண்குணத்தான்
பண்ணவன் எண்குணன் – சிலப்பதிகாரம் – (10:188)
எண் குணனும் கோட்பட்டு – சீவக சிந்தாமணி – 1469
“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)
பூமாமகளும் கலைமாமகளும் புகழ்ந்த திரு
நாமம் ஆயிரத்து இருநான்மையும் பாடி நடிக்கும்படி
கோமான் திருமலைக் குணம் எண் இறைவன் வரதம்
தேமா மலரிற் மணித்தே வணங்குவன்
– சிகாமணிநாதர் அந்தாதி – 12
எட்டுவல் வினை வென்ற பின்னையோர்
எட்டுநற் குண வேவினை.. – நேமிநாதர் பதிகம் – 3
ஆரணி தாலுகா அருகேயிருக்கும் குன்றம் திருமலை. இதற்கு
பல்குன்றக் கோட்டம், வைகைமலை, வைகாவூர்த் திருமலை
போன்ற பெயர்களுள் எண்குண இறைவன் குன்றம் என்பதுவும்
நோக்கத்தக்கது.
கல்வெட்டுப் பாடல்:
“வஞ்சியர் குலபதி எழினி வகுத்த
வியக்க நியக்கியரோ
டெஞ்சிய வழிவ்ய் திருத்தி யிவ்வேண்குண
விறை திருமலை வைத்தான்
… தகடையர் காவலன்
விடுகாதழிய பெருமானோய்”
ஒவ்வொரு சொற்களுக்கும் குறைந்தது பத்து எடுத்துக்காட்டுகள்
கொடுக்க முடியும், விரிவஞ்சி கொடுக்கப்படவில்லை.
முடிபு:
இதுகாறும், பார்த்தத் தரவுகளின் மூலமும், நிகண்டுகளின்
தரவுகளின் அடிப்படையிலும் தேவர் பெருமான் உள்ளங்கவர்
இறைவன் அருகனேயாவார் என்பது அங்கை நெல்லிக்கனி!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
(குறிப்பு: * எண்குணன் – பிங்கல நிகண்டு சில ஏடுகளில் தான்
சிவனுக்கு எண்குணத்தான் என்று குறிக்கப்பட்டிருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு பாடல்களை திருத்தி பதிக்க
முயன்ற வரலாறும் இங்கு நினைக்கத்தக்கது.)
1. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.134)
2. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.15)
Thursday, June 23, 2011
ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – (திருக்குறள் – 543)
என்ற குறளில் வரும் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’
என்ற சொற்றொடர் மிக்க பொருள் பொதிந்தது. பரிமேலழகர்
தன் உரையில் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்பதற்கு
வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா
ஆகலின், அதனை அவற்றிற்கு “ஆதி” என்றும் அப்பெற்றியே
தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் “நின்றது” என்றும்
கூறினார்” என்று மிக, மிக குழப்பமாகப் பொருள்
செய்திருக்கிறார். ஆனால், மணக்குடவர் உரையில்
‘ஆதியாய் நின்றது’ என்பதற்கு முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று சிறந்த பொருள் செய்திருக்கிறார்.
அவற்றையும் ஈண்டு காண்போம்! இது நிற்க!!
“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்பதில் நின்றது
என்பது இறந்தக் காலத்தைக் குறித்து நின்றது. அக்குறிப்பை,
மணக்குடவர் மிக சரியாய் ‘முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து
உணர்த்தியிருக்கிறார். ஆதியாய் நின்றது எனும் போது
முதலாக நின்றது அல்லது அமைந்தது என்று தான் பொருள்
கொள்ளவேண்டும். அதனால், மன்னவனே அந்தணர்களையும்,
அவர்களின் அறத்தையும் தோற்றுவித்தான் அல்லது
அவற்றுக்குக் காரணமாக அமைந்தான் என்றுதான் இந்த
குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும். என்னை?
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
என்ற குறளில் ’அந்தணர் நூற்கும், அறத்திற்கும்’ என்ற
சொற்றொடரை ஆராய்வோம். பெரும்பாலோர், இச்சொற்றொடர்
வைதிகப் பிராமணர்களின் வேதத்தையும் அவற்றில் கூறப்பட்ட
அறத்தையும் குறிக்கிறது என்றுப் பொருள் கொள்கின்றனர்.
பிராமணர்களின் வேதங்கள் ரிக், யஜூர், சாம மற்றும்
அதர்வண என்பன.
பொதுவாக, வேதங்கள் அபௌருஷேயம்1 என்று அழைப்பார்கள்.
அபெளருஷேயம் என்றால் யாராலும் இயற்றப்பட்டதல்ல என்று
பொருள். யாராலும் இயற்றப்படவில்லை என்றால் மன்னவன்
எவ்வாறு அதற்கு முதலாகயிருந்திருக்க முடியும்? குறள் “ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்” என்று அழத்தம் திருத்தமாக கூறுகிறது.
அப்படியாயின் இங்கு கூறப்பட்ட அந்தணர் நூல் என்பதும் அறம்
என்பதும் வேறுப் பொருளைக் குறிக்கிறது என்பது திண்ணம்!
அவற்றையும் பார்ப்போம்!!
பரதச் சக்கரவர்த்தி
சமணச் சரித்திரத்தின் படி, இந்த யுகத்தின் முதல் சக்கரவர்த்தி
பரதர் ஆவார். இவர் ஆதி தீர்த்தங்கரரான ஆதிபகவன்
என்றழைக்கப்படும் ரிஷபதேவரின் முதல் மகன். இவருடைய
பெயராலேயே இப்பூமி (இந்தியா) பரத கண்டம் என்றும் பரத
க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியக்
குறிப்பு பாகவதப் புராணத்திலும்2 கூறப்பட்டிருக்கிறது.
முதல் சக்கரவர்த்தி
சமணச் சரித்திரத்தின்படி, இந்த பரதரே3 இந்த யுகத்தில் முதல்
சக்கரவர்த்தியாவார்.
அந்தணர் என்போர் அறவோர்
சமணச் சரித்திரத்தின்படி, ரிஷபதேவர் தன் காலத்தில் மக்களை
அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு, மூன்று வர்ணமாக
க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தியிருந்தார்.
ரிஷபதேவர்க் காலத்திற்கு பின், பரதர் ஆட்சிக்கு வந்தார். இவரே
பிராமணர்க்4 குலத்தைத் உருவாக்கி நான்கு வர்ணங்களாக ஆக்கினார்.
இவர் பிராமணர்களை எவ்வாறு, எந்த வகையினால் உருவாக்கினார்
என்பதையும் பார்ப்போம்.
அந்தணர்கள் தோற்றம்5
பரதர், தன் தந்தையான இரிஷபதேவரின் அறவுரைகளை மக்கள்
எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்று பார்க்க நினைத்தார். அதற்கு,
தான் தன்னுடைய நாட்டு மக்களை பார்ப்பதற்கு
ஆவலாகயிருப்பதாகவும் அதனால், மக்கள் அனைவரும் தன்
அரண்மனைக்கு வரவேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தார்.
தன் நான்கு அரண்மணை வாயில்களிலும் வழி நெடுக முளைத்த
தானியங்களை இறைத்து வைக்கவும் உத்தரவிட்டிருந்தார். மக்கள்
தன் அரசனைப் பார்க்கவும், அந்த பெரிய அரண்மணையைப்
பார்க்கவும் நான்கு வாயில்களிலும் வரத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு சிறந்த ஆடை அணிகலன்களைக் கொடுக்கும்படி
ஆணைப் பிறப்பித்திருந்தார். இவ்வாறு வெகு நாள்கள், மக்கள்
வந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம்,
பார்த்துக் கொண்டிருந்த பரத சக்கரவர்த்தி, வாயிற் காவலர்களை
அழைத்து, மக்கள் யாவரும் வந்தார்களா என்று வினவினான்.
அதற்கு அக்காவலர்கள், சிலர் மட்டும் அரண்மணைக்கு
வெளியேயே நின்று விட்டு போய்விட்டார்கள் என்பதையறிந்து,
அவர்களை தன்னை வேறொரு மாளிகையில் சந்திக்கும்படி
சொல்லியனுப்பினான். அவ்வாறே, அவர்களும் அம்மாளிகைக்கு
வந்திருந்தார்கள். பரத சக்கரவர்த்தி, ஏன் தன்னை அரண்மணையில்
சந்திக்க வரவில்லை என்று அம்மக்களை வினவினார். அதற்கு,
அரசே நாங்கள் தங்களை சந்திக்க ஒவ்வொரு நாளும் வரும்
போதும் அரண்மணை வாயில்களில் முளைத்த தானியங்கள்
இறைந்து கிடப்பதைப் பார்த்தோம். முளைத்தத் தானியங்களுக்கு
உயிர் உண்டு என்பதால், அவற்றிற்கு ஊறு விளைவிக்கக்கூடாது
என்பதால் தங்களை சந்திக்காமலே திரும்பி விட்டோம் என்று
பதில் கூறியதைக் கேட்ட பரத சக்கரவர்த்தி பெரிதும் உவகைக்
கொண்டு, நீங்கள், ஆதிபகவன்/ஆதிநாதர் பகர்ந்த அறத்தை
பிறழாமல் கடைப்பிடித்து வருவதனால், இன்று முதல் பிராமணர்கள்
என்று அழைக்கப்படுவீர்கள் என்றும் ஆதிபகவனால் அருளப்பட்ட
அறத்தை எக்காலமும் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
இவர்களையே, தேவர் பெருமான் (குறளாசிரியர்)
“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்” – குறள் (30)
என்று நமக்குக் காட்டியிருக்கிறார்.
முடிபு:
இக்குறளில் வரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என்று
வருவது அறவோர்களைக் குறித்தும் மற்றும் அவர்களுடைய
செந்தண்மை பூண்டு ஒழுகும் அறத்தையும் குறிக்கிறது
என்பது அங்கை நெல்லிக்கனி. இதனால், பரத சக்கரவர்த்தியே
ஆதியாய் நின்ற மன்னன் என்பது வெள்ளிடை மலை.
என்னை?
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்புகள்:
1 - http://www.tamilhindu.com/2008/07/special-feature-vedam/
2 - http://www.krishnamurthys.com/profvk/VK2/SBAB7.html
[..The story of JaDa-Bharata
The history of Priyavrata, the first son of Manu Svayambhuva,
is taken up in the fifth skanda. Privrata’s son was Agnidhra
and his son was Nabhi. Nabhi was a great and devout ruler
and to him was born another avatar of Mahavishnu, by name
Rishabha. Rishabha, also called Rishabhadeva had 100 sons
of whom the eldest was Bharata whose story we are going to
see elaborately.
(Incidentally it is this Bharata after whom this country
was called BhArata-varsha; before that it was called aja-nAbha varsha)…]
3 - http://en.wikipedia.org/wiki/Chakravartin
The list of 12 Chakravartins as per Jainism is as follows:[10]
1. Bharata - Lord Rishabha's son.
2. Sagara - Anscestor of Bhagiratha as per Hindu puranas.
3. Maghavan
4. Sanatkumara
5. Shantinath - (also a Tirthankara)
6. Kunthunath - (also a Tirthankara)
7. Aranath - (also a Tirthankara)
8. Subhauma
9. Padmanabha
10. Harishena
11. Jayasena
12. Brahmadatt
In Jainism, a chakravartin was characterized by possession of
saptaratna, that is, the seven jewels, consisting of, charka,
queen, chariot, jewel, wealth, horse, and elephant.
Additionally, the list also included a prime minister and
a son (navaratna). A chakravartin is considered an ideal
human being endowed with thirty-two major signs of excellence
and many minor signs of excellence.
4 - http://en.wikipedia.org/wiki/Kshatriya (Jaina origin)
5 – ஸ்ரீ புராணம்
Labels:
அந்தணர்,
அறம்,
ஆதிபகவன்,
சமணம்,
திருக்குறள்
Wednesday, June 01, 2011
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
- திருக்குறள் – துறவு – 346
இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற
தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல்
பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள
உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள்
உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள
உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது
இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது
முக்கியம்.
அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.
முதலில் பரிமேலழகர்
உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.
மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால்
பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை
’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை
விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது
என்பது கூறப்பட்டது.
அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,
உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
பரிமேலழகர் உரைவேறுபாடு
வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக்
காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப்
போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.
எவ்வாறெனின்,
“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு
அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப்
பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும்
ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள்
மாற்றம் தெரியவரும்.
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள்
(தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும்
என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்
எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது.
அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள்
மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.
மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு
மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய –
தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.
சமண அண்டவியல்
சமணக் கோட்பாட்டின்படி, உயரின் தன்மைகளில், மேல் எழுப்பிச்
செல்லும் இயல்பும் ஒன்று. இதை
“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை
உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும்
இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை
“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி,
சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம்,
உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.
மூன்று உலகம்
சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக்
கொண்டது.
மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த
இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)
மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள்,
பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)
கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது.
நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)
இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற்க்
காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர்
என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.
“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”
என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.
மேல் உலகம் – ஊர்த்வ லோகம்
மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம்.
இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும்
பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது.
வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண
கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.
இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.
“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”
என்று மேருமந்தர புராணம் பகரும்.
உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை
உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது
விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம்,
முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம்,
நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி,
திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில்
பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை,
மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.
“கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
- சீவக சிந்தாமணி (3117)
என்றும்,
”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”
- சூளாமணி (2125)
என்றும்,
”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
- திருக்குறள் (3)
முடிபு
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.
இரா.பானுகுமார்,
சென்னை
பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!
http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
- திருக்குறள் – துறவு – 346
இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற
தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல்
பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள
உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள்
உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள
உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது
இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது
முக்கியம்.
அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.
முதலில் பரிமேலழகர்
உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.
மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால்
பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை
’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை
விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது
என்பது கூறப்பட்டது.
அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,
உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
பரிமேலழகர் உரைவேறுபாடு
வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக்
காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப்
போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.
எவ்வாறெனின்,
“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு
அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப்
பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும்
ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள்
மாற்றம் தெரியவரும்.
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள்
(தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும்
என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்
எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது.
அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள்
மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.
மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு
மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய –
தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.
சமண அண்டவியல்
சமணக் கோட்பாட்டின்படி, உயரின் தன்மைகளில், மேல் எழுப்பிச்
செல்லும் இயல்பும் ஒன்று. இதை
“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை
உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும்
இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை
“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”
என்று மேருமந்தர புராணம் கூறும்.
இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி,
சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம்,
உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.
மூன்று உலகம்
சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக்
கொண்டது.
மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த
இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)
மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள்,
பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)
கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது.
நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)
இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற்க்
காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர்
என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.
“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”
என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.
மேல் உலகம் – ஊர்த்வ லோகம்
மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம்.
இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும்
பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது.
வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண
கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.
இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.
“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”
என்று மேருமந்தர புராணம் பகரும்.
உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை
உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது
விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம்,
முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம்,
நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி,
திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில்
பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை,
மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.
“கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
- சீவக சிந்தாமணி (3117)
என்றும்,
”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”
- சூளாமணி (2125)
என்றும்,
”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
- திருக்குறள் (3)
முடிபு
வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.
இரா.பானுகுமார்,
சென்னை
பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!
http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)
Monday, May 23, 2011
ஓம் அல்லது ஓங்காரம்
ஓங்காரம் என்னும் பஞ்சபரமேஷ்டி
வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல,
சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக்
கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது
ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இந்து மதத்தவர்களிடையே வளர்ந்ததன்
காரணமாக ஓம் என்பது இந்து மத அஷரம் (பதம்) என்றே
நினைத்திருந்தேன். திரைப்படங்களில், சடாமுடியுடன் தவசி
ஒருவர், சதா ஓம் என்று உச்சரித்துக் கொண்டேயிருப்பது
போல் வந்த காட்சிகளும் அப்படி நினைக்க ஒரு காரணமாக
இருந்திருக்கலாம்.
ஒரு நாள் என் தாத்தாவிடம் விளக்கம் கேட்டதற்கு ஓம்
என்பது பஞ்ச பரமேஷ்டிகளின் ஸ்வரூபம் என்றார். ஆனால்
அதற்கு மேல் அவர் விளக்கங் சொல்லவில்லை. அப்போது,
சிறுவனான எனக்கு புரியாது என்று நினைத்தாரோ என்னவோ!
இன்றைய நிலையில், யாந்தமிழ்ப் பண்டிதனல்லன், ஆகினும்
தமிழ்ப் (பா) படித்தால் புரிகிறது. எனினும், சங்கப் பாடல்கள்
உரையில்லாமல் புரிவது கடினமாகத்தான் இருக்கிறது. ஓம்
என்னும் பதத்தைப் பற்றி (சமணத்தில்) யான் அறிந்ததை
இங்கு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். குறையிருப்பின்
தவறாமல் சுட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!
ஓம் எனும் பிரணவம்
ஓம் என்னும் அசஷரம் ஏறக்குறைய எல்லா இந்திய
சமயங்களிலும் காணலாம். அவைகள் ஓம் என்ற
பதத்திற்கு தத்தம் கருத்தை விளக்கிச் செல்கின்றன.
தற்போது, இந்து சமயம் என்று அறியப்படும் பிரிவுகளில்
ஒன்றான சைவச் சமயத்தில் ஓம் என்ற அஷரத்திற்கு
கீழ்க் காணும் விளக்கம் தரப்படுகிறது.
“ஓம் எனும் பிரணவம் ஓர் எழுத்துப்போல் தோன்றினாலும்
அதில் அ-உ-ம் எனும் மூன்று எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன”1
என்றும்,
”ஆதியில் இறைவனிடத்திலிருந்து தோன்றிய ஒலி நாதமும்,
பிந்துவுமாகும். நாதமும் பிந்துவும் சேர்ந்ததே ஓங்காரமாகும்.”2
என்றும்,
”பிரணவமே எல்லா மந்திரங்களுக்கும் மூல மந்திரமாகும்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முதலில் கூறியே எல்லா
மந்திரங்களையும் கூறவேண்டுமெனும் நியதி ஏற்பட்டுள்ளது”3
என்று கூறுகிறார் மகாவித்துவான்.கே.ஆறுமுக நாவலர்.
ஓம் என்ற சொல்லாட்சிக்கு, யான் அறிந்தவரை மேல் சொன்ன
விளக்கத்தையொட்டியே அவைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.
பெளத்தச் சமயத்தில் என்ன சொல்லப்பட்டிருகிறது என்பதை
திரு.வினோத் ராஜன் அவர்களிடம் கேட்கவேண்டும். :-)
ஓம் என்ற சொல்லாட்சி சமணத்திலும் பயின்று வருகிறது.
சமணர்களின் மூல மந்திரம் பஞ்ச மந்திரம். அவற்றின்
சுருக்கமே ”ஓம்”. ஓம் என்றால் பஞ்ச மந்திரத்தை நமஸ்காரம்
செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
பஞ்ச மந்திரம்
நமோ அரஹந்தாணம் (அருகரை வணங்குகிறேன்)
நமோ சித்தாணம் (சித்தரை அல்லது அசரீரியை வணங்குகிறேன்)
நமோ ஆயிரியாணம் (ஆச்சாரியரை வணங்குகிறேன்)
நமோ உவச்சாயாணம் (உபாத்தியாயரை வணங்குகிறேன்)
நமோ லோயே சவ்வ சாகுணம் (சாதுக்களை அல்லது முனிவர்களை வணங்குகிறேன்)4
இது சமணர்களின் முழுமுதற் மூல மந்திரம். பஞ்ச மந்திரம்
எனப்படும். இல்லறத்தாரும், துறவறத்தாரும் ஐந்து வேளையும்
உச்சரிக்கவேண்டிய மந்திரம். இந்த மந்திரத்திற்கு பஞ்ச நமஸ்காரம் 5,
ஓங்காரம் 6, நமோங்காரம் , மொழிப்பொருள் தெய்வம்7,
ஐந்தெழுத்து மந்திரம் 8, திருமந்திரம் 9, பஞ்ச பரமேஷ்டி மந்திரம்10
என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
“பஞ்ச மந்திரம் பாபநாசனம்”11 என்பது சமணர்களின் அசைக்கமுடியாத
நம்பிக்கை. பஞ்ச மந்திரம் உச்சரிப்பால் நல்வினைக் கட்டு ஏற்படும்
என்றும் அறச்சிந்தனை ஏற்படும் என்றும் சமணர்களின் நம்பிக்கை.
இதற்கு சாட்சிப் பகரும் வண்ணம்,
“...வைதிக பிராமணர்கள் தங்களுக்கென்று செய்து வைத்த
சோற்றை ஒரு நாய் உண்ண, ஆத்திரம் அடைந்த அந்த
பிராமணர்கள் அந்நாயைக் கல்லாகும், தடியாலும்
அடிக்கிறார்கள். குற்றூயிருமாய், குலையுயிருமாய்
இருக்கும் அந்த நாயின் காதில் பஞ்ச நமஸ்கார
மந்திரத்தை ஓதுகிறான் சீவக நம்பி. சாகும் தருவாயில்
இந்த நமோங்கார மந்திரத்தைக் கேட்டதினால், அந்த நாயானது
தேவலோகத்தில் தேவனாகப் பிறந்ததாக”12
சொல்கிறது தமிழ்ச் சமண இலக்கியம்.
மேலும் பாட்டிற்கு அருங்கலமாகும் இந்த பஞ்ச மந்திரம்
என்று கீழே வரும் பாட்டு சொல்கிறது.
”பூவுக் கருங்கலம் பொங்குசெந் தாமரை
தேவர்க் கருங்கலம் திங்கள் முக்குடை
பாவுக் கருங்கலம் பஞ்ச மந்திரம்
நாவுக்கு அருங்கலம் நமோஅரஹந் தாணமே13!”
ஓம்
சமணத்தில் ஓம் எனும் அஷரம் பஞ்ச பரமேஷ்டிகளான
அரஹந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர் மற்றும்
சாதுக்களைக் குறிக்கும். . பஞ்ச மந்திரத்தில் முதல் எழுத்தைக்
கொண்டு அ சி ஆ உ சா என்று சுருக்கமாக ஐந்தெழுத்து
மந்திரமாகப் பயன்படுத்துவார்கள். பஞ்ச நமஸ்காரத்தின்
முழுப் பலனையும் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் பெறலாம்.
இவ்வாறு சுருக்கிய ஐந்தெழுத்து மந்திரத்தை மேலும்
சுருக்கி ஓம் என்றும் கூறுவர். அவ்வாறு உச்சரிப்பதால்
முழு மந்திரமும் சொன்ன பலனும் இந்த ஓம் என்னும்
பதத்தை உச்சரிப்பதினால் கிடைக்கும். இதுவே ஓங்காரம்
என்னும் பஞ்ச மந்திரமாம்.
தமிழ் இலக்கியத்திலேயே ஓம் என்பதற்கான விரிவுச் சமண
இலக்கியத்தில்தான் காணமுடிகிறது.
ஓங்காரப் புணர்ச்சி
இனி, பஞ்ச மந்திரத்தில் உள்ள ஐந்தெழுத்துக்கள் எவ்வாறு ஓம்
என்று பரிணமிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
எண் பஞ்ச பரமேஷ்டிகள் முதலெழுத்து எழுத்துப் புணர்ச்சி
1 அருகர் அ -
2 அசரீரி அ அ+அ = ஆ
3 ஆசார்ரியார் ஆ ஆ+ஆ = ஆ
4 உபாத்தியாயர் உ ஆ+உ = ஓ
5 முனிகள் (ம்+உ=மு) ம் ஓ+ம் = ஓம்
இவற்றை, சமண இலக்கியங்களில் பயின்று வருவதையுங் காணலாம்.
“அறிவரிய குணத்தருக னசரீரி யாசிரிய னுவாத்தி கோதஞ்
செறிவரிய முனிவரெனுந் திருநாம முதலெழுத்தோரைந்துஞ் சேர்ந்து
பிறிவரிய வோங்கார முன்னுரைப்பர் பின்னுமதன் பெருமை யோரார்
பொறிவழியில் வருநாதர் பொருளில்வரும் பெயர்புனையும் புவனத்தாரே”14
உரை: அறிதற்கு அரிதாகிய குணங்களையுடைய அருகனும்,
சித்தரும், ஆசாரியனும்,உபாத்தியாயனும் குரோதமானது
இல்லாத சாதுக்களும் என்று சொல்லப்படும் திருப்பெயரினுடைய
ஆதியெழுத்துக்களைந்தும் கூடிப்பிறிதற்கரிதாகிய ஓங்காரத்தை
முன்னே சொல்லுவார்; பின்பும் அவ்வோங்காரத்தினுடைய
உற்பத்தியினது மேன்மையைப் பகுத்தறியார், ஐம்பொறியுனுடைய
மார்க்கத்தில் திரிகின்ற தெய்வங்களுக்குப் பொருளில்லாமல்
வறுமையாகிய நாமத்தை அலங்கரித்துச் சொல்லும் உலகத்தார்
என்றவாறு!
விரிவுரை: இதனால் ஓங்காரம் பஞ்சபரமேஷ்டி ஸ்வரூபம் என்பது
கூறப்பட்டது.
மேலும், வடமொழிச் சூத்திரமும்,
“அரஹந்தா அசரீரா ஆயிரியா தஹ உவத்தாயா முனினோ|
படமம் கரணம் பண்ணோ ஓம்கார பஞ்ச பரமேஷ்டி ||15
விளக்குவதைக் காணலாம்.
முடிபு: ஓங்காரம் என்பது பஞ்சபரமேஷ்டிகளின் குறியீடு என்பதும்
அவற்றை உச்சரிப்பதால் நம் வினைகள் தொலையும் என்பது திண்ணம்!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
1. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 77 (தொண்டன் காரியாலய வெளியீடு)
2. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 78 (தொண்டன் காரியாலய வெளியீடு)
3. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 79 (தொண்டன் காரியாலய வெளியீடு)
4. கிரியா கலாபம் – பாடல் – 118
”கா ஊண ணமோங்காரம் தஹேவ சித்தாணம்
ஆயிரிய உவச்சா யாணம்
ளோயம்மிய ஸ்வ்வ ஸாஹீணம்”
5. கிரியா கலாபம் – பாடல் - 114
”ஜிந ஸித்த சூரிதேசக
ஸாதுவரா நமலகுண கணோ பேதாந்
பஞ்ச நமஸ்கார பதைஸ் த்ரிசந்த்ய
மபி நெளமி ஸம் ப்ரீத்யா”
6. திருக்கலம்பகப் பாடல்
7. சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – நாடுகாண் காதை – பாடல் வரி - 100
8. திருமேற்றிசை அந்தாதி – பாடல் – 91
”ஓளிக்கும் பழவினை நாளிடைப் பார்த்து உயிர்கோள் இழைந்து
விளிக்கும் கடுங் கூற்றினும் வெகுளாது மிகைத்து எழுந்து
களிக்கும் பொறிப்பகை ஐந்தும் பொறிப்பணக் காவாணத்தார்
அளிக்கும் பதம் ஐந்தில் ஐந்தெழுத்தே கொண்டு அவித்தனமே”
9. திருமேற்றிசை அந்தாதி – பாடல் – 98
”அழியோம் விரதம் திருமந்திரத்து எழுத்து ஐந்தும் அன்றி
மொழியோம் மறந்தும் பரச துறைமூர்க்கர் சொல் கேட்டு
இழியோம் இழித்தே மறை பழிப் பாரையும் யாம் அழித்துப்
பழியோம் மணி அரங்கப் பணியானைப் பணிந்த பின்னே”
10. பஞ்ச பரமேஸ்டி மந்திரம்
11. கிரியா கலாபம் – பாடல் – 116
”ஏஷ பஞ்ச நமஸ்கார
பாப கர்ம விநாசந
மங்களா நாஞ்ச ஸர்வேஷாம்
ப்ரதமம் மங்களம் பவேத்”
12. சீவக சிந்தாமணிப் பாடல்
13. தோத்திரத் திரட்டு –
14. திருக்கலம்பகம் – பாடல் – 41
15. பதார்த்தசாரம் – உபயோகாதிகாரம்
வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல,
சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக்
கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது
ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இந்து மதத்தவர்களிடையே வளர்ந்ததன்
காரணமாக ஓம் என்பது இந்து மத அஷரம் (பதம்) என்றே
நினைத்திருந்தேன். திரைப்படங்களில், சடாமுடியுடன் தவசி
ஒருவர், சதா ஓம் என்று உச்சரித்துக் கொண்டேயிருப்பது
போல் வந்த காட்சிகளும் அப்படி நினைக்க ஒரு காரணமாக
இருந்திருக்கலாம்.
ஒரு நாள் என் தாத்தாவிடம் விளக்கம் கேட்டதற்கு ஓம்
என்பது பஞ்ச பரமேஷ்டிகளின் ஸ்வரூபம் என்றார். ஆனால்
அதற்கு மேல் அவர் விளக்கங் சொல்லவில்லை. அப்போது,
சிறுவனான எனக்கு புரியாது என்று நினைத்தாரோ என்னவோ!
இன்றைய நிலையில், யாந்தமிழ்ப் பண்டிதனல்லன், ஆகினும்
தமிழ்ப் (பா) படித்தால் புரிகிறது. எனினும், சங்கப் பாடல்கள்
உரையில்லாமல் புரிவது கடினமாகத்தான் இருக்கிறது. ஓம்
என்னும் பதத்தைப் பற்றி (சமணத்தில்) யான் அறிந்ததை
இங்கு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். குறையிருப்பின்
தவறாமல் சுட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!
ஓம் எனும் பிரணவம்
ஓம் என்னும் அசஷரம் ஏறக்குறைய எல்லா இந்திய
சமயங்களிலும் காணலாம். அவைகள் ஓம் என்ற
பதத்திற்கு தத்தம் கருத்தை விளக்கிச் செல்கின்றன.
தற்போது, இந்து சமயம் என்று அறியப்படும் பிரிவுகளில்
ஒன்றான சைவச் சமயத்தில் ஓம் என்ற அஷரத்திற்கு
கீழ்க் காணும் விளக்கம் தரப்படுகிறது.
“ஓம் எனும் பிரணவம் ஓர் எழுத்துப்போல் தோன்றினாலும்
அதில் அ-உ-ம் எனும் மூன்று எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன”1
என்றும்,
”ஆதியில் இறைவனிடத்திலிருந்து தோன்றிய ஒலி நாதமும்,
பிந்துவுமாகும். நாதமும் பிந்துவும் சேர்ந்ததே ஓங்காரமாகும்.”2
என்றும்,
”பிரணவமே எல்லா மந்திரங்களுக்கும் மூல மந்திரமாகும்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முதலில் கூறியே எல்லா
மந்திரங்களையும் கூறவேண்டுமெனும் நியதி ஏற்பட்டுள்ளது”3
என்று கூறுகிறார் மகாவித்துவான்.கே.ஆறுமுக நாவலர்.
ஓம் என்ற சொல்லாட்சிக்கு, யான் அறிந்தவரை மேல் சொன்ன
விளக்கத்தையொட்டியே அவைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.
பெளத்தச் சமயத்தில் என்ன சொல்லப்பட்டிருகிறது என்பதை
திரு.வினோத் ராஜன் அவர்களிடம் கேட்கவேண்டும். :-)
ஓம் என்ற சொல்லாட்சி சமணத்திலும் பயின்று வருகிறது.
சமணர்களின் மூல மந்திரம் பஞ்ச மந்திரம். அவற்றின்
சுருக்கமே ”ஓம்”. ஓம் என்றால் பஞ்ச மந்திரத்தை நமஸ்காரம்
செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
பஞ்ச மந்திரம்
நமோ அரஹந்தாணம் (அருகரை வணங்குகிறேன்)
நமோ சித்தாணம் (சித்தரை அல்லது அசரீரியை வணங்குகிறேன்)
நமோ ஆயிரியாணம் (ஆச்சாரியரை வணங்குகிறேன்)
நமோ உவச்சாயாணம் (உபாத்தியாயரை வணங்குகிறேன்)
நமோ லோயே சவ்வ சாகுணம் (சாதுக்களை அல்லது முனிவர்களை வணங்குகிறேன்)4
இது சமணர்களின் முழுமுதற் மூல மந்திரம். பஞ்ச மந்திரம்
எனப்படும். இல்லறத்தாரும், துறவறத்தாரும் ஐந்து வேளையும்
உச்சரிக்கவேண்டிய மந்திரம். இந்த மந்திரத்திற்கு பஞ்ச நமஸ்காரம் 5,
ஓங்காரம் 6, நமோங்காரம் , மொழிப்பொருள் தெய்வம்7,
ஐந்தெழுத்து மந்திரம் 8, திருமந்திரம் 9, பஞ்ச பரமேஷ்டி மந்திரம்10
என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
“பஞ்ச மந்திரம் பாபநாசனம்”11 என்பது சமணர்களின் அசைக்கமுடியாத
நம்பிக்கை. பஞ்ச மந்திரம் உச்சரிப்பால் நல்வினைக் கட்டு ஏற்படும்
என்றும் அறச்சிந்தனை ஏற்படும் என்றும் சமணர்களின் நம்பிக்கை.
இதற்கு சாட்சிப் பகரும் வண்ணம்,
“...வைதிக பிராமணர்கள் தங்களுக்கென்று செய்து வைத்த
சோற்றை ஒரு நாய் உண்ண, ஆத்திரம் அடைந்த அந்த
பிராமணர்கள் அந்நாயைக் கல்லாகும், தடியாலும்
அடிக்கிறார்கள். குற்றூயிருமாய், குலையுயிருமாய்
இருக்கும் அந்த நாயின் காதில் பஞ்ச நமஸ்கார
மந்திரத்தை ஓதுகிறான் சீவக நம்பி. சாகும் தருவாயில்
இந்த நமோங்கார மந்திரத்தைக் கேட்டதினால், அந்த நாயானது
தேவலோகத்தில் தேவனாகப் பிறந்ததாக”12
சொல்கிறது தமிழ்ச் சமண இலக்கியம்.
மேலும் பாட்டிற்கு அருங்கலமாகும் இந்த பஞ்ச மந்திரம்
என்று கீழே வரும் பாட்டு சொல்கிறது.
”பூவுக் கருங்கலம் பொங்குசெந் தாமரை
தேவர்க் கருங்கலம் திங்கள் முக்குடை
பாவுக் கருங்கலம் பஞ்ச மந்திரம்
நாவுக்கு அருங்கலம் நமோஅரஹந் தாணமே13!”
ஓம்
சமணத்தில் ஓம் எனும் அஷரம் பஞ்ச பரமேஷ்டிகளான
அரஹந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர் மற்றும்
சாதுக்களைக் குறிக்கும். . பஞ்ச மந்திரத்தில் முதல் எழுத்தைக்
கொண்டு அ சி ஆ உ சா என்று சுருக்கமாக ஐந்தெழுத்து
மந்திரமாகப் பயன்படுத்துவார்கள். பஞ்ச நமஸ்காரத்தின்
முழுப் பலனையும் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் பெறலாம்.
இவ்வாறு சுருக்கிய ஐந்தெழுத்து மந்திரத்தை மேலும்
சுருக்கி ஓம் என்றும் கூறுவர். அவ்வாறு உச்சரிப்பதால்
முழு மந்திரமும் சொன்ன பலனும் இந்த ஓம் என்னும்
பதத்தை உச்சரிப்பதினால் கிடைக்கும். இதுவே ஓங்காரம்
என்னும் பஞ்ச மந்திரமாம்.
தமிழ் இலக்கியத்திலேயே ஓம் என்பதற்கான விரிவுச் சமண
இலக்கியத்தில்தான் காணமுடிகிறது.
ஓங்காரப் புணர்ச்சி
இனி, பஞ்ச மந்திரத்தில் உள்ள ஐந்தெழுத்துக்கள் எவ்வாறு ஓம்
என்று பரிணமிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
எண் பஞ்ச பரமேஷ்டிகள் முதலெழுத்து எழுத்துப் புணர்ச்சி
1 அருகர் அ -
2 அசரீரி அ அ+அ = ஆ
3 ஆசார்ரியார் ஆ ஆ+ஆ = ஆ
4 உபாத்தியாயர் உ ஆ+உ = ஓ
5 முனிகள் (ம்+உ=மு) ம் ஓ+ம் = ஓம்
இவற்றை, சமண இலக்கியங்களில் பயின்று வருவதையுங் காணலாம்.
“அறிவரிய குணத்தருக னசரீரி யாசிரிய னுவாத்தி கோதஞ்
செறிவரிய முனிவரெனுந் திருநாம முதலெழுத்தோரைந்துஞ் சேர்ந்து
பிறிவரிய வோங்கார முன்னுரைப்பர் பின்னுமதன் பெருமை யோரார்
பொறிவழியில் வருநாதர் பொருளில்வரும் பெயர்புனையும் புவனத்தாரே”14
உரை: அறிதற்கு அரிதாகிய குணங்களையுடைய அருகனும்,
சித்தரும், ஆசாரியனும்,உபாத்தியாயனும் குரோதமானது
இல்லாத சாதுக்களும் என்று சொல்லப்படும் திருப்பெயரினுடைய
ஆதியெழுத்துக்களைந்தும் கூடிப்பிறிதற்கரிதாகிய ஓங்காரத்தை
முன்னே சொல்லுவார்; பின்பும் அவ்வோங்காரத்தினுடைய
உற்பத்தியினது மேன்மையைப் பகுத்தறியார், ஐம்பொறியுனுடைய
மார்க்கத்தில் திரிகின்ற தெய்வங்களுக்குப் பொருளில்லாமல்
வறுமையாகிய நாமத்தை அலங்கரித்துச் சொல்லும் உலகத்தார்
என்றவாறு!
விரிவுரை: இதனால் ஓங்காரம் பஞ்சபரமேஷ்டி ஸ்வரூபம் என்பது
கூறப்பட்டது.
மேலும், வடமொழிச் சூத்திரமும்,
“அரஹந்தா அசரீரா ஆயிரியா தஹ உவத்தாயா முனினோ|
படமம் கரணம் பண்ணோ ஓம்கார பஞ்ச பரமேஷ்டி ||15
விளக்குவதைக் காணலாம்.
முடிபு: ஓங்காரம் என்பது பஞ்சபரமேஷ்டிகளின் குறியீடு என்பதும்
அவற்றை உச்சரிப்பதால் நம் வினைகள் தொலையும் என்பது திண்ணம்!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
1. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 77 (தொண்டன் காரியாலய வெளியீடு)
2. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 78 (தொண்டன் காரியாலய வெளியீடு)
3. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 79 (தொண்டன் காரியாலய வெளியீடு)
4. கிரியா கலாபம் – பாடல் – 118
”கா ஊண ணமோங்காரம் தஹேவ சித்தாணம்
ஆயிரிய உவச்சா யாணம்
ளோயம்மிய ஸ்வ்வ ஸாஹீணம்”
5. கிரியா கலாபம் – பாடல் - 114
”ஜிந ஸித்த சூரிதேசக
ஸாதுவரா நமலகுண கணோ பேதாந்
பஞ்ச நமஸ்கார பதைஸ் த்ரிசந்த்ய
மபி நெளமி ஸம் ப்ரீத்யா”
6. திருக்கலம்பகப் பாடல்
7. சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – நாடுகாண் காதை – பாடல் வரி - 100
8. திருமேற்றிசை அந்தாதி – பாடல் – 91
”ஓளிக்கும் பழவினை நாளிடைப் பார்த்து உயிர்கோள் இழைந்து
விளிக்கும் கடுங் கூற்றினும் வெகுளாது மிகைத்து எழுந்து
களிக்கும் பொறிப்பகை ஐந்தும் பொறிப்பணக் காவாணத்தார்
அளிக்கும் பதம் ஐந்தில் ஐந்தெழுத்தே கொண்டு அவித்தனமே”
9. திருமேற்றிசை அந்தாதி – பாடல் – 98
”அழியோம் விரதம் திருமந்திரத்து எழுத்து ஐந்தும் அன்றி
மொழியோம் மறந்தும் பரச துறைமூர்க்கர் சொல் கேட்டு
இழியோம் இழித்தே மறை பழிப் பாரையும் யாம் அழித்துப்
பழியோம் மணி அரங்கப் பணியானைப் பணிந்த பின்னே”
10. பஞ்ச பரமேஸ்டி மந்திரம்
11. கிரியா கலாபம் – பாடல் – 116
”ஏஷ பஞ்ச நமஸ்கார
பாப கர்ம விநாசந
மங்களா நாஞ்ச ஸர்வேஷாம்
ப்ரதமம் மங்களம் பவேத்”
12. சீவக சிந்தாமணிப் பாடல்
13. தோத்திரத் திரட்டு –
14. திருக்கலம்பகம் – பாடல் – 41
15. பதார்த்தசாரம் – உபயோகாதிகாரம்
Monday, January 31, 2011
ஆபயன் குன்றும்
ஆபயன் குன்றும்
என் நண்பர் ஒருவர் (மின்தமிழ்க் குழுமத்தில் இருப்பவர்) கீழேக்
கொடுக்கப்பட்டுள்ள இடுகைகளைத் தனி மடலில் குறித்திருந்தார்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18677-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/
http://www.jeyamohan.in/?p=1422
http://www.tamilbrahmins.com/general-discussions/5557-enge-brahmanana-3.html
இந்தச் சுட்டிகளில், “ஆபயன் குன்றும்…” என்ற குறளுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பற்றி என் கருத்தை
பதிய சொன்னார். சமணக் குறளுக்கு அந்தக் குறள் எவ்வாறு
பொருந்தும் என்றும் தனி பதிவிட்டு என் பிளாகில் எழுதுமாறும்
கேட்டிருந்தார்.
இக்குறளை யான் முன்னமே (அகத்தியக் குழுமத்தில்) எதிர்க்
கொண்டிருக்கிறேன். குறள் பற்றிய விவாதத்தில் எவராவது
ஒருவர், இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்ல போக,
அவற்றை அப்படியே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு,
எல்லா வலைப்பக்கத்திலும் அவற்றையே எழுதத் தொடங்கி
விடுகிறார்கள். குறள் சமணம் சார்ந்தது என்றால், இந்தக்
குறளுக்கு என்ன பொருள் சொல்வார்கள் என்பது மாதிரி
கேட்கவும் தொடங்கிவிடுகிறார்கள். யாரும் அந்த குறளின்
விளக்கம்ப் பொருத்தமாக இருக்கிறதா? என்று தங்கள் அறிவில்
உரசிப் பார்ப்பதில்லை.
”ஆபயன குன்றும்…” என்றக் குறளுக்கு பரிமேலழகர் உரையைப்
பின்பற்றிச் செல்வதேயிதற்கு காரணம்.
இந்தக் குறள் “கொடுங்கோன்மை” என்ற அதிகாரத்தில் வருகிறது.
அதாவது “செங்கோன்மை” என்ற அதிகாரத்திற்குப் பிறகு
வருகிறது என்பது இங்கு முக்கியம். செங்கோன்மை என்பது
ஒரு அரசன் எவ்வாறு சிறப்பாக ஆட்சி தன் நாட்டை
ஆளவேண்டும் என்பதைச் சொல்லும். அவ்வாறே ஒரு
அரசன் எவ்வாறு முறைத் தவறி ஆட்சிச் செய்யக்கூடாது
என்பதை சொல்கிறது “கொடுங்கோமை” என்ற அதிகாரம்.
ஆபயன்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் – திருக்குறள் (560)
என் கருத்தைப் பார்ப்பதற்கு முன் திருக்குறள் அத்தாரிட்டியாகக்
கருதப்படும் பரிமேலழகர் (: என்ன சொல்கிறார் என்றுப் பார்ப்போம்.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்கரிய அரசன் உயிர்களைக்
காவானாயின்; ஆ பயன் குன்றும் – அறன் இல்லாத அவன்
நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோர் நூல்
மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்து விடுவர்.
ஆபயன்: ஆவாற் கொள்ளும் பயன், அறுதொழிலாவன:
ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும்,
அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பம் என்பன
ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம்
பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும்
அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.
இந்த உரையிலிருந்து நமக்கு தெரியவரும் கருத்துக்கள்:
அரசன் முறையாக ஆட்சிச் செய்யவில்லையென்றால்,
• ஆவினால் (பசுக்களினால்) கிடைக்கக் கூடியப் பயன்கள் கிடைக்காது,
• அறுதொழில் செய்யும் பிராமணர்களின் வேள்விகள் முறையாக நடக்காதாம்,
• முறையான வேள்விகள் நடக்காமையால், மழை பொழியாதாம், மழைப்
பொழியாததால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுமாம் சொல்கிறார் பரிமேலழகர்.
(மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், இந்த உரை பொருத்தமாயிருக்கிறதா??) :-)
எப்படி உரையைச் சுற்றி வளைத்து, திரித்தெழுதியிருக்கிறார்
பாருங்கள். சரி, அந்தக் குறளுக்கு என்னதான் பொருள்?
உண்மை பொருள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
என்பதற்கு,
காவலன் காவான் எனின் – அரசன் முறையாக ஆட்சி செய்து
மக்களை காப்பாற்றாவிட்டால்; ஆபயன் குன்றும் – ஆகின்ற
பயன்கள் குன்றும்/கிடைக்காது; அறுதொழிலோர்
நூல்மறப்பர் – ஆறு தொழில்கள் செய்வோர் தத்தம்
கடமைகள் முறையாக செய்யாமல், நாட்டில் எதுவும்
முறைப்படி இயங்காது என்பதாம்!
தெளிவுரை:
அரசன் நேர்மையாக ஆட்சி செய்யவில்லையென்றால்,
ஆறு தொழில்களான1, வாள், வரைவு, வாணிபம், உழவு,
கல்வி மற்றும் சிற்பம் செய்து காக்கும் ஆறு தொழிலோர்
தமது தொழில் தர்மத்திலிருந்து தவறுவார்கள், அதனால்
அந்தத் தொழில்கள்லிருந்து ஆக கூடியப் பயன்கள்
சென்றடையாது! என்னை?
ஆபயன் – என்பதற்கு பசுவினால் கிடைக்கும் பயன்கள்
என்றுப் பொருள் கொள்ளக் கூடாதா? எனின், ஆப்பயன்
என்று வந்திருந்தால் அவ்வாறுப் பொருள் கொள்ளலாம்.
ஆ+பயன் = ஆப்பயன் என்று ஒற்று மிகுதல் வேண்டும்
என்பது இலக்கண விதி!
காட்டாக: சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில்,
“..கவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்..” – (பாடல் வரி: 199 – 120)
ஆப்பயன் என்று வருவது ஈண்டு நினைத்தற்பாலது!
அறுதொழிலோர் – ஆறு தொழிலோர் என்பது பிராமணர்களைத்
தானேக் குறிக்கும்? குறிக்காது!. இடத்திற்கு ஏற்றாற் போல்
பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் அவ்வாறுப் பொருள்
கொண்டால், அந்தக் குறளின் சிறப்புக் குன்றிப் போகும்!
எவ்வாறெனின்,
அரசன் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும்
காக்க வேண்டுமேயன்றி, ஒருசாராரை மட்டும் (பிராமணர்களை)
காப்பாற்ற அரசாட்சிச் செய்யமாட்டான். அறுதொழிலோன்
என்றிருந்திருந்தால் அது அப்பட்டமாக பிராமணர்களைக்
குறிக்கும் என்று துணிந்துக் கூறலாம். அறுதொழிலோர்
என்பது இங்கு ஆறு தொழில்களை செய்வோரைக் குறிக்கும்.
அறுதொழிலோர் எனபதற்கு ஆறு தொழில் செய்வோர்
என்றுப் பொருள் கொண்டால், அக்குறளுக்கு சிறப்பாக அமைவதோடு
அல்லாமல் நாட்டின் சமூகத்தையும் சேர்த்தே குறித்ததுப் போலாகும்!
என்னை?
மாறாக பரிமேலழகர் உரைக் கூறுவதுபோல் ஒருசாராரை மட்டும்
போற்றுவதாக பொருள் கொள்வதை எந்த நடுநிலையாளனும் ஒப்ப
மாட்டான்! என்ன யான் சொல்வது சரிதானே!
முடிபு:
இது போன்ற குறள்களை வைத்து குறளாசிரியர் உள்ளம் காண
நினைப்பது, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போலவாம்.
குறளாசிரியர் உள்ளம் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே தெள்ள
தெளிவாகத் தெரிந்திருந்தும், இந்த வகையான திரிபு வாதங்கள்
மூலம் வாதிப்பது அறிவுடைமையாகாது!
இரா.பா,
சென்னை.
--------------------------------------------------------------
1 -“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
- ஆதிநாதர்ப் பிள்ளைத்தமிழ்
"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
கருமபூமி என்னும் பேர்கண்ட தொன்றுண்டு நூலில்"
- சூடாமணி நிகண்டு
என் நண்பர் ஒருவர் (மின்தமிழ்க் குழுமத்தில் இருப்பவர்) கீழேக்
கொடுக்கப்பட்டுள்ள இடுகைகளைத் தனி மடலில் குறித்திருந்தார்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18677-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/
http://www.jeyamohan.in/?p=1422
http://www.tamilbrahmins.com/general-discussions/5557-enge-brahmanana-3.html
இந்தச் சுட்டிகளில், “ஆபயன் குன்றும்…” என்ற குறளுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பற்றி என் கருத்தை
பதிய சொன்னார். சமணக் குறளுக்கு அந்தக் குறள் எவ்வாறு
பொருந்தும் என்றும் தனி பதிவிட்டு என் பிளாகில் எழுதுமாறும்
கேட்டிருந்தார்.
இக்குறளை யான் முன்னமே (அகத்தியக் குழுமத்தில்) எதிர்க்
கொண்டிருக்கிறேன். குறள் பற்றிய விவாதத்தில் எவராவது
ஒருவர், இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்ல போக,
அவற்றை அப்படியே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு,
எல்லா வலைப்பக்கத்திலும் அவற்றையே எழுதத் தொடங்கி
விடுகிறார்கள். குறள் சமணம் சார்ந்தது என்றால், இந்தக்
குறளுக்கு என்ன பொருள் சொல்வார்கள் என்பது மாதிரி
கேட்கவும் தொடங்கிவிடுகிறார்கள். யாரும் அந்த குறளின்
விளக்கம்ப் பொருத்தமாக இருக்கிறதா? என்று தங்கள் அறிவில்
உரசிப் பார்ப்பதில்லை.
”ஆபயன குன்றும்…” என்றக் குறளுக்கு பரிமேலழகர் உரையைப்
பின்பற்றிச் செல்வதேயிதற்கு காரணம்.
இந்தக் குறள் “கொடுங்கோன்மை” என்ற அதிகாரத்தில் வருகிறது.
அதாவது “செங்கோன்மை” என்ற அதிகாரத்திற்குப் பிறகு
வருகிறது என்பது இங்கு முக்கியம். செங்கோன்மை என்பது
ஒரு அரசன் எவ்வாறு சிறப்பாக ஆட்சி தன் நாட்டை
ஆளவேண்டும் என்பதைச் சொல்லும். அவ்வாறே ஒரு
அரசன் எவ்வாறு முறைத் தவறி ஆட்சிச் செய்யக்கூடாது
என்பதை சொல்கிறது “கொடுங்கோமை” என்ற அதிகாரம்.
ஆபயன்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் – திருக்குறள் (560)
என் கருத்தைப் பார்ப்பதற்கு முன் திருக்குறள் அத்தாரிட்டியாகக்
கருதப்படும் பரிமேலழகர் (: என்ன சொல்கிறார் என்றுப் பார்ப்போம்.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்கரிய அரசன் உயிர்களைக்
காவானாயின்; ஆ பயன் குன்றும் – அறன் இல்லாத அவன்
நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோர் நூல்
மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்து விடுவர்.
ஆபயன்: ஆவாற் கொள்ளும் பயன், அறுதொழிலாவன:
ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும்,
அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பம் என்பன
ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம்
பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும்
அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.
இந்த உரையிலிருந்து நமக்கு தெரியவரும் கருத்துக்கள்:
அரசன் முறையாக ஆட்சிச் செய்யவில்லையென்றால்,
• ஆவினால் (பசுக்களினால்) கிடைக்கக் கூடியப் பயன்கள் கிடைக்காது,
• அறுதொழில் செய்யும் பிராமணர்களின் வேள்விகள் முறையாக நடக்காதாம்,
• முறையான வேள்விகள் நடக்காமையால், மழை பொழியாதாம், மழைப்
பொழியாததால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுமாம் சொல்கிறார் பரிமேலழகர்.
(மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், இந்த உரை பொருத்தமாயிருக்கிறதா??) :-)
எப்படி உரையைச் சுற்றி வளைத்து, திரித்தெழுதியிருக்கிறார்
பாருங்கள். சரி, அந்தக் குறளுக்கு என்னதான் பொருள்?
உண்மை பொருள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
என்பதற்கு,
காவலன் காவான் எனின் – அரசன் முறையாக ஆட்சி செய்து
மக்களை காப்பாற்றாவிட்டால்; ஆபயன் குன்றும் – ஆகின்ற
பயன்கள் குன்றும்/கிடைக்காது; அறுதொழிலோர்
நூல்மறப்பர் – ஆறு தொழில்கள் செய்வோர் தத்தம்
கடமைகள் முறையாக செய்யாமல், நாட்டில் எதுவும்
முறைப்படி இயங்காது என்பதாம்!
தெளிவுரை:
அரசன் நேர்மையாக ஆட்சி செய்யவில்லையென்றால்,
ஆறு தொழில்களான1, வாள், வரைவு, வாணிபம், உழவு,
கல்வி மற்றும் சிற்பம் செய்து காக்கும் ஆறு தொழிலோர்
தமது தொழில் தர்மத்திலிருந்து தவறுவார்கள், அதனால்
அந்தத் தொழில்கள்லிருந்து ஆக கூடியப் பயன்கள்
சென்றடையாது! என்னை?
ஆபயன் – என்பதற்கு பசுவினால் கிடைக்கும் பயன்கள்
என்றுப் பொருள் கொள்ளக் கூடாதா? எனின், ஆப்பயன்
என்று வந்திருந்தால் அவ்வாறுப் பொருள் கொள்ளலாம்.
ஆ+பயன் = ஆப்பயன் என்று ஒற்று மிகுதல் வேண்டும்
என்பது இலக்கண விதி!
காட்டாக: சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில்,
“..கவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்..” – (பாடல் வரி: 199 – 120)
ஆப்பயன் என்று வருவது ஈண்டு நினைத்தற்பாலது!
அறுதொழிலோர் – ஆறு தொழிலோர் என்பது பிராமணர்களைத்
தானேக் குறிக்கும்? குறிக்காது!. இடத்திற்கு ஏற்றாற் போல்
பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் அவ்வாறுப் பொருள்
கொண்டால், அந்தக் குறளின் சிறப்புக் குன்றிப் போகும்!
எவ்வாறெனின்,
அரசன் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும்
காக்க வேண்டுமேயன்றி, ஒருசாராரை மட்டும் (பிராமணர்களை)
காப்பாற்ற அரசாட்சிச் செய்யமாட்டான். அறுதொழிலோன்
என்றிருந்திருந்தால் அது அப்பட்டமாக பிராமணர்களைக்
குறிக்கும் என்று துணிந்துக் கூறலாம். அறுதொழிலோர்
என்பது இங்கு ஆறு தொழில்களை செய்வோரைக் குறிக்கும்.
அறுதொழிலோர் எனபதற்கு ஆறு தொழில் செய்வோர்
என்றுப் பொருள் கொண்டால், அக்குறளுக்கு சிறப்பாக அமைவதோடு
அல்லாமல் நாட்டின் சமூகத்தையும் சேர்த்தே குறித்ததுப் போலாகும்!
என்னை?
மாறாக பரிமேலழகர் உரைக் கூறுவதுபோல் ஒருசாராரை மட்டும்
போற்றுவதாக பொருள் கொள்வதை எந்த நடுநிலையாளனும் ஒப்ப
மாட்டான்! என்ன யான் சொல்வது சரிதானே!
முடிபு:
இது போன்ற குறள்களை வைத்து குறளாசிரியர் உள்ளம் காண
நினைப்பது, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போலவாம்.
குறளாசிரியர் உள்ளம் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே தெள்ள
தெளிவாகத் தெரிந்திருந்தும், இந்த வகையான திரிபு வாதங்கள்
மூலம் வாதிப்பது அறிவுடைமையாகாது!
இரா.பா,
சென்னை.
--------------------------------------------------------------
1 -“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
- ஆதிநாதர்ப் பிள்ளைத்தமிழ்
"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
கருமபூமி என்னும் பேர்கண்ட தொன்றுண்டு நூலில்"
- சூடாமணி நிகண்டு
Sunday, January 23, 2011
சிலப்பதிகாரத்தில் அந்தணர்
சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள்
பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அந்தணன், அந்தணர் என்ற
சொற்கள் விரவி வருவதைக் காணலாம். திருக்குறளில் அறவாழி
அந்தணன் என்று இறைவனை இறைஞ்சுவார் குறளாசிரியரான
தேவர் பெருமான். அந்தணர்/அந்தணன் என்ற சொற்கள் பல
சமய இலக்கியங்களில் பயின்று வந்தாலும் அவைகள் ஒரே
பொருளில் ஆளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் அந்தணர்/அந்தணன் என்ற சொல்லாட்சி
இன்றைய காலக் கட்டத்தில் ‘அந்தணன்’ அல்லது “அந்தணர்”
என்ற சொல் வைதீகப் பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்
பட்டு வருகிறது. அந்த சொற்கள் பொதுமையாயினும் சமண,
பெளத்த இலக்கியங்களில் அவைகள் சமண/பெளத்தப்
பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு
வந்திருப்பதையும்க் காணலாம்.
இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் மூன்று வகையான
அந்தணர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
1. மாங்காட்டு மறையோன்
2. கோசிகன்
3. மாடல மறையோன்
1. மாங்காட்டு மறையோன்:
காடுகாண் காதையில், கவுந்தியடிகள், கோவலன் மற்றும்
கண்ணகி ஆகியோர் உறையூரை விட்டு நீங்கி ஒரு சோலையின்னுள்
நுழைகின்றனர். அப்போது அங்கிருந்த மண்டபத்தில் மாங்காட்டு
மறையோன் என்ற வயதான வைதிக பிராமணனைச் சந்திக்க
நேரிடுகிறது. அவரை எதிர்க் கொள்ளும் கோவலம் அவனை
வணங்காமல்,
”மாமது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்ஊர்? ஈங்கென் வரவெனக்?
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்..” 1
என்று சற்று அதிகாரத் தொனியிலேயே கேட்கத் துவங்குகிறான்
கோவலன். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில்,
கோவலன், அந்த வயதான மாமது மறையோனை வணங்குவதாக
காட்டவில்லை இளங்கோவடிகள்.
2. கோசிகன் என்ற மறையோன்
உறையூரை விட்டு நீங்கி வெகு தூரம் நடந்து வந்தக் களைப்பினால்,
ஒரு ஊரின் புறமாக அவர்களை தங்க வைத்துவிட்டு தன் காலை
கடனை முடிக்க நீர் நிலையைத் தேடி செல்கிறான் கோவலன்.
அப்போது, மாதவியின் கடிதத்துடன், கோவலனைத் தேடி
எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்த கோசிகன் என்ற
அந்தணன், இவன் கோவலனோ என்று ஐயுற்று வினவ,
அதற்கு மறுமொழிக் கூறும் கோவலன்,
“யாது நீ கூறிய உரையீது?, இங்னெத்..”2
என்று கேட்கிறான். அப்போதும் அவனை வணங்குவதாகக்
காட்டவில்லை இளங்கோவடிகள்.
3. மாடல மறையோன் என்னும் அந்தணன்
அடைக்கலக் காதையில் மாடல மறையோன் என்னும்
அந்தணனைச் சந்திக்கும் கோவலன், உடனே அவன்
அடிப் பணிகிறான்.
“இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடிவணங்க
நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்” 3
மற்ற அந்தணர்களை வணங்குவதாகக் காட்டாத
இளங்கோவடிகள், மாடலன் என்ற அந்தணனை,
கோவலன் அடி வணங்குவதாகக் காட்டுகிறார்?
ஏன்? நிற்க!
அறக்கள வேள்வியும் மறக்கள வேள்வியும்
இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் மூன்றுவித வேள்விகளை
நமக்கு காட்டுகிறார்.
1. மறக்கள வேள்வி
2. மதுக்கொள் வேள்வி
3. அறக்கள வேள்வி
1. மறக்கள வேள்வி
முதல் இரண்டும் வைதிகம் சார்ந்தது. மூன்றாவது அவைதிகச்
சார்பு உடையது. மாடல மறையோன் மூன்றாம் பிரிவினன்.
சேரனுக்கு அறிவுரை வழங்கு மாடலன் அரசே மது,
கொலை உடைய மறக்கள வேள்வி செய்யாதே.
கொலையில்லாத அறக்கள வேள்வி செய் என்று
அறிவுறுத்துகிறான்.
“அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோயாயினை “ 4
என்றும்,
“..அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்..” 5
என்று சேரனுக்கு அறிவுறுத்துகிறான் மாடலன்.
இங்கு சொல்லப்பட்ட அறக்கள வேள்வி யாதுனெனின்,
இது அவைதிகச் சார்புக் கொண்ட வேள்வியாம்.அவைதிகப்
பிரிவினரான சமணர்களுக்கும் வேள்வி உண்டென்றும்,
ஆனால் அது உயிர்ப் பலி மற்றும் மது (சோம பானம்)
இல்லாத வேள்வி என்றும் பெறப்படுகிறது. சமணர்கள்
அந்த வேள்வியை ”ஓமம்” என்று அழைக்கிறார்கள்.
(இன்றும் சமணர்கள் புதுமனை புகுவிழாவில் சாந்திநாத
ஓமம் என்ற வேள்வியைச் செய்கிறார்கள் என்பதைக்
கருதவும்)
மாடலன் மறையோன் சமண அந்தணன்
மூன்று அந்தணர்களைக் குறிக்கும் இளங்கோவடிகள்,
கோவலனை மற்ற இருவரையும் அடிவணங்கச் செய்யாமல்,
மாடலன் மறையோனைக் கண்டவுடன் அடிவணங்கச்
செய்தமை இதன் பொருட்டாம்! என்னை?
நான்மறைகள்
இங்கே வாசகர்களுக்கு ஒரு வினா எழுவது இயல்பே?.
நான்மறை என்பது வைதிக வேதங்களைத் தானேக்
குறிக்கும்? என்றால்..
இல்லை. அவைகள் சமண வேதங்களையும் குறிக்கும்.
சமண இலக்கியங்களில் நான்மறை என்றும் வேதம்
என்ற பதங்கள் விரவி வருவதைக் காணலாம்.
சமண வேதங்கள் நான்கு!
ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
அவை பூர்வாகமம், அங்காகமம் எனப்படும். பூர்வாகமம்
என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால்
எழுதப்பட்டது. ஆதிபகவன் என்று அழைக்கப்படும்
ஆதிநாதரால் அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை
ஜைன வேதங்கள் அல்லது சதுர் வேதங்கள் அல்லது
நான்மறைகள்6 என்றழைக்கப்படுகின்றன. அவைகள்,
1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்
என்பன.
முடிபு:
”அந்தணர் என்போர் அறவோர்”7 என்பது திருக்குறள் வாக்கு.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல், எந்த உயிரையும்
வேள்விகளில் பலி கொடுக்காமல் இருப்பவர்கள் தான்
அந்தணர் என்று திருக்குறள் சொல்வது இங்கு
நினைத்தற்பாலது!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
1. சிலப்பதிகாரம், காடுகாண் காதை, பாடல் 31 - 33
2. சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை, பாடல்: 54
3. சிலப்பதிகாரம், அடைக்கல காதை, பாடல்: 18 - 20
4. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 131 – 132
5. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 177 – 178
6. பதிணென் கீழ்க்கணக்கு, ஏலாதி- கடவுள் வாழ்த்து
” அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு” – பாடல் – 1
7. திருக்குறள், நீத்தார் பெருமை, பாடல் - 30
பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அந்தணன், அந்தணர் என்ற
சொற்கள் விரவி வருவதைக் காணலாம். திருக்குறளில் அறவாழி
அந்தணன் என்று இறைவனை இறைஞ்சுவார் குறளாசிரியரான
தேவர் பெருமான். அந்தணர்/அந்தணன் என்ற சொற்கள் பல
சமய இலக்கியங்களில் பயின்று வந்தாலும் அவைகள் ஒரே
பொருளில் ஆளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் அந்தணர்/அந்தணன் என்ற சொல்லாட்சி
இன்றைய காலக் கட்டத்தில் ‘அந்தணன்’ அல்லது “அந்தணர்”
என்ற சொல் வைதீகப் பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்
பட்டு வருகிறது. அந்த சொற்கள் பொதுமையாயினும் சமண,
பெளத்த இலக்கியங்களில் அவைகள் சமண/பெளத்தப்
பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு
வந்திருப்பதையும்க் காணலாம்.
இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் மூன்று வகையான
அந்தணர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
1. மாங்காட்டு மறையோன்
2. கோசிகன்
3. மாடல மறையோன்
1. மாங்காட்டு மறையோன்:
காடுகாண் காதையில், கவுந்தியடிகள், கோவலன் மற்றும்
கண்ணகி ஆகியோர் உறையூரை விட்டு நீங்கி ஒரு சோலையின்னுள்
நுழைகின்றனர். அப்போது அங்கிருந்த மண்டபத்தில் மாங்காட்டு
மறையோன் என்ற வயதான வைதிக பிராமணனைச் சந்திக்க
நேரிடுகிறது. அவரை எதிர்க் கொள்ளும் கோவலம் அவனை
வணங்காமல்,
”மாமது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்ஊர்? ஈங்கென் வரவெனக்?
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்..” 1
என்று சற்று அதிகாரத் தொனியிலேயே கேட்கத் துவங்குகிறான்
கோவலன். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில்,
கோவலன், அந்த வயதான மாமது மறையோனை வணங்குவதாக
காட்டவில்லை இளங்கோவடிகள்.
2. கோசிகன் என்ற மறையோன்
உறையூரை விட்டு நீங்கி வெகு தூரம் நடந்து வந்தக் களைப்பினால்,
ஒரு ஊரின் புறமாக அவர்களை தங்க வைத்துவிட்டு தன் காலை
கடனை முடிக்க நீர் நிலையைத் தேடி செல்கிறான் கோவலன்.
அப்போது, மாதவியின் கடிதத்துடன், கோவலனைத் தேடி
எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்த கோசிகன் என்ற
அந்தணன், இவன் கோவலனோ என்று ஐயுற்று வினவ,
அதற்கு மறுமொழிக் கூறும் கோவலன்,
“யாது நீ கூறிய உரையீது?, இங்னெத்..”2
என்று கேட்கிறான். அப்போதும் அவனை வணங்குவதாகக்
காட்டவில்லை இளங்கோவடிகள்.
3. மாடல மறையோன் என்னும் அந்தணன்
அடைக்கலக் காதையில் மாடல மறையோன் என்னும்
அந்தணனைச் சந்திக்கும் கோவலன், உடனே அவன்
அடிப் பணிகிறான்.
“இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடிவணங்க
நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்” 3
மற்ற அந்தணர்களை வணங்குவதாகக் காட்டாத
இளங்கோவடிகள், மாடலன் என்ற அந்தணனை,
கோவலன் அடி வணங்குவதாகக் காட்டுகிறார்?
ஏன்? நிற்க!
அறக்கள வேள்வியும் மறக்கள வேள்வியும்
இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் மூன்றுவித வேள்விகளை
நமக்கு காட்டுகிறார்.
1. மறக்கள வேள்வி
2. மதுக்கொள் வேள்வி
3. அறக்கள வேள்வி
1. மறக்கள வேள்வி
முதல் இரண்டும் வைதிகம் சார்ந்தது. மூன்றாவது அவைதிகச்
சார்பு உடையது. மாடல மறையோன் மூன்றாம் பிரிவினன்.
சேரனுக்கு அறிவுரை வழங்கு மாடலன் அரசே மது,
கொலை உடைய மறக்கள வேள்வி செய்யாதே.
கொலையில்லாத அறக்கள வேள்வி செய் என்று
அறிவுறுத்துகிறான்.
“அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோயாயினை “ 4
என்றும்,
“..அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்..” 5
என்று சேரனுக்கு அறிவுறுத்துகிறான் மாடலன்.
இங்கு சொல்லப்பட்ட அறக்கள வேள்வி யாதுனெனின்,
இது அவைதிகச் சார்புக் கொண்ட வேள்வியாம்.அவைதிகப்
பிரிவினரான சமணர்களுக்கும் வேள்வி உண்டென்றும்,
ஆனால் அது உயிர்ப் பலி மற்றும் மது (சோம பானம்)
இல்லாத வேள்வி என்றும் பெறப்படுகிறது. சமணர்கள்
அந்த வேள்வியை ”ஓமம்” என்று அழைக்கிறார்கள்.
(இன்றும் சமணர்கள் புதுமனை புகுவிழாவில் சாந்திநாத
ஓமம் என்ற வேள்வியைச் செய்கிறார்கள் என்பதைக்
கருதவும்)
மாடலன் மறையோன் சமண அந்தணன்
மூன்று அந்தணர்களைக் குறிக்கும் இளங்கோவடிகள்,
கோவலனை மற்ற இருவரையும் அடிவணங்கச் செய்யாமல்,
மாடலன் மறையோனைக் கண்டவுடன் அடிவணங்கச்
செய்தமை இதன் பொருட்டாம்! என்னை?
நான்மறைகள்
இங்கே வாசகர்களுக்கு ஒரு வினா எழுவது இயல்பே?.
நான்மறை என்பது வைதிக வேதங்களைத் தானேக்
குறிக்கும்? என்றால்..
இல்லை. அவைகள் சமண வேதங்களையும் குறிக்கும்.
சமண இலக்கியங்களில் நான்மறை என்றும் வேதம்
என்ற பதங்கள் விரவி வருவதைக் காணலாம்.
சமண வேதங்கள் நான்கு!
ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
அவை பூர்வாகமம், அங்காகமம் எனப்படும். பூர்வாகமம்
என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால்
எழுதப்பட்டது. ஆதிபகவன் என்று அழைக்கப்படும்
ஆதிநாதரால் அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை
ஜைன வேதங்கள் அல்லது சதுர் வேதங்கள் அல்லது
நான்மறைகள்6 என்றழைக்கப்படுகின்றன. அவைகள்,
1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்
என்பன.
முடிபு:
”அந்தணர் என்போர் அறவோர்”7 என்பது திருக்குறள் வாக்கு.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல், எந்த உயிரையும்
வேள்விகளில் பலி கொடுக்காமல் இருப்பவர்கள் தான்
அந்தணர் என்று திருக்குறள் சொல்வது இங்கு
நினைத்தற்பாலது!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
1. சிலப்பதிகாரம், காடுகாண் காதை, பாடல் 31 - 33
2. சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை, பாடல்: 54
3. சிலப்பதிகாரம், அடைக்கல காதை, பாடல்: 18 - 20
4. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 131 – 132
5. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 177 – 178
6. பதிணென் கீழ்க்கணக்கு, ஏலாதி- கடவுள் வாழ்த்து
” அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு” – பாடல் – 1
7. திருக்குறள், நீத்தார் பெருமை, பாடல் - 30
Subscribe to:
Posts (Atom)